என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபுட் பாய்சன்"

    • ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90% வாய்ப்பு
    • மழையால் போட்டி ரத்தானால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

    இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உள்ள கேண்டீனில் வழங்கப்பட்ட உணவினால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டதாக 23 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து விரிவான நடத்த நடத்த வேண்டுமென்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கேன்டீனில் உள்ள உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என்றும் 14 நாட்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சின்னசாமி மைதானத்தில் உள்ள கேண்டீனில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பாக பல புகார்கள் வந்ததாகவும், அதனால் தான் போட்டிக்கு முன்பே உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • சுகாதாரமற்ற உணவை சாப்பிடுவதால் அதிக அளவில் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.
    • ஃபுட் பாய்சனின் முதல் நிலை வயிற்றுவலி, வயிறு மந்தம் ஆகியவை.

    உணவை உணவாக சாப்பிட்டாலும் சரி, மருந்தாக பயன்படுத்தினாலும் சரி, முதலில் நாம் கவனிக்க வேண்டிய்து அளவு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.

    தினசரி நாம் சாப்பிடும் சாதாரண உணவுகளை நாம் அளவோடு தான் சாப்பிட வேண்டும். சரி... அளவு என்பதை யார் நிர்ணயிப்பது?

    ஒவ்வொரு நாளும் ஒரு சராசரி உடலுக்கு என்னென்ன சத்துக்கள் தேவைப்படுகின்றன என்பதையும், அந்த சத்துக்கள் எந்த அளவு தேவை என்பதையும் சராசரி கணக்கு மூலம் அறிவிக்கிறது.


    உதாரணமாக இன்று காலை நாம் சாப்பிட்ட அளவும், மதியம் சாப்பிடுகிற அளவும் ஒன்றாக இருக்குமா, அதாவது இன்று காலை இரண்டு இட்லி சாப்பிட்டால், மறுநாள் காலையும் அதே அளவு தான் சாப்பிட வேண்டும்.

    சரி சாப்பாடு போதும் என்பதை எப்படி தெரிந்துகொள்வது? புரிந்துகொள்ள பல வழிகள் இருக்கின்றன. ஒன்று பசி அடங்கிவிடுவது, இன்னொன்று சாப்பிடும் போது ருசியும் மறைந்து போகும். இந்த அடையாளங்கள் தோன்றினால் வயிறு நிறைந்துவிட்டது என்று அர்த்தம்.

    நம் உடல் தன்னுடைய தேவையையும், செரிக்கும் தன்மையையும் பொறுத்துதான் நம்முடைய பசியையும், அதன் அளவையும் தீர்மானிக்கிறது. அந்த அளவைப் பின்பற்றினால் வயிறு கனமான உணர்வு ஏற்படாது. சாப்பிட்டபின் களைப்பு ஏற்படாது. முன்னிலும் சுறுசுறுப்பாக நம் வேலைகளைத் தொடர முடியும்.


    ஃபுட் பாய்சன் ஏற்பட காரணம்:

    நவீனயுகத்தில் எதையும் அவசரம் அவசரமாக விழுங்கிவிட்டு ஓடுவது, நேரமின்மையைக் காரணம் காட்டி, அன்று சமைத்ததை ஆறு நாட்களுக்குக்கூட பதப்படுத்தி வைத்து சாப்பிடுவது, இவை எல்லாமும் தான் ஃபுட் பாய்சன் ஏற்படக் காரணங்கள். ஃபுட் பாய்சனை நாம் சாதாரணமாக விட்டால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

    சமைக்கும் காய்கறிகள் சரியாகக் கழுவப்படாமல் இருத்தல், சமைத்த உணவை முறையாகப் பதப்படுத்தாமல் இருத்தல், சாப்பிடும் தட்டை சரியாக கழுவாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஃபுட் பாய்சன் ஏற்படும். குறிப்பாக, வெளியிடங்களில் சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடுவதால் அதிக அளவில் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.


    அறிகுறிகள்:

    ஃபுட் பாய்சனின் முதல் நிலை வயிற்றுவலி, வயிறு மந்தம் ஆகியவை. அடுத்த நிலை, குமட்டல். அத்துடன், தலைவலி, ஜுரம் வருவது போல இருக்கும். கடைசி நிலை தீவிரமான வயிற்றுப்போக்கு, வாந்தி. வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும் உடனே நிறுத்தக்கூடாது.

    படிப்படியாகத்தான் நிறுத்த வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கால், நமது உடலில் தேவையில்லாத உணவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகிறது; அது நல்ல விஷயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு அதனை வெளியேற்றத்தான் இப்படி நடக்கிறது.


    ஃபுட்பாய்சனை தடுக்கும் வழிமுறைகள்:

    * சமைப்பவர், சாப்பிடுபவர் கை சுத்தமாக இருக்க வேண்டும். சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    * சமைக்கப் பயன்படுத்தும், கத்தி, பலகை ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பழங்கள், கீரைகள், காய்கறிகள் உபயோகிக்கும் முன் நன்கு கழுவிவிட்டுப் பயன்படுத்துங்கள்.

    * ஃபிரிட்ஜில் வைத்த உணவை எடுத்துப் பயன்படுத்தும் போது, அதன் ஜில்லென்ற தன்மை முற்றிலும் தீரும்வரை வெளியில் வைக்க வேண்டும்.

    * இரண்டு மூன்று நாட்களுக்குப் பயன்படுத்த விரும்புபவர்கள், தனித்தனி பாத்திரங்களில் உணவு பொருளை ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது.


    * உணவில் துர்நாற்றம் அடித்தாலோ பூஞ்சை இருப்பது தெரிந்தாலோ அதை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.

    * செல்லப் பிராணிகளிடம் இருந்து உணவுப் பொருட்களை தள்ளியே வைத்திருங்கள்.

    ×