search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணுஉலை"

    • அணுஉலைகளில் ஏற்பட்ட சேதம் காரணமாக அணு கழிவுகள் அங்கு தேங்கி கிடக்கின்றன.
    • அணு கழிவுகளை அகற்ற 40 ஆண்டுகள் வரை ஆகலாம் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

    டோக்கியோ:

    ஜப்பானில் 2011-ம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இதனால் அங்குள்ள புகுஷிமா அணுமின் நிலையம் சேதம் அடைந்தது. அணுமின் நிலையத்திற்குள் கடல்நீர் புகுந்து அங்குள்ள அணுஉலைகள் கடுமையான சேதத்தை சந்தித்தன. இதனால் அதன் செயல்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அணுஉலைகளில் ஏற்பட்ட சேதம் காரணமாக அணு கழிவுகள் அங்கு தேங்கி கிடக்கின்றன.

    இந்த கழிவுகள் மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை அப்புறப்படுத்த ஜப்பான் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் அங்குள்ள அணுஉலை கழிவுகளை அகற்ற நவீன ரோபோவை பயன்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. 3 டன் அளவில் கழிவுகள் இருக்கலாம் என கருதப்படுகிறது. கதிரியக்க அளவினை அறிந்த பின்னர் முழு வீச்சில் இந்த பணி தொடரும் எனவும், இதனை அகற்ற 40 ஆண்டுகள் வரை ஆகலாம் எனவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

    • முதல் மற்றும் 2-வது அணு உலைகள் பராமரிப்பு காரணத்திற்காக அவ்வப்போது நிறுத்தப்படும்.
    • மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக மக்கள் அச்சம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின்திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அதன்மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் 70 சதவீதம் நடந்து முடிந்துவிட்டது. மேலும் 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுமானத்திற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் முதல் மற்றும் 2-வது அணு உலைகள் பராமரிப்பு காரணத்திற்காக அவ்வப்போது நிறுத்தப்படும். அதன்படி 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று காலை நிறுத்தப்பட்டது.

    இந்த பராமரிப்பு பணிகள் முடிவடைய 60 நாட்கள் வரை ஆகலாம். பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என அணுமின் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்திற்கு தினமும் கிடைக்க வேண்டிய 562 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரம் முதலாவது அணு உலை மூலமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் ஒரு நாள் மின் தேவை 21 ஆயிரம் மெகா வாட்டிற்கும் அதிகமாக தேவைப்படும் சூழ்நிலையில் கூடங்குளத்தில் இருந்து கிடைக்க வேண்டிய 562 மெகா வாட் மின் உற்பத்தி பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்படுவதால் மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    ×