search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகப்போர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பை வைத்து இதை கணிக்கிறேன்.
    • சீனா, தைவான் இடையே பதட்டம் போன்றவை என் கணிப்புக்கு ஆதாரம் என அவர் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    பல்கேரிய நாட்டை சேர்ந்த பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ரடாமஸ் போன்றவர்களின் கணிப்புகள் அப்படியே நடந்து வரும் நிலையில் அவர்களின் எதிர்கால கணிப்புகள் மீது மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் குஷால்குமார் என்பவர் மூன்றாம் உலகப்போரின் தொடக்கம் குறித்து கணித்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    நான் இந்து கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட வேத ஜோதிடத்தை வைத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறேன். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பை வைத்து இதை கணிக்கிறேன். இப்போது இருக்கும் கிரக நிலையை வைத்து பார்க்கும் போது சில நாட்களில் மூன்றாம் உலகப்போர் தொடங்கலாம்.

    ஜூன் 18-ந் தேதி (நேற்று) மூன்றாம் உலகப்போரை தூண்டுவதற்கான வலுவான கிரகத்தூண்டுதல்களை கொண்டிருந்தது. இந்திய எல்லையில் 9 யாத்தீரிகள் கொல்லப்பட்டது மற்றும் வடகொரிய வீரர்கள் தென்கொரியாவுக்குள் நுழைவது, இஸ்ரேல், லெபனான், சீனா, தைவான் இடையே பதட்டம் போன்றவை என் கணிப்புக்கு ஆதாரம் என அவர் கூறியுள்ளார்.

    ஏற்கனவே குஷால்குமார் ஜூன் 10-ந் தேதி உலகப்போரின் தொடக்கமாக இருக்கும் என கணித்திருந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. என்றாலும் தற்போது மூன்றாம் உலகப்போரை தூண்டுவதற்கு கிரக நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர் வருகிற 29-ந் தேதி மற்றொரு சாத்தியமான அழிவுநாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம் என்றார் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த வாரம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 ராணுவ தளபதிகள் உள்பட 9 பேர் பலியானார்கள். இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரான், தக்க பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்துள்ளது.

    இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வெளியானது. மேலும், இவ்விவகாரத்தில் ஒதுங்கி இருக்குமாறு அமெரிக்காவிடம் ஈரான் தெரிவித்தது. இதற்கிடையே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம். அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன், அதுவும் குறிப்பாக தற்போதுள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் அதிபராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது என தெரிவித்தார்.

    ×