என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு"

    • பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி.
    • அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி வருகின்றனர்.

    paபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் போன்றே 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று வழக்கம்போல் அசத்தியுள்ளனர்.

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் பல்வேறு பாடங்களில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.

    பொதுவாக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை வாழ்த்தி கொண்டாடிவது வழக்கம்.

    இந்நிலையில், மன்னார்குடியில் மாணவர் ஒருவர் தேர்ச்சி பெற்றதற்கு ஊர் மக்களே ஒன்றுக்கூடி கொண்டாடி வருகின்றனர்.

    மன்னார்குடியில் உள்ள வடுவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மணிகண்டன் என்ற மாணவன் தனது 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்ச பாஸ் மார்க் எடுத்து 10ம் வகுப்பை தேர்ச்சி பெற்றுள்ளார்.

    அவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்று 500க்கு 210 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    இதனால், மாணவர் மணிகண்டனுக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி ஊர் மக்கள் கொண்டாடியுள்ளனர்.

    • 9-வது வகுப்புடன் நித்யா பள்ளிப் படிப்பை கைவிட்டுள்ளார்
    • நித்யா, காலை சிற்றுண்டி சமையலராக தற்காலிக பணியில் இருந்துகொண்டே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கோவிலூர் கிராமத்தில் தாயும் மகனும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

    9-வது வகுப்புடன் நித்யா பள்ளிப் படிப்பை கைவிட்டுள்ளார். தற்போது கல்வி கற்கும் ஆசை வரவே, கோவிலூர் அரசுப் பள்ளியில் படிக்கும் அவரது மகன் சந்தோஷ் உடன் இணைந்து தனியார் பயிற்சி மையத்தில் படித்து தனித்தேர்வராக 10ம் வகுப்பு தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

    நித்யா, கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி சமையலராக தற்காலிக பணியில் இருந்துகொண்டே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

    அமலா பால் நடிப்பில் வெளியான அம்மா கணக்கு என்ற திரைப்படத்தில் அம்மாவும் மகளும் சேர்ந்து 10 வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். அந்த திரைப்படத்தில் நடந்தது போலவே தற்போது திருவண்ணாமலையில் தாயும் மகனும் 10 வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

    ×