search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்ச் பிக்சிங்"

    • முகமது ஷமியின் திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது.
    • முகமது ஷமி மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்திய அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளராக முகமது ஷமி திகழ்ந்து வருகிறார். ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியர்களின் பட்டியலில் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார்.

    ஒருநாள் உலகக்கோப்பையில் வெறும் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடி 55 விக்கெட்களை முகமது ஷமி வீழ்த்தியுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் தற்போது 5 ஆவது இடத்தில் அவர் உள்ளார்.

    கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் முகமது ஷமியின் திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது.

    வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் புகார் கோரி விவாகரத்து கோரியிருந்தார். அப்போது பாகிஸ்தான் பெண்ணிடம் பணம் வாங்கி மேட்ச் பிக்சிங் செய்ததாக முகமது ஷமி மீது அவரது மனைவி குற்றம் சாட்டியிருந்தார்.

    ஆனால் முகமது ஷமி மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் அந்த சமயத்தில் இந்த புகாரால் மன உளைச்சலுக்கு உள்ளான முகமது ஷமி தற்கொலைக்கு முயன்றதாக அவரின் நண்பர் உமேஷ் குமார் அதிர்ச்சி தகவல் ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார்.

    சுபங்கர் மிஸ்ராவுடன் பாட்காஸ்ட்டில் பேசிய போது இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.

    "அந்த சமயத்தில் முகமது ஷமி என்னுடன் என் வீட்டில் வசித்து வந்தார். அவர் மீது மேட்ச் பிக்சிங் புகாரை அவரது முன்னாள் மனைவி கூறிய போது அவர் உடைந்துவிட்டார். 'என்னால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் என் நாட்டிற்கு துரோகம் செய்கிறேன் என்ற குற்றசாட்டை பொறுத்துக்கொள்ள முடியாது' என்று அவர் கூறினார்.

    நாங்கள் வசித்த 19வது மாடியில், அதிகாலை 4 மணியளவில் முகமது ஷமி பால்கனியில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நின்று கொண்டிருந்தார். அந்த இரவு ஷமியின் நீண்ட இரவாக இருந்தது. முகமது ஷமி மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று போலீசாரின் விசாரணை அறிக்கை வெளிவந்த பொது ஷமி மிகவும் சந்தோஷப்பட்டார். உலக கோப்பையை வேன்றபோது கூட ஷமி இவ்வளவு சந்தோசப்பட்டிருக்கமாட்டார்" என்று அவர் தெரிவித்தார்.

    • சூரத் தொகுதியில் முகேஷ தலால் உள்பட 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
    • இதில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 7-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இங்குள்ள சூரத் தொகுதிக்கான தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது. அவருக்கு போலியான சாட்சி கையெழுத்திடப்பட்டுள்ளது. இதேபோல், அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேஷ் பத்ஷாலாவின் வேட்பு மனுவும் தகுதியற்றது என அறிவிக்கப்பட்டது. அவரது வேட்பு மனுவிலும் போலியான சாட்சி கையெழுத்துகள் இடம்பெற்றிருந்தன என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வேட்பு மனு கலெக்டரால் ரத்து செய்யப்பட்டது. இதனால், போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது.

    இந்நிலையில், சூரத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, குஜராத் பா.ஜ.க. தலைவர் சி.ஆர்.பாட்டீல் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சூரத் தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்ற முகேஷ் தலாலுக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், சூரத் பாராளுமன்ற தேர்தலை மேட்ச் ஃபிக்ஸ் செய்ய பா.ஜ.க. முயற்சி செய்கிறது. ஏனெனில், மக்கள் மத்தியில் உள்ள கோபத்தைக் கண்டு அக்கட்சி பயந்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ×