என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில்"

    • சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது.

    காலை 10.30 மணிக்கு 'சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது.

    கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு, காலை 10.30 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்பட்டது. மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

     தமிழ் புத்தாண்டு மற்றும் விடுமுறை தினம் என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்தனர்.

     அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் சுமார் 5 மணிநேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் தரிசனம் செய்ய முடிந்தது. திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் மற்றும் வாகன மிகுதியால் போக்குவரத்து ஸ்தம்பித்து.

    • கடந்த 3 நாட்களாக திருச்செந்தூர் கடல் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.
    • கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநி லங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

    அவ்வாறு கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோவில் அருகில் உள்ள கடலில் புனித நீராடி குடும்பத்தோடு சுவாமியை தரிசனம் செய்தது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக திருச்செந்தூர் கடல் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

    எப்போதும் நீல வண்ணத்தில் காட்சி அளிக்கும் திருச்செந்தூர் கடல் தற்போது கருப்பு வண்ணத்தில் அலைகள் அதிகமாக காட்சியளிக்கிறது.


    கடற்கரை பகுதிகளில் கருப்பு நிறங்கள் படிந்த மணல்கள் ஆங்காங்கே கரை ஓரத்தில் ஒதுங்கி உள்ளன.

    தற்போது வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருவதால் ஒரு வாரமாக கடலுக்குள் காற்றின் திசை மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நேரங்களில் கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்படும்.

    அப்படி கடல் சீற்றம் ஏற்படும் நேரங்களில் கடலின் அடிப்பகுதியில் உள்ள மணல் கிளறி கடல் தண்ணீர் குழம்பிய நிலையில் கருப்பு நிறத்தில் மாறி காணப்படும். அதனால் தான் திருச்செந்தூர் கடல் தற்போது கருப்பு நிறத்தில் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டு கரை அரிப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி வரை ஆழம் காணப்பட்டது. அந்த நிலைமை சற்று மாறி இன்று சுமார் 3 அடி அளவுக்கு அரிப்பு காணப்படுகிறது.


    இந்நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கடற்கரையில் பேரிகாடு கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அனாலும் பக்தர்கள் எந்தவித அச்சமின்றி கடலில் புனித நீராடி வருகின்றனர்.

    ×