search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவேந்தர் யாதவ்"

    • ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது மக்களவை தேர்தலுக்கு மட்டுமே.
    • வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என டெல்லி காங்கிரஸ் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் தொண்டர்களிடம் பேசியதாவது:

    பூத் அளவில் கட்சியை வலுப்படுத்தவும், மாநிலத்தில் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவும் தொகுதி மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    இந்த கூட்டங்கள் கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. வரவிருக்கும் டில்லி சட்டசபை தேர்தலில் கட்சி சிறப்பாக செயல்படும்.

    சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரசின் ஓட்டு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்பதற்கு இது ஒரு தெளிவான அறிகுறி.

    ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது மக்களவை தேர்தலுக்கு மட்டுமே. எனவே, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும்.

    ஆட்சியில் உள்ள அரசு தங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக சாக்குப்போக்கு கூறிவருகிறது என தெரிவித்தார்.

    • அரவிந்த் சிங் லவ்லி, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
    • எல்லா பொறுப்புகளையும் நிறைவேற்ற கடினமாக உழைப்பேன்.

    டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் முன்னாள் டெல்லி மந்திரி அரவிந்த் சிங் லவ்லி. இவர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

    இதற்கிடையே, கடந்த 28ம் தேதி அன்று தனது கட்சியின் மாநில தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, டெல்லி மாநில காங்கிரசின் இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார்.

    தேவேந்தர் நியமனம் செய்யப்பட்டதற்கும், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம் எல் ஏக்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகினர்.

    இந்நிலையில், டெல்லி காங்கிரஸில் ஏற்பட்டுள்ள தொடர் அரசியல் சலசலப்புகளுக்கு மத்தியில், டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் இடைக்காலத் தலைவராக தேவேந்தர் யாதவ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

    பின்னர் தேவந்தர் சிங் பேசியதாவது:-

    இது எனக்கு ஒரு முக்கியமான நாள். ஏனென்றால் எனக்கு ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என் மீது நம்பிக்கை வைத்ததற்காக தலைமைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    மேலும், எனது எல்லா பொறுப்புகளையும் நிறைவேற்ற கடினமாக உழைப்பேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

    இது கடினமான காலங்கள், ஆனால் நாங்கள் பாடுபடுவோம். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இந்திய கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×