என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹேக்"

    • குஷ்புவின் எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது
    • எக்ஸ் தள பக்கத்தை மீட்க முயற்சி செய்து வருவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஷ்பு பதிவு

    நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக குஷ்புதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "X தளத்தில் எனது இ-மெயில் முகவரியை ஹேக்கர்கள் மாற்றியுள்ளனர். X தள பக்கம் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ளது
    • மின்சார கிரிட்-களை நாசமாக்கிய குற்றத்திற்காக "கைது வாரண்ட்" பிறப்பிக்கப்பட்டுள்ளது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. ரஷியாவை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு போரிட்டு வருகிறது.

    இப்பின்னணியில், பல்வேறு போர் குற்றங்கள் புரிந்ததாக ரஷிய ராணுவ அதிகாரிகள் மீது நெதர்லாந்து நாட்டின் ஹேக் (Hague) நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) வழக்கு நடைபெற்றது.

    இந்நிலையில், ரஷிய நீண்ட தூர ராணுவ விமான சேவையின் தலைவரான செர்ஜி கொபிலாஷ் (Sergei Kobylash) மற்றும் கருங்கடல் படை (Black Sea Fleet) ஆணையர் விக்டர் சொகோலோவ் (Viktor Sokolov) ஆகிய இருவரும் 2022 அக்டோபர் தொடங்கி 2023 மார்ச் வரையிலான காலகட்டத்தில், உக்ரைன் நாட்டின் மின்சார கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் பல மின்சார உற்பத்தி கிரிட்-களை முற்றிலும் நாசமாக்கிய குற்றத்திற்காக ஐசிசி (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    மின் கட்டமைப்பை நேரில் கண்டறிய நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் கரிம் கான் (Karim Khan) உக்ரைனுக்கு சென்று ஆய்வு செய்து அளித்த அறிக்கையின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) ரஷியா உறுப்பினர் இல்லை.

    எனவே, குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரையும் விசாரணைக்காக சர்வதேச நீதிமன்றத்தின் வசம் ரஷியா ஒப்படைக்காது என தெரிகிறது.


    இந்த தீர்ப்பை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) வரவேற்றுள்ளார்.

    கடந்த வருடம், ஐசிசி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) மற்றும் வேறொரு அதிகாரி ஆகியோர், உக்ரைனிலிருந்து அந்நாட்டு சிறுவர்களை ரஷியாவிற்கு கடத்தியதாக குற்றம் சுமத்தி "வாரண்ட்" பிறப்பித்தது.

    ஆனால், இதனை புறக்கணித்த ரஷியா, பதிலடியாக சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், அரசு வழக்கறிஞருக்கும் "வாரண்ட்" பிறப்பித்தது.

    நாடுகளுக்கிடையேயான சச்சரவுகள் குறித்து விசாரிக்கும் ஐ.நா.வின் அங்கமான சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) வேறு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வேறு என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசுத் துறைகளில் ஊழல் மற்றும் லஞ்சம் என்பது அதிகளவில் நடக்கிறது.
    • சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்கிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    மக்கள் தங்களுக்கு தேவையான பல திட்டங்களை அரசுத்துறைகளின் மூலமாகவே பெறவேண்டி இருக்கிறது. இதனால் அரசுத் துறைகளில் ஊழல் மற்றும் லஞ்சம் என்பது அதிகளவில் நடக்கிறது. அதனைத்தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் லஞ்சம் பெறுவது நடந்தபடியே இருக்கிறது.

    அரசுத்துறைகளில் பணிபுரியக்கூடியவர்களில் இதுபோன்று லஞ்சம் வாங்கு பவர்கள் தங்களின் பதவி மற்றும் பணிக்கு தகுந்தாற்போல் சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்கிறார்கள். இந்தநிலையில் கேரள மாநிலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊழலில் ஈடுபடுவதையும், லஞ்சம் வாங்குவதையும் தடுக்க லஞ்ச ஒழிப்பு துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

    தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சிக்க வைப்பதற்காக, அவர்களது செல்போன் உரையாடல்களை காவல்துறை, உளவுத்துறை மற்றும் குற்றப்பிரிவினர் ஒட்டு கேட்கின்றனர்.

    அந்த கோரிக்கையை தான் கேரள லஞ்ச ஒழிப்புத்துறை மாநில அரசிடம் கேட்டுள்ளது. கேரள மாநில லஞ்ச ஒழிப்பு துறையின் தலைமை டி.ஜி.பி. யோகேஷ் குப்தா தான் அந்த கோரிக்கையை மாநில அரசிடம் வைத்துள்ளார்.

    அதாவது கேரள மாநி லத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செல்போன்களை லஞ்ச ஒழிப்பு துறை "ஹேக்" செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது தான் அவரது கோரிக்கையாக இருக்கிறது.

    இதன் மூலமாக ஊழலில் ஈடுபடும் மற்றும் லஞ்சம் வாங்கக்கூடிய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை வழக்கில் சிக்க வைக்க முடியும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை கேரள மாநில அரசிடம் தெரிவித்திருக்கிறது.

    லஞ்ச ஒழிப்பு துறை டி.ஜி.பி.யின் இந்த கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி வழங்கினால், அரசின் முன் அனுமதியின்றி யாருடைய போனையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் 7 நாட்களுக்கு "ஹேக்" செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×