என் மலர்
நீங்கள் தேடியது "டி சர்ட்"
- பாராளுமன்ற தேர்தல் என்றாலும் 234 சட்டமன்ற சபை தொகுதிகள் வாரியாக பிரசார கூட்டம், தெருமுனை பிரசாரம் மற்றும் தேர்தல் பணி மேற்கொள்ளப்படும்.
- கட்சி சின்னம்,கொடி, பெயர் மற்றும் தலைவர் படங்களுடன் டி-சர்ட் மற்றும் தொப்பிகள் தயாரிக்க ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர்.
திருப்பூர்:
தேர்தல்களின்போது அரசியல் கட்சி பெயர்களில் டி-சர்ட் தயாரிப்பது வழக்கம். தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் நடைபெறும் பிரசார பயணங்களுக்கு தேவையான டி-சர்ட்கள் திருப்பூரில் கொள்முதல் செய்யப்படும்.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற கட்சியினர் மாநிலம் முழுவதும் பயன்படுத்த திருப்பூர் கட்சியினர் மூலம் ஆர்டர் கொடுத்து தயாரிப்பார்கள்.
தற்போது தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளனர். இதையடுத்து திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பிரசாரத்திற்காக தயாரிக்கப்பட்டு இருந்த பனியன்களில் கட்சி கொடி, சின்னம், தலைவர் படங்கள் அச்சிடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து பனியன் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் என்றாலும் 234 சட்டமன்ற சபை தொகுதிகள் வாரியாக பிரசார கூட்டம், தெருமுனை பிரசாரம் மற்றும் தேர்தல் பணி மேற்கொள்ளப்படும். கட்சி சின்னம்,கொடி, பெயர் மற்றும் தலைவர் படங்களுடன் டி-சர்ட் மற்றும் தொப்பிகள் தயாரிக்க ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே பிரசாரத்திற்கு தேவையான பனியன்கள் வெள்ளை உள்ளிட்ட கலர்களில் தயாரித்து வைத்து விட்டோம். தற்போது அதில் சின்னம், கொடி, தலைவர் படங்கள் அச்சடிக்கும் பணிகள் நடைபெறுகிறது. 2, 3 நாட்களில் இந்த பணிகள் முடிந்து விடும். தயாரான பனியன்கள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அ.தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் பாலுசாமி ஆகியோர் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர்.
- நீதிபதிகள், ஒரே விவகாரத்தில் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, தி.மு.க.வின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட டி.சர்ட் அணிந்து வருவதாகவும், இது தலைமைச் செயலக ஊழியர்கள் ஆடை கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிராக உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில், சத்தியகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் நிலுவையில் இருந்து வருகிறது.
இதே விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் பிரவீண் சமாதானம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் பாலுசாமி ஆகியோர் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஒரே விவகாரத்தில் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெயபிரகாஷ் நாராயணன், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் கோரிக்கையும், இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள கோரிக்கையும் வெவ்வேறானது என்றார்.
அதற்கு நீதிபதிகள், இந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டு, டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ள வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக சேர்ந்துக் கொள்ளலாமே? என்று கருத்து தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்டு வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்குகளை திரும்ப பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- அக்ஷய் என்பவர் ரூ.300 மதிப்புள்ள டி-சர்ட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
- இதில் அக்ஷயின் அண்ணனும் தலையிட்டு சுபம் உடன் வாக்குவாதம் செய்துள்ளார்
மகாராஷ்டிராவில், 300 ரூபாய் மதிப்புள்ள டி-சர்ட்டால் ஏற்பட்ட தகராறில், சகோதரர்கள் இருவர் தங்கள் நண்பரைக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாக்பூரில் உள்ள சாந்தி நகர் பகுதியில் வசித்து வரும் அக்ஷய் என்பவர் ரூ.300 மதிப்புள்ள டி-சர்ட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
ஆனால் அது தனக்கு பொருந்தவில்லை என கூறி தனது நண்பன் சுபம் -இடம் நேற்று முன் தினம் [ஞாயிற்றுக்கிழமை] விற்க முயன்றுள்ளார். ஆனால் ரூ. 300 கொடுத்து அதை சுபம் வாங்க மறுத்துள்ளார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் அக்ஷயின் அண்ணனும் தலையிட்டு சுபம் உடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் டி-சர்ட்டுக்கான ரூ.300 பணத்தை அக்ஷய் மீது சுபம் தூக்கி வீசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்ஷய் மற்றும் அவரது அண்ணன் இருவரும் சேர்ந்து சுபம் உடைய கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் இரண்டு சகோதரர்களும் குடிபோதையில் இருந்ததை காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இருவருக்கும் குற்றப் பின்னணி இருப்பதாக ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார். சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுபமின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.