என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவிஞர் வைரமுத்து"

    • வைரமுத்துவை பாராட்ட பல்வேறு நாட்டு அறிஞர்கள் வந்தது பெருமைக்குரியது.
    • பல்வேறு நாடுகளின் அறிஞர்கள், பேராசியிர்கள் உள்ளிட்ட 22 பேர் வைரமுத்தியம் விழாவுக்கு வந்துள்ளனர்.

    சென்னை எம்ஆர்சி நகரில் வைரமுத்தியம் என்ற பெயரிலான கவிஞர் வைரமுத்துவின் படைப்பிலக்கிய பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

    அங்கு வைரமுத்துவின் படைப்பிலக்கியம் பன்னாட்டு கருத்தரங்கத்தில் கட்டுரை நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனை எம்பி ஜெகத்ரட்சகன் பெற்றுக் கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பொன்மாலை பொழுதில் தன் திரையிசை வாழ்வை தொடங்கிய வைரமுத்துவுக்கு இது உண்மையிலேயே பொன்னான நாள்.

    இப்படி ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன்.

    தமிழின் புகழை உலகெல்லாம் கொண்டு சேர்த்த வைரமுத்துவை பாராட்ட பல்வேறு நாட்டு அறிஞர்கள் வந்தது பெருமைக்குரியது.

    பல்வேறு நாடுகளின் அறிஞர்கள், பேராசியிர்கள் உள்ளிட்ட 22 பேர் வைரமுத்தியம் விழாவுக்கு வந்துள்ளனர்.

    உலக கவியாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டார் வைரமுத்து என்றே எண்ணத் தோன்றுகிறது.

    கலைஞரின் இலக்கிய மகன் வைரமுத்து. வைரமுத்துவின் 17 படைப்புகளை கலைஞர் வெளியிட்டிருக்கிறார். வைரமுத்துவுக்கு கவிப்பேரரசர் என பெயரிட்டு அழைத்தவர் கலைஞர்.

    இலக்கியத்தின் எல்லா பக்கங்களிலும் நுழைந்து வெற்றியை சாதித்து காட்டியவர் வைரமுத்து.

    நமது ஜெகத்ரட்சகன் எம்பி வஞ்சனையில்லாமல் அனைவரையும் பாராட்டக் கூடியவர்.

    இவ்வாறு கூறினார்.

    • பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும்.
    • வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கவிஞர் வைரமுத்து அவரது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    விரலில் வைத்த கருப்புமை

    நகத்தைவிட்டு வெளியேறச்

    சில வாரங்கள் ஆகும்

    பிழையான ஆளைத்

    தேர்ந்தெடுத்துவிட்டால்

    அநீதி வெளியேற

    ஐந்தாண்டுகள் ஆகும்

    சரியான நெறியான

    வேட்பாளருக்கு வாக்களியுங்கள்

    வாக்கு என்பது

    நீங்கள் செலுத்தும் அதிகாரம்

    இவ்வாறு அவர் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து பதிவிட்டுள்ளார்.


    • உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் பாராட்டு
    • உங்களை வாழ்த்துகிறேன். நானும் மகிழ்கிறேன்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    உங்கள்

    அன்னையைப் போலவே

    நானும் மகிழ்கிறேன்

    இந்த உயர்வு

    பிறப்பால் வந்தது என்பதில்

    கொஞ்சம் உண்மையும்

    உங்கள் உழைப்பால்

    வந்தது என்பதில்

    நிறைய உண்மையும் இருக்கிறது

    பதவி உறுதிமொழி ஏற்கும்

    இந்தப் பொன்வேளையில்

    காலம் உங்களுக்கு

    மூன்று பெரும் பேறுகளை

    வழங்கியிருக்கிறது

    முதலாவது

    உங்கள் இளமை

    இரண்டாவது

    உங்கள் ஒவ்வோர் அசைவையும்

    நெறிப்படுத்தும் தலைமை

    மூன்றாவது

    உச்சத்தில் இருக்கும்

    உங்கள் ஆட்சியின் பெருமை

    இந்த மூன்று நேர்மறைகளும்

    எதிர்மறை ஆகிவிடாமல்

    காத்துக்கொள்ளும் வல்லமை

    உங்களுக்கு வாய்த்திருக்கிறது

    உங்கள் ஒவ்வோர் நகர்வும்

    மக்களை முன்னிறுத்தியே

    என்பதை

    மக்கள் உணரச் செய்வதே

    உங்கள் எதிர்காலம்

    என் பாடலைப் பாடிய

    ஒரு கலைஞன்

    துணை முதல்வராவதை எண்ணி

    என் தமிழ் காரணத்தோடு

    கர்வம் கொள்கிறது

    கலைஞர் வழிகாட்டுவார்

    துணை முதல்வராகும் நீங்கள்

    இணை முதல்வராய்

    வளர வாழ்த்துகிறேன்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.
    • தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார்.

    சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் கண்டனங்களை பதிவு செய்து இருந்தனர்.

    இந்நிலையில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற உயிர் வாக்கியத்தைத் தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து தவிர்த்ததைக் காதும் கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள் என்று கவிஞர் வைரமுத்து கண்டனத்துடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழையும்

    தமிழ் நாட்டையும்

    திராவிடக் கருத்தியலையும்

    எதிர்க்கும் அல்லது இழிவுசெய்யும்

    பல நிகழ்வுகளைக் கண்டும்

    காணாமல் போயிருக்கிறோம்

    ஆனால்,

    தமிழ்த்தாய் வாழ்த்தில்

    "தெக்கணமும் அதிற்சிறந்த

    திராவிடநல் திருநாடும்"

    என்ற உயிர் வாக்கியத்தைத்

    தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து

    தவிர்த்ததைக்

    காதும் கண்ணுமுள்ள தமிழர்கள்

    கடந்துபோக மாட்டார்கள்

    இருதயக் கூடு எரிகிறது

    எவ்வளவுதான்

    பொறுமை காப்பது?

    இந்தச் செயலுக்குக்

    காரணமானவர்கள்

    யாராக இருந்தாலும்

    தமிழர்கள் அவர்களை

    மன்னிக்கவே மாட்டார்கள்

    "திராவிட" என்ற

    சொல்லை நீக்கிவிட்டு

    தேசிய கீதத்தைப் பாடமுடியுமா?

    தமிழ்த்தாய் வாழ்த்தில்

    தவிர்ப்பதற்கு மட்டும்

    யார் தைரியம் கொடுத்தது?

    திராவிடம் என்பது நாடல்ல;

    இந்தியாவின்

    ஆதி நாகரிகத்தின் குறியீடு

    உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்

    இதுபோன்ற இழிவுகள்

    தொடர்ந்தால்

    மானமுள்ள தமிழர்கள்

    தெருவில் இறங்குவார்கள்;

    தீமைக்குத் தீயிடுவார்கள்

    மறக்க வேண்டாம்

    தாய்மொழி காக்கத் தங்கள்

    உடலுக்கும் உயிருக்குமே

    தீவைத்துக் கொண்டவர்கள்

    தமிழர்கள்

    அந்த நெருப்பின் மிச்சம்

    இன்னும் இருக்கிறது எங்களிடம்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×