என் மலர்
நீங்கள் தேடியது "கிரிக்கெட் தொடர்"
- துபாயில் நாளை இந்தியா பாகிஸ்தான்- அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தானை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. அதனால் இந்தியா உடனான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி, "பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்திய அணியிடம் அதிக மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். ஒரு மேட்ச்-வின்னர் என்பவர் ஆட்டத்தில் அணியை வெற்றி பெற வைப்பவர். தற்போது, பாகிஸ்தானில் அப்படிப்பட்ட வீரர்கள் இல்லை" என்று தெரிவித்தார்.
- நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம், சென்னை ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற உள்ளது.
- ஆகஸ்ட் 4ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதி போட்டி.
நடப்பாண்டின் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை டிஎன்பிஎல் நடைபெறுகிறது.
நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம், சென்னை ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற உள்ளது.
சேலத்தில் நடைபெறும் முதல் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகிறது.
ஆகஸ்ட் 4ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதி போட்டி நடைபெறுகிறது.