search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெப்ப வாதம்"

    • 127 டிகிரி பாரன்ஹுட் (52.9 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானது.
    • 80 சதவீத மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெயில் தொடர்ந்து பதிவாகி வருகிறது.

    டெல்லியில் கடந்த 29-ந்தேதி நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவாக 127 டிகிரி பாரன்ஹுட் (52.9 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானது.

    வெயிலின் தாக்கம் அதிக மாக உள்ளதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடும், மின்வெட்டு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கு மாறு மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.

    வெப்ப அலை பாதிப்பால் நேற்று மட்டும் உத்தர பிரதேசத்தில் 17 பேரும், பீகாரில் 14 பேரும், ஒடிசா வில் 10 பேரும், ஜார்க்கண் டில் 4 பேரும் உயிரிழந்தனர். இந்த மாநிலங்களில் 1,300-க்கும் மேற்பட்டோர் வெயில் பாதிப்பால் மருத்துவமனை களில் சிகிச்சைப் பெற்று வரு கின்றனர்.

    மத்திய, கிழக்கு மற்றும் வட இந்தியாவில் குறை யாமல் வெப்ப அலை தொடர்ந்து வரும் நிலையில் நேற்று வரை குறைந்தது 54 பேர் வெப்ப வாதத்தால் உயிரிழந்தனர். அதிகபட்ச மாக பீகாரில் 32 பேர் வெப்ப வாதத்தால் உயிரிழந்து விட்டனர்.

    வெப்ப அலை தொடரும் என்பதாலும், வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருவதாலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்பட்டது. அதை உறுதிப்படுத்துவது போல வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்து இருக்கிறது.

    இன்று காலை நிலவரப் படி கடந்த 36 மணி நேரத்தில் மட்டும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்தவர்களில் 45 பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களிலும் வெயில் தாக்கம் மிக மிக அதிகளவு காணப்படுகிறது.

    குறிப்பாக காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெளியே வர முடியாத அளவுக்கு அனல் காற்று வீசுகிறது. இதனால் வட மாநிலங்களில் 80 சதவீத மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் வெப்ப அலை பாதிப்பால் நேற்று உயிரிழந்த 17 பேரில் 15 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டி ருந்த ஊழியர்கள் ஆவர்.

    தீவிர காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புக்கு உள்ளான இவர்கள் மிசாபூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    பீகாரில் வெப்ப பாதிப் பால் உயிரிழந்த 14 பேரில் 10 பேர் தேர்தல் பணியாளர்கள் ஆவர்.

    • 11 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
    • வெப்பவாதம் சம்பந்தமாக சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் வெப்ப வாதம் மற்றும் வெப்ப தாக்கத்தால் ஏற்படும் எதிர்பாராத நோய்களை பொதுமக்கள் சந்திக்க நேரிடும்.

    எனவே பொதுமக்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை எடுத்துள்ளது. இதுபற்றி சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

    வெப்ப அலையை சமாளிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட் டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிளும் மேற் கொள்ள வேண்டிய பணிகள் பற்றி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வெப்பம் சம்பந்தமாக ஏற்படும் நோய் தாக்கங்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன. தேவையான மருத்துவ ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனைகளுக்கு வரும் வெளிநோயாளிகள், பொதுமக்கள் இலவசமாக ஓ.ஆர்.எஸ்.கரைசல் குடித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பஸ், ரெயில் நிலையங்கள் பொதுமக்கள் கூடும் இடங்கள் என 1000 இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மருத்துவமனை களில் 10.37 லட்சம் ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் இருப்பில் உள்ளன. மேலும் கோடை காலம் நிறைவடையும் வரை தடையின்றி வழங்க ஏதுவாக கூடுதலாக 88.77 லட்சம் பாக்கெட்டுகள் கேட்டுள்ளோம்.

    மருத்துவமனைகளில் பாதுகாப்பான குடிநீர் தட்டுபாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து ஆம்பு லன்சுகளிலும் வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்படு பவர்களுக்கு உதவ ஐஸ் ஜெல் பாக்கெட்டுக்கள், ஐஸ் பெட்டிகள், தார்பாலின் ஆகியவற்றை தயாராக வைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    பொதுமக்களும் முன்னெச்சரிக்கையாக பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    வெளியே செல்பவர்கள், வெயில் நேரத்தில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×