என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆணுறை"

    • ஒலிம்பிக் போட்டியின் போது வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளில் தங்குவார்கள்.
    • 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கின் போது கொரோனா பரவல் காரணமாக உடல்ரீதியான தொடர்பை தவிர்க்கும்படி போட்டி அமைப்பாளர்கள் அறிவுறுத்தினர்.

    பாரீஸ்:

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடக்கிறது. 200 நாடுகளை சேர்ந்த ஏறக்குறைய 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தொடக்க விழாவை செயின் நதியில் நடத்த போட்டி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அதாவது தொடக்க விழாவின் முக்கிய அம்சமான வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு படகில் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் படகில் 6 கிலோமீட்டர் தூரம் ஈபிள் கோபுரம் நோக்கி பயணிக்க இருக்கிறார்கள். 45 நிமிடங்கள் படகு அணிவகுப்பை பார்க்கலாம். ஒலிம்பிக் வரலாற்றில் தொடக்க விழா ஸ்டேடியத்திற்கு வெளியே நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    ஒலிம்பிக் போட்டியின் போது வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளில் தங்குவார்கள். எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக 1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக்கில் இருந்து ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறையை வைக்கும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கின் போது கொரோனா பரவல் காரணமாக உடல்ரீதியான தொடர்பை தவிர்க்கும்படி போட்டி அமைப்பாளர்கள் அறிவுறுத்தினர்.

    இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்த விஷயத்தில் தடை எதுவும் கிடையாது. வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில் சிரமமின்றி கிடைக்கும் வகையில் 3 லட்சம் ஆணுறை வரை வைக்கப்பட இருப்பதாக ஒலிம்பிக் கிராமத்தின் இயக்குனர் லாரென்ட் மிசாட் கூறியுள்ளார்.

    ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் விநியோகிக்கப்பட்ட ஆணுறைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. "1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் ஆணுறைகள் 50,000 ஆகவும், 2008-ல் பெய்ஜிங்கில் 100,000 ஆகவும், 2012-ல் லண்டனில் 150,000 ஆகவும் உயர்ந்தது

    தென் கொரியாவில் 1988 சியோல் கோடைகால ஒலிம்பிக்கில் ஆணுறைகள் முதலில் வழங்கப்பட்டன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதுவரை கேண்டீன் ஊழியர்கள் இருவர் கைது.
    • ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தின் கேண்டீனில் சமோசாவில் ஆணுறை, கற்கள், புகையிலை, குட்கா போன்ற பொருட்கள் அடைத்து விற்பனை செய்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த மார்ச் 27-ம் தேதி இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதுவரை கேண்டீன் ஊழியர்களான பெரோஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின்படி, ஒரு தொழிலதிபர் இந்த கொடூரமான செயலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

    குற்றம்சாட்டப்படும் தொழிலதிபரின் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதை அடுத்து, நிறுவனத்துடனான கேட்டரிங் ஒப்பந்தத்தை நாசப்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆணுறை பயன்படுத்துவது குறைந்து வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது.
    • கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது.

    உலக சுகாதார மையம் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், ஐரோப்பாவில் கடந்த பத்து ஆண்டு காலக்கட்டத்தில் உடலுறவில் ஈடுபாடு கொண்ட இளைஞர்கள் ஆணுறை பயன்படுத்துவது பெருமளவுக்கு குறைந்து வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது.

    அரசாங்கங்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் இந்த நிலை பேராபத்தை ஏற்படுத்திவிடும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுக் குறித்து ஐரோப்பியாவை சுற்றியுள்ள 53 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

    இந்தக் கருத்துக் கணிப்பில் உடலுறவு நாட்டம் கொண்ட ஆண்களிடையே 2014 ஆம் ஆண்டு 70 சதவீதத்தில் இருந்த ஆணுறை பயன்பாடு 2022 ஆம் ஆண்டு 61 சதவீதமாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதேக் காலக்கட்டத்தில் பெண்கள் உடலுறவின் போது பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றுவது 63 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக குறைந்துள்ளது.

    மூன்றில் ஒரு பங்கு இளம் பருவத்தினர் கடைசியாக உடலுறவு கொண்ட போது ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் எதையும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது.

    இந்த ஆய்வைத் தொடர்ந்து அரசுகள், கல்வியாளர்கள் மற்றும் சுகாதார துறையை சேர்ந்தவர்கள் பாலியல் தொடர்பான கல்வியில் முதலீடுகளை அதிகப்படுத்தவும், பாலியல் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • கருத்தடை என்பது கர்ப்பத்தை கருவுறுதலை தடை செய்வது.
    • தம்பதியர்கள் பலரும் கருத்தடை குறித்து தெரித்துகொள்ள வேண்டும்.

    கருத்தடை என்பது கர்ப்பத்தை கருவுறுதலை தடை செய்வது. குழந்தைப்பேறு வேண்டாம் என்று சில காலத்துக்கு தள்ளிபோடும் தம்பதியர்கள் பலரும் கருத்தடை குறித்து தெரித்துகொள்ள வேண்டும்.


    கருத்தடை மாத்திரைகள்

    பெண்கள் கருத்தரிக்க விரும்பாத நிலையில் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் கருத்தடை மாத்திரைகளை எடுத்துகொள்ளலாம். இந்த மாத்திரைகள் பாதுகாப்பானது. தினமும் இந்த மாத்திரைகள் எடுத்துகொள்ள வேண்டும்.

    ஒரு நாள் தவறினாலும் பலனில்லாமல் போய்விடும். மேலும் மாத்திரைகளை நிறுத்தும் போதும் சுயமாக நிறுத்தாமல் மருத்துவரின் ஆலோசனையோடு தான் நிறுத்த வேண்டும். ஏனெனில் இது சுழற்சி முறை என்பதால் குறிப்பிட்ட நாட்கள் வரை போட்ட பிறகு தான் நிறுத்த வேண்டும்.

    இல்லையெனில் ஹார்மோன் சுழற்சியில் மாற்றம் உண்டாகக் கூடும். பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் எப்போதும் பாதுகாப்பானவை. இவை பக்க விளைவை உண்டாக்காது.


    ஆணுறை

    ஆண்கள் பயன்படுத்தும் கருத்தடை சாதனங்களில் மிக முக்கியமானது. கருவுறுதலை தடுக்கும் வழிமுறைகளில் இது முக்கியமானது. பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளை தடுக்கும் நிலையில் இது சரியான தேர்வாக இருக்கும்.

    ஆணுறை பயன்படுத்துவதும் எளிது என்பதால் கருத்தடைக்கு ஆணுறை சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் ஆணுறை அணியும் போது இருவருக்குமே பாதுகாப்பு. இது பாலியல் தொற்று நோய் உண்டாகாமலும் தடுக்கும்.

    பெண் ஆணுறை

    ஆண்களை போன்றே பெண்களுக்கும் பெண் ஆணுறை உண்டு. இது யோனிக்குள் செலுத்தப்படக்கூடியது. ஆண் ஆணுறைகள் உடலுறவுக்கு பிறகு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

    ஆனால் பெண் ஆணுறைகள் கடினமானது அல்ல. இது ஈரப்பதமானாலும் சிதையாது. மெல்லிய பொருள்களால் தயாரிக்கப்படும் பெண் ஆணுறைகள் ஆண்களின் விந்தணுக்களை உள்ளே செல்லாமல் தடுக்கும்.

    பெண்களின் உடல் எடைக்கேற்ப பல்வேறு அளவுகளில் இவை கிடைக்கிறது. பெண் ஆணுறையின் இரண்டு பக்கமும் வளையப்பகுதி இருக்கும். ஒரு பக்கத்தில் முனை நகராமல் இருக்கும் படியும் மற்றொரு முனையானது யோனிக்குள் செல்லும் வரையிலும் இருக்கும்.

    இதை டேம்பன் போல் பொருத்திகொள்ளலாம். பெண் ஆணுறை குறித்த விழிப்புணர்வு நம் நாட்டில் குறைவாக தான் உள்ளது. இதை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சரியான முறையில் பயன்படுத்துவது அவசியம்.

    கருத்தடை கிரீம்கள்

    ஆண்களின் விந்தணுக்களை அழிக்ககூடிய ரசாயனங்கள் கலந்த கிரீம் வகைகள், ஜெல்லிகள், களிம்புகள், மாத்திரைகள் கிடைக்கிறது. இதை பெண் உறுப்பில் கர்ப்பபையின் வாய்ப்பகுதியில் தடவிக் கொள்ள வேண்டும்.

    இதனால் ஆண்களின் விந்தணுக்கள் உறவின் போது பெண் உறுப்புக்குள் செல்லாமல் தடுக்கப்படுகிறது. இதனால் கரு உருவாகாமல் தடுக்கப்படுகிறது.

    துரதிஷ்டவசமாக இவை கரு உருவாவதை நிச்சயம் தடுத்துவிடும் என்று சொல்லமுடிவதில்லை. பயன்படுத்தும் முறை, அதன் நேரம் இவற்றில் அறியாமல் செய்யும் தவறு கூட கருவுறுதலை மேம்படுத்திவிடுகிறது.


    கருத்தடை ஊசி

    இது புரொஜெஸ்டிரான் ஹார்மோனில் தயாரிக்கப்பட்ட மருந்து. இது ஊசியாக பயன்படுத்தப்படுகீறது. இதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போட்டுகொள்ள வேண்டும். எனினும் இதை தொடர்ந்து வருடக்கணக்காக பயன்படுத்த முடியாது. ஏனெனில் இது மாதவிலக்கை சீரற்று ஆக்கும். எலும்புகளையும் பலவீனமாக்கிவிடும்.


    காப்பர் டி

    கர்ப்பபைக்குள் பதிவிடப்படும் லூப் போன்ற கருத்தடை சாதனம். செம்பு கலந்த காப்பர் டி போன்ற மற்றொரு சாதனம், ஹார்மோன் கலந்த (LNG) என உங்கள் உடலுக்கு தேவையான ஒன்றை மருத்துவரின் ஆலோசனையோடு நீங்கள் பொருத்திகொள்ள வேண்டும். மாதவிலக்கு முடிந்ததும் கர்ப்பபைக்குள் இதை பொருத்தி கொள்ள வேண்டும்.

    பிரசவத்துக்கு பிறகு இதை பொருத்துவதாக இருந்தால் இரண்டு மாதங்களுக்கு பிறகு இதை பொருத்துவார்கள். எனினும் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் உரிய இடைவேளையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது இடம் மாறிவிட்டால் உடனடியாக வேறு மாற்றும்படி அறிவுறுத்துவார்கள்.

    • புத்தாண்டு கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறை மற்றும் ORS கரைசலை பப் நிர்வாகம் அனுப்பியுள்ளது.
    • பப் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் உள்ள பப் ஒன்றில் இருந்து புத்தாண்டு கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறை சேர்த்து அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,

    புத்தாண்டு கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறை மற்றும் ORS கரைசலை பப் நிர்வாகம் அனுப்பியுள்ளது.

    இதனை அடுத்து, பப் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி புனே காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமாரிடம் மகாராஷ்டிர பிரதேச இளைஞர் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

    இது தொடர்பாக பேசிய மகாராஷ்டிர பிரதேச இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் அக்ஷய் ஜெயின், "நாங்கள் பப்கள் மற்றும் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இருப்பினும், இளைஞர்களை கவரும் இத்தகைய மார்க்கெட்டிங் உத்தி புனே நகரத்தின் மரபுகளுக்கு எதிரானது. பப் நிர்வாகத்திற்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • நேற்று இரவு 1.2 லட்சம் ஆணுறை பாக்கெட்டுகள் டெலிவரி செய்யப்பட்டதாக Blinkit CEO பதிவிட்டுள்ளார்.
    • ஆண்கள் பெண்களுடன் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதை நிறுத்த வேண்டும்.

    பிரபல பாடகி சின்மயி எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பதிவிட்ட பதிவிற்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

    அந்த எக்ஸ் பதிவில், "நேற்று இரவு 1.2 லட்சம் ஆணுறை பாக்கெட்டுகள் டெலிவரி செய்யப்பட்டதாக Blinkit CEO பதிவிட்டுள்ளார். நேற்று இரவில் பிளிங்கிட்டில் மட்டும். 1.2 லட்சம் மற்ற இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் சந்தையில் 1 கோடி ஆணுறை பாக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கும். இந்த தலைமுறையில் கன்னிப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது அதிர்ஷ்டம் ஆகும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

    இந்த எக்ஸ் பதிவை சின்மயி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஆண்கள் பெண்களுடன் உடலுறவு கொள்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு கன்னிப் பெண்கள் வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    ஆடு, நாய் மற்றும் ஊர்வனவற்றுடன் உடலுறவு கொள்வதற்கு ஆணுறைகளை வாங்கும் வரையில், ஆண்கள் பெண்களுடன் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதை நிறுத்த வேண்டும். மேலும் உங்கள் சகோதரர்கள் மற்றும் ஆண் நண்பர்களிடம் திருமணம் வரை உடலுறவு கொள்ள வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

    ×