என் மலர்
நீங்கள் தேடியது "யமுனை"
- தாயை கொன்று, அவரது உடலை யமுனை ஆற்றின் கரையில் அப்புறப்படுத்த முயன்றுள்ளார் ஹிமான்சு
- ஹிமான்சுவினுடைய தாயின் உடலை யமுனை ஆற்றில் இருந்து காவல்துறையினர் மீட்டெடுத்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் படேக்பூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் ₹4 லட்சம் வரை கடன் வாங்கிய ஹிமான்சு என்ற நபர், காப்பீடு பணம் கிடைக்கும் என்பதால் தாயைக் கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
ஹிமான்சு என்ற நபர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். குறிப்பாக அவர், ஸுபி (Zupee) என்ற செயலியில் சூதாட்டம் விளையாடி தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளார். இதன் விளைவாக நண்பர்களிடம் அவர் 4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதன்பின் நண்பர்கள், இவரிடம் கடன் தொகையை திருப்பி தரும்படி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அவரது தந்தை பக்கத்தில் உள்ள அனுமான் கோயிலில் வழிபாடு நடத்த சென்றிருந்த நேரத்தில், தாயை கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது உடலை யமுனை ஆற்றின் கரையில் அப்புறப்படுத்த முயன்றுள்ளார் ஹிமான்சு.
இது தொடர்பாக ஹிமான்சுவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம், "தனது உறவினர் வீட்டில் நகை திருடிய ஹிமான்சு, அதன் மூலம் தனது பெற்றோருக்கு ₹50 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு வாங்கியதாகவும், அதனை பெறுவதற்காக தாயை கொலை செய்து அவரது உடலை யமுனை ஆற்றில் வீசியதாகவும்" அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 21-ம் தேதி ஹிமான்சுவினுடைய தாயின் உடலை யமுனை ஆற்றில் இருந்து காவல்துறையினர் மீட்டெடுத்தனர்.
- டெல்லியின் காற்று மாசு அளவு 293 என்ற மோசமான நிலைக்கு வந்துள்ளது.
- தோல் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
காற்று மாசு பிரச்னையால் திணறி வரும் தலைநகர் டெல்லியின் சூழல் நாளுக்குநாள் கடுமையாகி வருகிறது. இன்றைய தினம் [வெள்ளிக்கிழமை] டெல்லியின் காற்று மாசு அளவு 293 என்ற மோசமான நிலைக்கு வந்துள்ளது. டெல்லியில் பாயும் யமுனை நதியில் பனிப்படலம் போன்று ரசாயனங்கள் நுரைகளாக உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. காலிந்தி கஞ்ச் பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் காணப்பட்ட இந்த காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நீரில் உருவாகியுள்ள நுரையில் அமோனியா மற்றும் பாஸ்பேட் அளவு அதிகம் உள்ளதால் மக்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் தோல் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே காற்று மாசு காரணமாக பாஜக செய்தி தொடர்பாளர் பூனாவாலா கேஸ் மாஸ்க் அணிந்து ஊடகத்துக்கு பேட்டியளித்த வீடியோவும் வைரலாகி வருகிறது. காற்று மாசை தடுக்க கடந்த டெல்லியில் பட்டாசு வெடிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- யமுனை நதியில் பாஜகவின் டெல்லி மாநில தலைவர் விரேந்தர் சச்சுதேவ் குளித்து வழிபாடு நடத்தினார்.
- அவருக்கு சுவாச கோளாறு மற்றும் உடல் அரிப்பும் தோல் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.
மிகவும் அசுத்தமான யமுனை நதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு குளித்து வழிபாடு நடத்திய பாஜகவின் டெல்லி மாநில தலைவர் விரேந்தர் சச்சுதேவ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாச கோளாறு மற்றும் உடல் அரிப்பும் தோல் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள யமுனை நதி கடுமையாக மாசடைந்துள்ளதற்கு ஆம் ஆத்மி அரசு தான் காரணம் என்று கூறி டெல்லி பாஜக தலைவர் விரேந்தர் சச்சுதேவ் யமுனை நதிக்கரையில் நீராடினார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விரேந்தர் சச்சுதேவ், "யமுனை நதியை சுத்தம் செய்ய மத்திய அரசு வழங்கிய 8,500 கோடி ரூபாய்க்கு ஆம் ஆத்மி அரசு கணக்கு காட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.
சச்தேவா குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான சவுரப் பரத்வாஜ், "டெல்லி நகரத்தின் யமுனை நதிக்கரையில் எந்த தொழிற்சாலைகளும் இல்லை. அரியானாவில் உள்ள பானிபட் மற்றும் சோனிபட் வடிகால்களில் இருந்து தான் தொழிற்சாலை கழிவுகள் யமுனை நதியில் கலக்கிறது. டெல்லி பாஜக தலைவர் அரியானா அரசாங்கத்துடன் பேசி சோனிபட் மற்றும் பானிபட் ஆகியவற்றிலிருந்து தொழிற்சாலை கழிவுகளை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
- அவர் தனது அமைச்சர்களுடன் யமுனையில் சென்று குளிக்க முடியுமா?
- கெஜ்ரிவாளுக்கு சவால் விடுத்த யோகி ஆதித்யநாத்துக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்
டெல்லியில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியைப் பிடிக்க அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை நிலவி வருகிறது.
கெஜ்ரிவால், ராகுல் காந்தி ஆகியோர் தத்தமது கட்சிகளுக்காகச் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாஜக அண்டை மாநிலமாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை டெல்லி களத்தில் இறக்கிவிட்டுள்ளது.
டெல்லியின் கிராரி பகுதியில் தனது முதல் பேரணியில் நேற்று உரையாற்றிய யோகி ஆதித்யநாத், " ஒரு முதலமைச்சராக நானும் எனது அமைச்சர்களும் பிரயாக்ராஜில் [மகா கும்பமேளா] [திரிவேணி] சங்கத்தில் நீராட முடிந்தது.

அதே போல டெல்லியில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை நான் கேட்க விரும்புகிறேன், அவர் தனது அமைச்சர்களுடன் யமுனையில் சென்று குளிக்க முடியுமா? என்று சவால் விடுத்தார். புனித யமுனையை அழுக்கு வாய்க்காலாக மாற்றி கெஜ்ரிவால் பாவம் செய்துள்ளார் என யோகி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் கெஜ்ரிவாளுக்கு சவால் விடுத்த யோகி ஆதித்யநாத்துக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மற்றவர்களுக்கு சவால் விடுபவர்கள் தங்கள் மாநிலத்தில் [உத்தரப் பிரதேசத்தில்] உள்ள மதுரா வழியாக பாயும் யமுனை நீரை குடிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் .

கடந்த சில ஆண்டுகளாக டெல்லியில் யமுனை முக்கிய அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. அதன் கடுமையான மாசுபாடு காரணமாக அதை சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும் என்ற குரல்கள் வலுப்பெற்று வருகிறது.
முன்னதாக கெஜ்ரிவால் யமுனையை சுத்தம் செய்யவும், நதிகளின் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்கவும் பல வாக்குறுதிகளை அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

- யமுனை ஆற்றை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட 7,500 கோடி ரூபாய் பணம் எங்கே?
- கருப்பு நிறத்தில் உள்ள தண்ணீரில் குழிக்க முடியுமா?. வாய்ப்பு இருந்தால் குடிக்க முடியுமா? என கேட்க விரும்புகிறோம்.
டெல்லி மாநிலத்திற்கு குடிநீர் வழங்கும் யமுனை ஆற்று நீரில் ஹரியானா அரசு விஷம் கலந்ததாக கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கெஜ்ரிவாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையம் கெஜ்ரிவாலிடம் விளக்கம் கேட்டது. இதற்கிடையே யமுனை நதி மிகவும் மாசடைந்துள்ளதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அரசுதான் காரணம் என டெல்லி மாநில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் பூர்வாஞ்சல் பகுதி பெண்களுடன் யமுனை நதி நீரை பாட்டிலில் அடைத்து கெஜ்ரிவால் வீட்டின் முன் போராட்டம் நடத்த முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை யமுனை நதிக்கு சென்று பாட்டிலில் தண்ணீர் பிடித்து, கெஜ்ரிவால் வீட்டை நோக்கி சென்றனர். வீட்டருகே சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
கொண்டு சென்ற தண்ணீரை ஒரு இடத்தில் கொட்டி இதில் கெஜ்ரிவால் குழிப்பாரா? அல்லது தண்ணீரை குடிப்பாரா? என கேள்வி எழுப்பினர்.
கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்னதாக ஸ்வாதி மாலிவால் கூறியதாவது:-
கெஜ்ரிவாலால் யமுனை ஆறு மாசடைந்த வடிகால் ஆக மாறிவிட்டது. நான் ஆயிரக்கணக்கான பூர்வாஞ்சல் பெண்களுடன் யுமுனை நதி கரையோரத்திற்கு வந்துள்ளேன். இங்குள்ள நிலை மிகவும் மோசமாக உள்ளது. துர்நாற்றத்தால் எங்களால் இங்கே நிற்க முடியாமல் தவித்து வருகிறோம்.
நான் மற்றும் பூர்வாஞ்சல் பெண்கள் கெஜ்ரிவால் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். யமுனை ஆற்றை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட 7,500 கோடி ரூபாய் பணம் எங்கே? என்பது குறித்து கேள்வி எழுப்ப இருக்கிறோம்.
அவரை பார்த்து நாங்கள் யமுனை ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட கருப்பு நிறத்தில் உள்ள தண்ணீரில் குழிக்க முடியுமா?. வாய்ப்பு இருந்தால் குடிக்க முடியுமா? என சவால்விட இருக்கிறோம்" என்றார்.