search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்"

    • வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
    • வனத்தொட்டியில் தண்ணீர் நிரப்ப மக்கள் கோரிக்கை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக தாளவாடி, பர்கூர் வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. எந்த ஆண்டு இல்லாத வகையில் இந்த ஆண்டு வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. குளம், குட்டைகளும் வரண்டுவிட்டன.

    இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீரை தேடி அருகில் இருக்கும் கிராமங்களுக்குள் நுழையும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தாள வாடி, பர்கூர் வனப்பகு தியில் கடும் வறட்சி நிலவுவதால் பச்சை பச்சை என காட்சியளித்த மரம், செடி, கொடிகள் காய்ந்து விட்டன.

    இந்த வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் வறண்டு விட்டன. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் அருகே இருக்கும் கிராமங்களுக்குள் நுழையும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    இவ்வாறு கிராமங்களு க்குள் நுழையும் யானை களால் விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோ ளம், வாழைமரங்கள், தென்னை மரங்கள் அதிக அளவில் சேதமடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டஈடும் ஏற்பட்டுள்ளது. சில சமயம் யானை களால் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டு விடுகிறது.

    அதேபோன்று மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உணவு, தண்ணீருக்காக யானைகள் அந்த பகுதியில் வரும் வாகனங்களை வழி மறைத்து வருகிறது. வாகனங்களை யானை துரத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

    கிராமத்துக்குள் புகும் யானைகளை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்தும், அதிக ஒலி எழுப்பியும் நீண்ட சிரமத்திற்கு பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

    இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீரை நிரப்ப வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, `தாளவாடி, பர்கூர் மலை கிராமங்களில் உள்ள மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. ஏராளமான விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பல்வேறு பயிர்களை பயிரிட்டு உள்ளனர்.

    ஆனால் வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுயானைகள் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.

    இது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பலர் லட்சக்கணக்கில் நஷ்டங்களை சந்தித்துள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில் வனப்பகுதி முழுவதும் ஆங்காங்கே வனத்துறையினர் தொட்டிகளில் நீர்களை நிரப்ப வேண்டும்.

    இதற்கென்று வனத்துறையினர் பணியாளர்களை நியமித்து தினமும் காலை, மாலை வேலை என இரு வேலைகளில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் நீரை நிரப்ப வேண்டும். இவ்வாறு நீர் நிரப்புவதன் மூலம் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் எண்ணிக்கை குறையும்.

    இதேபோல் வனப்பகுதி முழுவதும் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு வனத்துறையினர் யானை கள் ஊருக்குள் புகாதவாறு அகழிகளை வெட்டி இருந்தனர். தற்போது அவை மண் நிறைந்து சமமாக ஆகிவிட்டது. இதனால் யானைகள் எளிதாக ஊருக்குள் வந்து விடுகிறது. எனவே வனத்துறையினர் மீண்டும் அகழிகளை ஆழமாக வெட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×