என் மலர்
நீங்கள் தேடியது "சிக்கந்தர்"
- ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
- படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரித்துள்ளார்.
படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
சமீபத்தில் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சில விஷயங்களை சல்மான் கான் கூறியதாவது " ரஜினிகாந்த், சிரஞ்சீவி காரு, சூர்யா, ராம் சரண் படங்களை நாங்கள் இங்கு பார்க்கிறோம். நன்றாக ஓடுகின்றன. ஆனால் எங்கள் இந்தி திரைப்படங்களை அவர்களின் ரசிகர்கள் பார்க்கச் செல்வதில்லை. அவர்களின் ஊர்களுக்கு நான் செல்லும்போதெல்லாம், "பாய்.. பாய்" என என்னை அழைப்பார்கள். ஆனால் தியேட்டருக்கு செல்வதில்லை" என அவரது கருத்தை பதிவிட்டுள்ளார்.
- ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரித்துள்ளார்.
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரித்துள்ளார்.
படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் சல்மான் கான் , அமீர் கான் மற்றும் ஏ. ஆர் முருகதாஸ் இணைந்து கலந்துரையாடல் செய்து வீடியோ உருவாக்கியுள்ளனர். தன் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அமீர் கான் ஏ.ஆர் முருகதாஸை பார்த்து எங்கள் இருவரின் யார் உண்மையான சிக்கந்தர் என கேள்வி கேட்கிறார் அதற்கு பதி சொல்ல முடியாமல் ஏ.ஆர் முருகதாஸ் முழிக்கிறார். இதன் வீடியோ விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அமீர் கான் நடிப்பில் இந்தியில் கஜினி திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் ரம்ஜான் பண்டிகையையொட்டி வருகிற 31-ந்தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.
மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ரம்ஜான் பண்டிகையையொட்டி வருகிற 31-ந்தேதி வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து, இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ், காஜல் அகர்வால், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்று இருந்தனர்.
அப்போது இந்நிகழ்ச்சியில் செய்தியாளர் ஒருவர் சல்மான் கானிடம், உங்களுக்கும் ராஷ்மிகாவுக்கும் 31 வயது வித்தியாசம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு சல்மான் பதிலளித்தபோது, இதில் கதாநாயகிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, அவரது தந்தைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாதபோது, உனக்கு என்ன தம்பி பிரச்சனை? நடிப்பில் ராஷ்மிகாவின் அர்பணிப்பை பார்க்கும்போது எனது குழந்தை பருவம் நினைவுக்கு வரும். அந்தளவு அர்ப்பணிப்புடன் செயல்படுவார் என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
- திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.
மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடலான ஸோரா ஜபீன் வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களால் ரசிக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகளில் பல சல்மான் கானின் பன்ச் வசங்கள் இடம் பெற்றுள்ளது. குடும்பங்கள், ரசிகர்கர்கள், காதலர்கள்,என அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விதமாக மாஸ் கமெர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தனது புதிய படத்தின் 'டைட்டில்' அறிவிப்பு சல்மான்கான் வெளியிட்டுள்ளார்.
- இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் சல்மான்கான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
'தீனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர். முருகதாஸ் விஜயகாந்தின் ரமணா, சூர்யாவை வைத்து கஜினி, ஏழாம் அறிவு விஜய் வயது துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் மகேஷ் பாபுக்கு ஸ்பைடர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 'தர்பார்' என பல படங்களை இயக்கியுள்ளார்.
கஜினி படத்தை பாலிவுட்டில் அமீர்கானை வைத்து இயக்கி மிகப்பெரும் வெற்றி அடைந்தார். தெலுங்குவில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'ஸ்டாலின்' படத்தை இயக்கினார்.

ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய பின் அப்படம் எதிர்பார்த்த வெற்றியடையாததால் சினிமாவில் சில காலம் அவர் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனின் அமரன்' படத்தை இயக்கி வருகிறார்.இந்த படம் பாதி முடிந்த நிலையில் தற்போது அடுத்த புதிய படம் குறித்து அறிவித்தார்

அதில் பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய இந்தி படம் இயக்குகிறார். இது "புராணக் கதை' படமாகும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார்.
இதைத் தொடர்ந்து சல்மான்கான் படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை கடந்த சில மாதங்களாக முடித்த ஏ. ஆர். முருகதாஸ் அந்த படத்துக்கான சூட்டிங்கை விரைவில் தொடங்க உள்ளார்.
மேலும் பாலிவுட் நடிகர் சல்மான்கான் ரம்ஜான் பண்டிகையை யொட்டி தனது புதிய படங்களை 'ரிலீஸ்' செய்வதை வழக்கமாக கொண்டவராவார். இந்நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தனது புதிய படத்தின் 'டைட்டில்' அறிவிப்பு சல்மான்கான் வெளியிட்டுள்ளார்.

ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க உள்ள புதிய படத்துக்கு 'சிக்கந்தர்' எனும் 'டைட்டில்' வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் சல்மான்கான் தற்போது தனது எக்ஸ் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் தற்போது ரம்ஜானுக்கு வெளியான 'படே மியான் சோட்டா மியான்' மற்றும் ' மைதான்' உள்ளிட்ட படங்கள் மிகப்பெரும் வெற்றி அடைய அல்லாவை வேண்டிக் கொள்வதாகவும் ரசிகர்கள் அனைவருக்கும் 'ஹேப்பி ரம்ஜான்' எனவும் இணைய தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- குட் பை படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ந்து பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
- அனிமல் படம் 900 கோடி வசூல் ஈட்டி ராஷ்மிகா மந்தனாவுக்கு மிகப்பெரிய படமாக மாறியது.
தெலுங்கு திரையுலகில் முதல் முதலாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, கீதா கோவிந்தம் படம் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
பின்னர் தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கில் வெளியான புஷ்பா படம் வெற்றியை தொடர்ந்து தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பட்டையை கிளப்பி மூன்று மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.
அமிதாப் பச்சன் படமான குட் பை படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ந்து பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

பாலிவுட் நடிகைகள் தென்னிந்தியாவில் நடிப்பதும், தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் நடிப்பதும் பல காலமாகவே வழக்கத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படம் 900 கோடி வசூல் ஈட்டி ராஷ்மிகா மந்தனாவுக்கு மிகப்பெரிய படமாக மாறியது.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தள பதிவில் தனது அடுத்த படம் பற்றிய அப்டேட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் ஹீரோவாக வைத்து பிரம்மாண்டமாக உருவாக உள்ள சிக்கந்தர் படத்தில் தான் தற்போது இணைந்துள்ளதாக ராஷ்மிகா மந்தனா அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு அந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் அல்லு அர்ஜூனின் புஷ்பா-2 படத்திலும், தனுஷின் குபேரா படத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

இந்தியாவிலேயே தற்போது அதிக பட வாய்ப்புகளை கொண்டு டாப் ஹீரோயினாக மாறியுள்ள ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக மீண்டும் இந்தி பட வாய்ப்பை தட்டி பறித்துள்ளார்.
- தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.
- இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என சல்மான்கான் அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய பின் அப்படம் எதிர்பார்த்த வெற்றியடையாததால் சினிமாவில் சில காலம் அவர் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய இந்தி படம் இயக்குகிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இது "புராணக் கதை' படமாகும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார். மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார்.
ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க உள்ள புதிய படத்துக்கு 'சிக்கந்தர்' எனும் 'பெயர் ' வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் சல்மான்கான் தற்போது தனது எக்ஸ் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 18 ஆம் தேதி தொடங்குகிறது என்று அப்படத்தின் தயரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர்.
- நயன்தாரா, திரிஷாவை சம்பள விஷயத்தில் ராஷ்மிகா ‘ஓவர் டேக்' செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, திருமணத்துக்கு பிறகும் படங்களில் மும்முரமாக நடித்து கொண்டிருக்கிறார். அஜித்தின் 'குட் பேட் அக்லி' உள்பட பல படங்களில் நடிக்கிறார். மலையாளத்திலும் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

அதேபோல சீனியர் நடிகையான திரிஷா கமல்ஹாசனின் 'தக்லைப்', அஜித்தின் 'விடாமுயற்சி' படங்களில் நடிக்கிறார். மலையாளம், தெலுங்கிலும் பிசியாக இருக்கிறார்.
இளம் நடிகைகளே ஆச்சரியப்படும் அளவுக்கு நயன்தாராவும், திரிஷாவும் படங்களில் நடித்து வருகிறார்கள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக கலக்கி வரும் இருவருமே ஒரு படத்துக்கு ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி சம்பளமாக பெற்று வருகிறார்களாம்.
ஆனால் இவர்களையே கன்னடத்து பைங்கிளியான ராஷ்மிகா முந்திவிட்டது தான் தற்போது சினிமாவில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் 'சிக்கந்தர்' படத்தில் நடிக்க ராஷ்மிகா ரூ.15 கோடி சம்பளமாக கேட்டு இருக்கிறாராம். பின்னர் பேச்சுவார்த்தையில் ரூ.13 கோடி வரை சம்பளம் வழங்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் நயன்தாரா, திரிஷாவை சம்பள விஷயத்தில் ராஷ்மிகா 'ஓவர் டேக்' செய்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஐதராபாத் மற்றும் மும்பை போலீஸ் ஏற்கனவே பாதுகாப்பு வழங்கி வருகிறது.
- தற்போது முன்னாள் துணை ராணுவ வீரர்களை பாதுகாப்பிற்காக அமர்த்தியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கேங்ஸ்டார் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கை சேர்ந்தவர்கள் சமீபத்தில் அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவருடைய பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சல்மான் கான்- ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சிக்கந்தர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த ஓட்டலில் சல்மானுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் ஒரு மாதமாக தொடர்ந்து நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஐதராபாத்தில் உள் பாலக்னுமா பேலஸ் ஓட்டலின் ஒரு பகுதியில் சூட்டிற்கு நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் ஓட்டல் முழுவதும் பயங்கர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல் கோட்டையாக மாறியுள்ளது.
இந்த ஓட்டலில் விருந்தினர்கள் தங்குதவற்கு ரூம்கள் புக் செய்யலாம். ஆனால், ஓட்டலுக்குள் வரும்போது பயங்கரமான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதேபோல் ஓட்டல் ஸ்டாஃப் உள்ளிட்டோர் பயங்கர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பை தாண்டி மேலும் இரண்டு அடுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய தனியார் பாதுகாப்பை அமைப்பை சல்மான் அணி வாடக்கைக்கு அமர்த்தியுள்ளார். தற்போது சல்மான் கான் எப்போதும் 50 முதல் 70 பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்புடன் இருந்து வருகிறார்.
சல்மான் கானுக்கு 4 அடுக்கு பாதுக்காப்பு சிஸ்டம் உள்ளது. முன்னாள் துணைராணுவ வீரர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே நீண்ட காலமாக சல்மான் கானுக்கு பாதுகாப்பு வழங்கும் அணி உடன் உள்ளது. மேலும் ஐதராபாத் போலீஸ் மற்றம் மும்பை போலீசார் பாதுகாப்பு உள்ளது.
ஐதராபாத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து சல்மான் கான் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்படகின்றன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார்.
- சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்று வருகிறது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கை சேர்ந்தவர்கள் சமீபத்தில் அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவருடைய பாதுகாப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்- ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த ஓட்டலில் சல்மானுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிக்கந்தர் திரைப்பதில் இடம்பெற்றுள்ள 'மைன் சிக்கந்தர் ஹூன்' பாடலில் சல்மான் கான் மற்றும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்பான வரிகள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சிக்கந்தர் படத்தின் 'மைன் சிக்கந்தர் ஹூன்' பாடலை எழுதிய பாடலாசிரியருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

இந்தப் பாடலை எழுதியவர் யாராக இருந்தாலும், அவரை உயிருடன் விடமாட்டோம். இந்தப் பாடலை எழுதியவரின் வாழ்க்கையை அடுத்த ஒரு மாதத்தில் முடித்துவிடுவோம் என்று மும்பை போலீசாருக்கு மிரட்டல் வந்துள்ளது.
இந்த கொலை மிரட்டல் தொடர்பான மெசேஜ் மும்பை போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டது.
அந்த கொலை மிரட்டல் மெசேஜில், சல்மான் கானுக்கு தைரியம் இருந்தால், அந்த பாடலாசிரியரை காப்பாற்ற வேண்டும் என்று சல்மான் கானுக்கு நேரடியாக சவால் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராய்ச்சூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் நாராயண் என்பவரது நம்பர் என்று தெரிய வந்தது
- சல்மான் கானுக்கும் தனுக்கு தானேயும் இவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் ரூ. 5 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததோடு மட்டுமல்லாமல் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'சிக்கந்தர்' படத்தில் பாடல் எழுதிய, 'மெயின் சிக்கந்தர் ஹூன்' பாடலின் பாடலாசிரியருக்கும் மிரட்டல் வந்தது. மேலும், கடந்த சில வாரங்களாக, மும்பை போக்குவரத்து காவல்துறையின் ஹெல்ப்லைனுக்கு பல மிரட்டல் செய்திகள் வந்துள்ளன.

அந்த நம்பரை டிரேஸ் அவுட் செய்த போலீசார் அது கர்நாடகாவில் உள்ள ராய்ச்சூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் நாராயண் என்பவரது நம்பர் என்று தெரிய வந்தது. ஆனால் அவரது போனில் இன்டர்நெட் வசதி இல்லை என்று தெரியவந்தது. அவரை விசாரித்ததில் மார்க்கெட்டில் வைத்து ஒருவருக்கு தனது போனை பயன்படுத்தக் கொடுத்தேன் என்று தெரிவித்தார். அவரது போனில் ஒடிபி ஒன்றும் கண்டறியப்பட்டது.
விசாரித்ததில் சோஹைல் பாஷா என்ற நபர் அந்த நபரின் போனை வாங்கி அதில் ஓடிபி நம்பர் பெற்று அந்த நம்பர் மூலம் தனது போனில் வாட்சப் செயலி பதிவிறக்கம் செய்து இந்த மிரட்டலை விடுத்ததாக கண்டறியப்பட்டது. டிவிஸ்ட் என்னவென்றால் இந்த சோஹைல் பாஷாதான் 'மெயின் சிக்கந்தர் ஹூன்' பாடலின் பாடலாசிரியர் என்றும் என்றும் தனது பாடல் பிரபலமடைய வேண்டும் என்று விரும்பி சல்மான் கானுக்கும் தனுக்கு தானேயும் இவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

லாரன்ஸ் பிஷ்ணோய் கும்பலிடம் இருந்த்து தொடர் மிரட்டல் வந்துகொண்டிருப்பதால் இதையும் அந்த கும்பலே விடுத்திருக்கும் என்று நம்பிவிடுவார்கள் என சோஹைல் நினைந்துள்ளார். ஆனால் தற்போது குட்டு வெளிப்பட்ட நிலையில் ராய்ச்சூரில் வைத்து அவரை கைது செய்த போலீஸ் மேற்கொண்டு விசாரணை நடந்த மும்பைக்கு அழைத்துச் சென்றது.
லாரன்ஸ் பிஷனோய் - சாலமன் கான் பகை
சல்மான் கான் கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் சினிமா ஷூட்டிங்கின்போது கரும்புள்ளி [blackbuck] மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார். பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் பகுதிகளில் அதிகம் வாழும் பிஷ்னோய் சமூகத்தினர் பிளாக்பக் மான்களை புனித விலங்காக கருதுவதால் சல்மான் கான் அவற்றை வேட்டையாடியது அவர்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக அமைந்தது.
இந்நிலையில் இதற்காக லாரான்ஸ் பிஷ்னோய் என்ற பிரபல ரவுடியின் கும்பல் சல்மான் கானுக்கு தொடர் கொலை மிரட்டல் விடுத்து வந்தது. அவரது வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது உள்ளிட்ட செயல்களில் இறங்கிய அந்த கும்பல் சல்மானுக்கு நெருக்கமாக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கை கடந்த அக்டோபர் மாதம் மும்பையில் வைத்து சுட்டுக்கொலை செய்தது.
மேலும் சல்மான் கானுக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் அதே கதிதான் என மிரட்டல் விடுத்தது.எனவே சல்மான் கானுக்கு Y கேட்டகிரி பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி சல்மான் கானுக்கு புதிய கொலை மிரட்டல் ஒன்று வாட்ஸ் அப் செயலி மூலம் வந்தது.
- நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் சிக்கந்தர் படம் இயக்குகிறார்.
- இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து SK 23 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
அதே சமயத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் சிக்கந்தர் படம் இயக்குகிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார். மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சல்மான் கான் பிறந்தநாளான டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் இசையமைப்பை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் இசை மிகப் பெரியளவில் ஹிட்டானது. இந்த படத்தின் பின்னணி இசை உலகம் முழுவதும் பேசப்பட்டது. இந்த வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் காலடி தடத்தை பதிக்கவுள்ளார் சந்தோஷ் நாராயணன்
திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜனவரி மாதம் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சல்மான் இப்படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.