என் மலர்
நீங்கள் தேடியது "உளுந்தூர்பேட்டை"
- நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து விபத்து.
- விபத்தில் சிக்கியவர்களை மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டனர்.
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- லாரியை சோதனை செய்தபோது பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன.
- 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர்.
உளுந்தூர்பேட்டை:
புதுவையில் இருந்து மினிலாரி மற்றும் காரில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனாவுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்வாணன் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் இன்று காலை உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி சுங்கசாவடியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்த நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த லாரியை பின்னால் ஜீப்பில் விரட்டி சென்றனர். சிறிது தூரத்தில் அந்த மினிலாரி மற்றும் காரை மடக்கி பிடித்தனர்.
அப்போது லாரி மற்றும் காரில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர். பின்னர் லாரியில் சோதனை நடத்திய போது அதில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன.
அந்த மதுபாட்டில்கள் புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு கடத்தி செல்வது விசாரணையில் தெரியவந்தது. மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ. 30 லட்சமாகும். மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டில்களை கடத்தி வந்த புதுவை அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல்(வயது42), புதுவை ஆண்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை(46),சதீஷ் (31) மற்றும் பண்ருட்டி தட்டாம்பாளையத்தை சேர்ந்த ரங்கா(29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
- 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வழிபட்டனர்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே காட்டு நெமிலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா நடைபெற்றது.
கோவிலில் இருந்து அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு சிங்க வாகனத்தில் மயானம் நோக்கி புறப்பட்ட போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து அங்காளம்மன் மயானத்திற்கு சென்ற பின்னர் அங்கு ஆடு மற்றும் கோழி பலியிடப்பட்டது. பின்னர் படையல் இடப்பட்ட சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மயானத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான திருமணமான புதுமண பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் முட்டிப்போட்டு குழந்தை வரம் கேட்டு வழிபட்டனர்.
அவர்களுக்கு கோவில் பூசாரி எலுமிச்சை பழம் மற்றும் அங்காளம்மனுக்கு படையலிடப்பட்ட ரத்த சோறு ஆகியவற்றை வழங்கினார்.
இதே போல் கடந்த வருடங்களில் குழந்தை இல்லாமல் வேண்டிக் கொண்ட பெண்கள் குழந்தை பிறந்தவுடன் மயானத்திற்கு வந்து குழந்தை வரம் கொடுத்த அங்காளம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குழந்தையை சூறை விட்டு பின்னர் கோவில் பூசாரியிடம் காணிக்கை வழங்கி தங்களது குழந்தைகளை பெற்று சென்றனர்.
இதேபோல் சுடுகாட்டில் தங்களது முன்னோர்களுக்கு அவர்கள் உயிரோடு இருந்த போது விரும்பி சாப்பிட்ட பழங்கள், கொழுக்கட்டை, சுண்டல், கிழங்கு உணவு பொருட்கள் மட்டுமின்றி குவாட்டர் பாட்டில்கள் , குளிர்பானங்கள், பீடி, சிகரெட் உள்ளிட்டவைகள் வைத்தும் குடும்பத்தோடு வழிப்பட்டனர்.
மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு விழாக் குழுவின் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.