என் மலர்
நீங்கள் தேடியது "மேனேஜர்"
- உலகளவிலான நிர்வாகப் பணியாளர்களை 105,770 இலிருந்து 91,936 ஆக குறைக்க அமேசான் முடிவெடுத்துள்ளது.
- இது அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய மேலாளர் பதவிகளில் 13% ஆகும்.
ஆண்டுதோறும் 2.1 பில்லியன் முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்கும் நோக்கத்தில் இந்தாண்டு 14,000 மேலாளர் பதவிகளை நீக்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய மேலாளர் பதவிகளில் 13% ஆகும். அதாவது உலகளவிலான நிர்வாகப் பணியாளர்களை 105,770 இலிருந்து 91,936 ஆக குறைக்க அமேசான் முடிவெடுத்துள்ளது.
இந்த வேலை குறைப்பு அமேசான் வலை சேவைகள் (AWS), சில்லறை விற்பனை செயல்பாடுகள் மற்றும் மனித வளங்கள் உள்ளிட்ட பிரிவுகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
கொரோனா தொற்றுநோய் காலத்தில் அமேசானில் அதிகமானோர் வேளைக்கு எடுக்கப்பட்டனர். 2019 ஆம் ஆண்டில் அமேசானில் 7,98,000 பேர் வேலை பார்த்தனர். அது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 16 லட்சமாக உயர்ந்தது. அதன்பின்பு பல ஆயிரக்கணக்கான ஊழியயர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- பெங்களூருவைச் சேர்ந்த நேஹா திவேதி ஆர்சிபி அணியின் தீவிர ரசிகை.
- இவர் ஆர்சிபி, லக்னோ அணிகளுக்கு இடையிலான மேட்ச் பார்க்க விரும்பினார்.
பெங்களூரு:
பெங்களூருவைச் சேர்ந்த நேஹா திவேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தீவிர ரசிகை ஆவார்.
கடந்த 2ம் தேதி பெங்களூருவில் நடந்த ஆர்சிபி, லக்னோ அணிகளுக்கு இடையிலான மேட்ச் பார்க்க விரும்பினார். அலுவலகத்தில் இருந்த அவர் அவசர அவசரமாக பேமிலி எமர்ஜென்சி என மேனேஜருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு புறப்பட்டார். அவர் கேட்ட பர்மிஷனை உண்மை என நம்பிய மேனேஜர் அவரை வீட்டுக்கு அனுப்பினார்.
சில மணி நேரத்தில் தற்செயலாக டிவியைப் பார்த்த மேனேஜர் அதிர்ச்சி அடைந்தார். நேஹா திவேதி ஐபிஎல் போட்டியைப் பார்க்க தான் இப்படி அவசரமாக சென்றார் என்பது தெரியவந்தது.
டி.வி.யில் நேஹாவைக் கண்ட மேனேஜர், நேஹா நீங்கள் ஆர்சிபி விசிறியா என கேட்க, அவர் ஆமாம் என கூறியிருக்கிறார். அப்போது உங்களை டி.வி.யில் சோகமான முகத்துடன் பார்த்தேன் என்றதும்தான் நேஹாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.
இதுதொடர்பான கலந்துரையாடல் ஸ்க்ரீன்ஷாட்டை நேஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த ரீல்ஸ் பதிவு 2 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. 4 ஆயிரம் பேர் இதை லைக் செய்திருக்கின்றனர்.
தில்லுமுல்லு படத்தில் ரஜினிகாந்த் லீவு போட்டு மேட்ச் பார்க்கச் சென்ற சம்பவம் போல் இருப்பதாக வலைதளத்தில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
- 2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார்.
- டுவிட்டர் நிறுவனத்தில் பணிப்புரிந்த 80 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவை எடுத்தார்.
2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். அப்பொழுது அவரது நெருங்கிய நண்பர்களான ஸ்டீவ் டேவிஸ் மற்றும் ஜேம்ஸ் மஸ்க்- ஐ டுவிட்டர் நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் நாம் தரும் சம்பளத்திற்கு தகுதியானவர்களா? என்று ஆராய கூறினார்.
அதன்படி டுவிட்டர் நிறுவனத்தில் பணிப்புரிந்த 80 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவை எடுத்தார். இந்த முடிவு காரணமாக ப்ராடக்ட் அண்ட் டிசைன் பிரிவில் பணியாற்றி வந்த பலர் பாதிக்கப்பட்டனர்.
உலகின் பெரிய நிறுவனமான டுவிட்டர் தனது பணியாளர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்தது, மற்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களையும் இது குறித்து பரிசீலனை செய்ய வைத்தது. இந்நிகழ்வை தொடர்ந்து வேலை வாய்ப்பு எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியது.
இதே ஃபார்முலாவை பெரும்பான்மையான நிறுவனங்கள் கையில் எடுத்தனர். கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் போன்ற பிரபல நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டு மட்டும் 1.5 லட்சத்திற்கு அதிகமானோரை பணி நீக்கம் செய்தது.
இதில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் மிட்டில் மேனேஜர்ஸ் எனப்படும் ஊழியர்கள் மற்றும் தலைமை பொறுப்புகளில் வகிப்பவர்களுக்கு இடையில் பணியாற்றும் மேலாளர்கள் தான். ஒரு நிறுவனத்தை மொத்தமாக விலைக்கு வாங்கி, உடனடியாக அதன் ஊழியர்கள் எண்ணிக்கையை பெருமளவு குறைத்த எலான் மஸ்க்-இன் நடவடிக்கை தொழில்நுட்ப துறையில் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில், எலான் மஸ்க்-இன் இந்த நடவடிக்கை காரணமாகவே தொழில்நுட்ப துறையில் இயங்கி வரும் இதர முன்னணி நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையை தீவிரப்படுத்த காரணமாக அமைந்தது என தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- வாரந்தோறும் சனிக்கிழமை தவறாமல் நாட்டு கோழி கொண்டுவரச் சொல்லி சமைத்து சாப்பிட்டுள்ளார் மேனேஜர்.
- அவருக்கு கடன் தருவதாக உறுதியளித்த வங்கி மேனேஜர் முன்கூட்டியே 10% கமிஷன் கேட்டுள்ளார்.
வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று வரும் அழைப்பை நம்பி தினமும் பலர் ஏமாறுகின்றனர். ஆனால் சத்தீஸ்கரில் விவசாயிக்கு கடன் தருகிறேன் என கூறி வங்கி மேனேஜரே ஏமாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள மஸ்தூரி நகரில் வங்கி மேனேஜர், விவசாயியிடம் ரூ.12 லட்சம் கடன் தருவதாக கூறி விவசாயியிடம் உள்ள மொத்தம் 900 கோழிகளையும் வாங்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுள்ளார் வங்கி மேனேஜர்.

பாதிக்கப்பட்ட விவசாயி ரூப்சந்த் மன்ஹர், மஸ்தூரியில் நாட்டுக் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். தனது தொழிலை விரிவுபடுத்த வேண்டி கடனுக்காக [ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா] வங்கியை அணுகினார். அவருக்கு கடன் தருவதாக உறுதியளித்த வங்கி மேனேஜர் முன்கூட்டியே 10% கமிஷன் கேட்டுள்ளார். இதை நம்பிய மன்ஹர் பணத்தை ஏற்பாடு செய்து மேனேஜருக்கு கொடுத்தார்.
ஆனாலும் ஆசை அடங்காத மேனேஜர், கோழிக் கறி மீது தனக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்தி, வாரந்தோறும் சனிக்கிழமை மன்ஹரை தவறாமல் நாட்டு கோழி கொண்டுவரச் சொல்லி சமைத்து சாப்பிட்டுள்ளார் மேனேஜர். கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மன்ஹர் இதுவரை மொத்தம் ரூ.39,000 மதிப்புள்ள 900 கோழிகளை மேனேஜருக்கு கொடுத்துள்ளார்.

இருந்தும் வங்கி மேலாளர் கடன் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். எனவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மன்ஹர் சம்பவத்தின் விவரங்களையும், தான் சப்ளை செய்த கோழிகளுக்கான பில்களையும் போலீசிடம் சமர்ப்பித்து புகார் அளித்தார்.
தனக்கு நீதி கிடைக்காவிட்டால் வங்கியின் முன் தீக்குளிக்கப் போவதாகக் கூறி, மன்ஹர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து வங்கி மேனேஜர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.