என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோல்"

    • தோலில் திட்டுத்திட்டாக சிவத்தல், கொப்புளங்கள் மற்றும் பருக்கள் உருவாகலாம்.
    • தோல் புற்றுநோய் செல்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.

    சூரிய ஒவ்வாமை என்பது சூரிய ஒளியில் இருக்கும் அல்ட்ரா வயலட் என்ற புற ஊதா கதிர்வீச்சு காரணமாக தோலில் ஏற்படும் பாதிப்புகளை குறிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் அதிக நேரம் நிற்கும்போது தோலில் 'பாலிமார்பிக் லைட் டெர்மடோசிஸ்' என்ற பாதிப்பு ஏற்படுகிறது.

    இதனால், தோலில் திட்டுத்திட்டாக சிவத்தல், கொப்புளங்கள் மற்றும் பருக்கள் உருவாகலாம். இந்த பாதிப்புகளில் கடுமையான அரிப்பு காணப்படும். இது பொதுவாக கழுத்து, மேல் மார்பு, மேல் கைகள், கைகளின் பின்புறம் அல்லது தொடைகளை பாதிக்கிறது. இது வெயில் காரணமாக ஏற்படும் பரவலான ஒரு பாதிப்பு.

    ஆனால், சுட்டெரிக்கும் வெயிலின் புற ஊதா கதிர்வீச்சு காரணமாக ஏற்படும் மெலனோமா என்பது மிகவும் ஆபத்தான தோல் புற்றுநோய் ஆகும். புற ஊதா கதிர்வீச்சு காரணமாக தோலில் வீரியம் மிக்க கட்டியாக இது ஏற்படுகிறது. இந்த தோல் புற்றுநோய் என்பது உடலில் புதிய மச்சமாக அல்லது பழைய புள்ளிகளில், மச்சங்களில் ஏற்படும் நிறம், வடிவம், அளவில் ஏற்படும் மாற்றங்களாகக்கூட இதன் அறிகுறிகள் தென்படும்.

    பொதுவாக, இந்த மெலனோமாக்கள் என்பது ஒழுங்கற்ற திட்டு, நிறத்தை கொண்டிருக்கும். அரிப்பு என்பது பொதுவான அறிகுறியாகும்.

    வெயில் காலத்தில் தோலில் ஏற்படும் மாற்றங்களை ஆரம்பத்தில் கண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளாத நிலையில் உயிருக்குக்கூட ஆபத்தான நிலை ஏற்படும் என்கின்றனர்.

    குறிப்பாக, தோல் புற்றுநோய் செல்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். இந்நோய் கடுமையான வெயில் காரணமாக ஏற்படுகிறது என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளதாக இத்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    • சாந்தி பானி நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது அவர் தனது இந்த காலணி பரிசை தாய்க்கு வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
    • சொர்க்கம் பெற்றோரின் காலடியில் உள்ளது என்பதை நான் சமூகத்துக்கு சொல்ல விரும்புகிறேன் என்றார்.

    மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி சாந்தி பானி நகரை சேர்ந்தவர் ரவுனக் குர்ஜார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை ரவுடிகள் பட்டியலில் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அவர் தனது சொந்த தோலில் இருந்து செய்யப்பட்ட காலணிகளை தனது தாய்க்கு பரிசாக வழங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

    ரவுனக் குர்ஜார் ஒரு முறை போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டவர் ஆவார். அப்போது அவரது தொடைப்பகுதி பாதிக்கப்பட்ட நிலையில், அதில் தோல் அகற்றப்பட்டது. அந்த தோலை செருப்பு தொழிலாளியிடம் கொடுத்து காலணியாக தைக்குமாறு ரவுனக் குர்ஜார் கூறி உள்ளார். அதன்படி அந்த தொழிலாளி அவரது தோலை காலணியாக வடிவமைத்து கொடுக்க, அதனை அவர் தாய்க்கு பரிசாக வழங்கினார். சாந்தி பானி நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது அவர் தனது இந்த காலணி பரிசை தாய்க்கு வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.


    இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ராமாயணத்தை தவறாமல் பாராயணம் செய்வேன். மேலும் ராமரின் கதாபாத்திரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். தாயாருக்கு தன் தோலினால் செருப்பை செய்தாலும் போதாது என்று ராமரே கூறி உள்ளார். எனவே இந்த யோசனை என் மனதில் தோன்றியது. அதன்படி எனது தோலில் இருந்து காலணிகளை உருவாக்கி என் அம்மாவுக்கு பரிசளிக்க முடிவு செய்தேன். சொர்க்கம் பெற்றோரின் காலடியில் உள்ளது என்பதை நான் சமூகத்துக்கு சொல்ல விரும்புகிறேன் என்றார்.

    குர்ஜாரின் தாயார் கூறுகையில், ரவுனக் போன்ற ஒரு மகனை பெற்றதை நான் பாக்கியமாக கருதுகிறேன். கடவுள் அவரை எல்லா கஷ்டங்களில் இருந்தும் பாதுகாத்து எந்த துக்கமும் இல்லாத வாழ்க்கையை அவருக்கு ஆசீர்வதிக்கட்டும் என்றார்.

    • தக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.
    • சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும்.

    பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.

    * நாட்டுக் கோழியின் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவினால் குணமாகும்.

    * திராட்சைப் பழத்தை சிறிதளவு எடுத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

    * தக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.

    * ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி நன்கு ஊறிய பிறகு குளித்தால் முகச் சுருக்கம், பருக்கள் போன்றவை ஏற்படாது. மேலும் முகம் பொலிவு பெறும்.


    * புதினா, கொத்தமல்லி அல்லது கருவேப்பிலை இவற்றுள் ஏதாவது ஒன்றை துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் சோம்பல் ஏற்படாமல் இருக்கும்.

    * பிழிந்த எலுமிச்சம் பழத்தோலை மோர் அல்லது தயிருடன் சேர்த்து முகத்தில் நன்கு தேய்த்துக் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

    * பெண்களுக்கு உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி நாளடைவில் உதிர்ந்துவிடும். மேலும் அந்த இடத்தில் முடி முளைக்காது.

    * முகத்தில் உள்ள துவாரங்களை போக்க ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி அதை எலுமிச்சை சாறில் நனைத்து துவாரங்கள் இருக்கும் இடத்தில் தடவினால் துவாரங்கள் அடைபட்டு விடும்.

    * காலில் உள்ள நகங்களை உப்பு கலந்த நீரில் பத்து நிமிடம் ஊறவைத்து பிறகு பழைய பிரஷ்ஷினால் தேய்த்தால் நகங்கள் சுத்தமாகும். மேலும் கிருமிகள் அழிந்து விடும்.

    ×