என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நெய் அபிஷேகம்"
- நெய் அபிஷேகத்திற்கு வழங்கப்பட்ட ரசீதை கவுண்டரில் காண்பித்து அபிஷேக நெய்யை பெற்றுக்கொள்ளலாம்.
- முறைகேடாக பணம் பெற்று பக்தர்களுக்கு அபிஷேக நெய் கொடுக்கப்படுவதாக தேவசம்போர்டு லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் மிக முக்கியமான வழிபாடாகும். சபரிமலை வரும் பெரும்பாலான பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்யாமல் திரும்புவதில்லை. இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண் டும். பக்தர்கள் செலுத்தும் நெய், அபிஷேகத்திற்கு பிறகு தனி கவுண்டர் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.
நெய் அபிஷேகத்திற்கு வழங்கப்பட்ட ரசீதை கவுண்டரில் காண்பித்து அபிஷேக நெய்யை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக கவுண்டரில் பூசாரிகள் பணியில் உள்ளனர். இந்த நிலையில் முறைகேடாக பணம் பெற்று பக்தர்களுக்கு அபிஷேக நெய் கொடுக்கப்படுவதாக தேவசம்போர்டு லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர்கள் ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது திருமூழிக்குளம் கோவிலைச் சேர்ந்த பூசாரி மனோஜ் என்பவர் தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவரிடமிருந்து ரூ.14 ஆயிரத்து 565 பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பம்பை போலீசில் மனோஜ் ஓப்படைக்கப்பட்டார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்