என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குச்சீட்டு"

    • ரஷிய அதிபருக்கான தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும் வெற்றி பெற்றார்
    • இதன்மூலம் ரஷிய வரலாற்றில் அதிக வருடம் அதிபராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்

    அண்மையில் நடந்து முடிந்த ரஷிய அதிபருக்கான தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும் வெற்றி பெற்றார்.

    அவர் 87.8 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷியாவின் அதிபராக நீடிப்பார்.

    இதன்மூலம் ரஷிய வரலாற்றில் அதிக வருடம் அதிபராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இதற்கு முன்னதாக ஜோசப் ஸ்டாலின் ரஷியாவை அதிக வருடங்கள் ஆண்ட அதிபர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

    மேலும், சோவியத் ரஷியா உடைந்த பிறகு அதிக வாக்குகள் பெற்ற அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    உக்ரைனுக்கு எதிராக இரண்டு வருடங்கள் சண்டை நடைபெற்று வருவது, எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்தது உள்ளிட்ட சம்பவங்கள் புதினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் தாண்டிய புதின் வெற்றி பெற்றுள்ளார்.

    ரஷியாவில் நடைபெற்ற தேர்தல் சுதந்திரமாக மற்றும் நியாயமாக நடைபெறவில்லை என அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது.

    இந்நிலையில், நடந்து முடிந்த ரஷிய அதிபர் தேர்தலின்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா சிரியத்யேவா, வாக்குச்சீட்டின் பின்புறம் 'போர் வேண்டாம்' என எழுதியுள்ளார்.

    இதனையடுத்து, ரஷ்ய ராணுவத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் மாவட்ட நீதிமன்றம், அப்பெண்ணுக்கு 8 நாட்கள் சிறைத் தண்டனையும் 40,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

    • புத்திசாலத்தனமான யோசனைகளை எப்படி பெறுகிறீர்கள்?
    • மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

    இந்தியாவில் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இயந்திரங்களை பயன்படுத்தாமல் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற உத்தரவிட வேண்டும் என்று கே.ஏ. பால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி போன்ற அரசியல் தலைவர்கள் கூட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு குறித்து கேள்வி எழுப்பி இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனுவை விக்ரம் நாத் மற்றும் பி.பி. வரலே அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விசாரணையின் போது, இது போன்ற புத்திசாலத்தனமான யோசனைகளை எப்படி பெறுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதோடு, மனுவை தள்ளுபடி செய்வது உத்தரவிட்டது.

    மேலும், "சந்திரபாபு நாயுடுவோ அல்லது ஜெகன் மோகன் ரெட்டியோ தேர்தலில் தோல்வியுற்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக சொல்கிறார்கள், ஆனால் வெற்றி பெற்றால் முறைகேடு இருப்பதாக கூறுவதில்லை. இதை எப்படி பார்க்க முடியும்? நாங்கள் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம், இதை வாதாடும் இடம் இதுவல்ல," என்று நீதிபதிகள் கூறினர்.

    விசாரணையின் போது ஆஜரான மனுதாரர் பால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று வாதிட்டார். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக காகித வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தும் அமெரிக்கா போன்ற நாடுகளின் நடைமுறைகளை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

    இதோடு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என எலான் மஸ்க் போன்ற முக்கிய பிரமுகர்கள் கூட மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறைகேடு குறித்து கவலை தெரிவித்துள்ளதாக மனுதாரர் பால் கூறினார்.

    ×