என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ அதிகாரிகள்"

    • பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை போஸ்ட் மீது மோதினர்.
    • நடவடிக்கையின் போது, ஆறு பயங்கரவாதிகளையும் சுட்டு கொன்றனர்.

    ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இன்று 6 பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தியதில் இரண்டு அதிகாரிகள் உட்பட குறைந்தது ஏழு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஒரு கேப்டன் உள்பட ஐந்து வீரர்களுடன் கொல்லப்பட்டனர். மிர் அலி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் தாக்குதல் நடத்திய 6 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதுகுறித்து ஐஎஸ்பிஆர் அறிக்கையின்படி," பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை போஸ்ட் மீது மோதியதாகவும், அதைத் தொடர்ந்து பல தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடந்தன.

    அதைத் தொடர்ந்து நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையின்போது ஆறு பயங்கரவாதிகளையும் சுட்டு கொல்லப்பட்டனர்".

    பயங்கரவாத தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் சையத் காஷிப் அலி மற்றும் கேப்டன் முகமது அகமது பதார் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 2023-ம் ஆண்டு நினைவுத்தூண் அமைக்கப்பட்டது.
    • புகைப்படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    ஊட்டி:

    இந்திய ராணுவ முப்படைத்தளபதியாக இருந்த பிபின்ராவத் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.

    அப்போது குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் மோசமான வானிலை மற்றும் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின்ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பலியானார்கள்.

    இந்த நிலையில் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளான பகுதியில் வெலிங்டன் ராணுவ மையம் சார்பில் கடந்த 2023-ம்ஆண்டு நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. இதில் பிபின்ராவத் உள்ளிட்ட உயிரிழந்த 14 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    மேலும் அந்த நினைவுத்தூணில் ஆன்மா அழியாதது, அதனை எந்த ஆயுதத்தாலும் துளைக்க முடியாது, எந்த நெருப்பாலும் அழிக்க முடியாது. தண்ணீராலும் ஈரப்படுத்த முடியாது, காற்றாலும் உலரப்படுத்த முடியாது என்ற பகவத்கீதையின் வாசகங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பிபின்ராவத் உள்ளிட்டோரின் 3-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ராணுவத்தினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அப்போது குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமான்டண்ட் வீரேந்திரவாட்ஸ் பிபின்ராவத் உள்ளிட்டோரின் புகைப்படங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த புகைப்படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களும் திரண்டு வந்து ஹெலிகாப்டர் விபத்தில் பலியான வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர்.

    ×