search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடுவர்கள்"

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 12 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
    • அவர்களில் ஆறு பேர் 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் இடம்பெற்றிருந்தனர்.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானிலும், துபாயிலும் நடைபெறுகிறது.

    8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில் இந்த தொடருக்கான 12 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அவர்களில் ஆறு பேர் 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் இடம்பெற்றிருந்தனர்.

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முந்தைய சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் நின்ற ரிச்சர்ட் கெட்டில்பரோவுடன் கிறிஸ் கஃபானி, குமார் தர்மசேனா, ரிச்சர்ட் இல்லிங்வொர்த், பால் ரீஃபெல் மற்றும் ராட் டக்கர் ஆகியோர் இணைந்துள்ளனர்,

     

    போட்டி நடுவர்கள் குழுவிற்கு டேவிட் பூன், ரஞ்சன் மதுகல்லே மற்றும் ஆண்ட்ரூ பைக்ராஃப்ட் ஆகியோர் தலைமை தாங்குவார்கள். பூன் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு நடுவராக இருந்தார். அதே நேரத்தில் மதுகல்லே 2013 இறுதிப் போட்டிக்கு பிறகு மீண்டும் வருகிறார். மேலும் பைக்ராஃப்ட் 2017 போட்டியிலும் இடம்பெற்றார்.

    2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்தியாவில் இருந்து எந்த நடுவர்களையும் ஐ.சி.சி தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    நடுவர்கள் விவரம்:-

    குமார் தர்மசேனா

    கிறிஸ் கஃபானி

    மைக்கேல் கோ

    அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்

    ரிச்சர்ட் இல்லிங்வொர்த்

    ரிச்சர்ட் கெட்லெபரோ

    அஹ்சன் ராசா

    பால் ரீஃபெல்

    ஷர்புத்தோலா இப்னே ஷாஹித்

    ரோட்னி டக்கர்

    அலெக்ஸ் வார்ஃப்

    ஜோயல் வில்சன்

    போட்டி நடுவர்கள் விவரம்:-

    டேவிட் பூன்

    ரஞ்சன் மதுகல்லே

    ஆண்ட்ரூ பைக்ராஃப்ட்

    • இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.
    • 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் டோனி ரன் அவுட் ஆகும் போது ரிச்சர்ட் கெட்டில்பரோ கொடுத்த ரியாக்‌ஷன் இப்போது வரை மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

    20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இந்திய, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான நடுவர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிறிஸ் பிரவுன், தர்மசேனா, கஃபேனி, கோஃப், ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், பலேக்கர், ரிச்சர்ட் கெட்டில்பரோ, மதனகோபால், மேனன், சாம் நோகஜ்ஸ்கி, அஹ்சன் ராசா, ரஷீத் ரியாஸ், ரீஃபெல், லாங்டன் ருசேர், ஷாஹித் சைகத், ராட் டக்கர், அலெக்ஸ் வார்ப், வில்சன் மற்றும் ஆசிப் யாகூப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நடுவர் என்றாலே இந்திய அணிக்கு நியாபகம் வருவது ரிச்சர்ட் கெட்டில்பரோ. அவர் நாக் அவுட் சுற்றில் இந்திய அணிக்கான போட்டியில் நடுவராக இருந்தால் அந்த போட்டியில் கிட்டத்தட்ட இந்தியா தோல்வியடைந்து விடும் என்று ரெக்கார்ட் சொல்கிறது.

    குறிப்பாக 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் டோனி ரன் அவுட் ஆகும் போது இவர் கொடுத்த ரியாக்ஷன் இப்போது வரை மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் இவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி சதம் அடிக்க இவர் காரணமாக திகழ்ந்தார்.

     

    வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடிக்க 2 ரன்னும் அணியின் வெற்றிக்கு 2 ரன்னும் தேவை என்ற நிலையில் பந்து வீச்சாளர் வைடு வீசுவார். ஆனால் அதனை நடுவராக இருந்த ரிச்சர்ட் வைடு கொடுக்காமல் ஒரு ரியாக்ஷன் கொடுப்பார். அதுவும் யாராலும் மறந்திருக்க முடியாது. 

    ×