என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆள் கடத்தல்"

    • சிறுவனின் குடும்பத்துக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
    • போலீசார் மீது நம்பிக்கை இழந்த குடும்பத்தினர் சிறுவனை நேராக நீதிமன்றம் அழைத்துச் சென்று ஆஜர் படுத்தியுள்ளனர்.

    பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சிறுவன் காணாமல் போனதாக அவனது குடும்பத்தினர் பிப்ரவரி 8 ஆம் தேதி போலீசில் புகார் அளித்தனர். சில வாரங்களுக்குப் பிறகு, அல்லல்பட்டி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்டு அடையாளம் காண முடியாத ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.

    அது காணாமல் போன சிறுவன் என கூறி குடும்பத்திடம் அந்த உடல் ஒப்படைக்கப்பட்டது. குடும்பத்தினரும் அந்த உடலை தகனம் செய்தனர். சிறுவனின் குடும்பத்துக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

    ஆனால் அவர்களின் மகன் ஏப்ரல் 17 ஆம் தேதி தர்பங்கா மாவட்ட நீதிமன்றத்தில் உயிருடன் ஆஜராகி தனக்கு நேர்ந்ததை விவரித்துள்ளான். அதாவது, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மூன்று முதல் நான்கு பேர் தனது வாயை துணியால் மூடியதாகவும், அதனால் தான் சுயநினைவை இழந்ததாகவும் தெரிவித்தான்.

    மேலும் விழித்துப் பார்த்தபோது தான் நேபாள் நாட்டில் இருப்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்தான். சந்தர்ப்பம் பார்த்து கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிய சிறுவன், தனது அண்ணனுக்கு வீடியோ கால் செய்துள்ளான். நேபாளுக்கு கிளம்பிச் சென்ற சகோதரன், தம்பியை பத்திரமாக திருப்ப அழைத்து வந்து குடும்பத்துடன் சேர்த்தான்.

    போலீசார் மீது நம்பிக்கை இழந்த குடும்பத்தினர் சிறுவனை நேராக நீதிமன்றம் அழைத்துச் சென்று ஆஜர் படுத்தியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த போலீசார், தகனம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், சிறுவன் கடத்தப்பட்டது குறித்து விசாரிப்போம் என்றும் தெரிவித்தனர். 

    • 5000 இந்தியர்கள் ஆள் கடத்தல் கும்பல்கள் மூலம் கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட சம்பவம் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    5000 இந்தியர்கள் ஆள் கடத்தல் கும்பல்கள் மூலம் கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட சம்பவம் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று கம்போடியாவில் 300 இந்தியர்கள் தங்கள் கையாள்களுக்கு எதிராக 'கிளர்ச்சி' செய்ததாக ஆந்திரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வெளி நாட்டில் கைது செய்யப்பட்டனர்.

    ஆந்திராவைச் சேர்ந்த 150 இளைஞர்கள் கம்போடியாவில் =ஒரு வருடமாக சிக்கிக் கொண்டுள்ளனர், அங்கு சீன ஏஜெண்டுகளால் சிறைபிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மற்றும் டாஸ்க் கேம் மோசடி, பங்குச் சந்தை மோசடி உள்ளிட்டவற்றை செய்ய சீன ஏஜெண்டுகளால் வற்புறுத்தப் படுகிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஏ ரவிசங்கர் கூறுகையில், இந்த கடத்தப்பட்ட இந்தியர்கள் கம்போடியாவில் உள்ள ஜின்பே மற்றும் கம்பவுண்ட், சிஹானூக்வில் ஆகிய இடங்களில் பெரிய அளவிலான கலவரங்களை ஏற்படுத்தினர். இது சைபர் குற்றங்களுக்கான மையமாக கூறப்படுகிறது.

    காவல்துறையின் எண்களுக்கு போன் செய்து அதுதொடர்பான வீடியோக்களை அனுப்பியுள்ளனர். நேற்று சுமார் 300 இந்தியர்கள் கம்போடியாவில் தங்கள் ஏஜெண்டுகளுக்கு எதிராக பெரிய அளவில் 'கிளர்ச்சி' செய்தனர் என்று தெரிவித்தார். மேலும் அவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    முன்னதாக சிங்கப்பூரில் டேட்டா என்ட்ரி வேலை வாங்கித்தருவதாக கூறி இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களைக் கடத்துவதாக மே 18 அன்று, விசாகப்பட்டினம் காவல் துறையினர் சுக்கா ராஜேஷ், எஸ் கொண்டலா ராவ் மற்றும் எம் ஞானேஷ்வர் ராவ் ஆகியோரை மனித கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

    • தனக்கு ஏழு வயதாக இருந்தபோது, ​​ தான் கடத்தப்பட்டதாக போலீசில் கூறினார்
    • உறவினர்கள் வீட்டில் ராஜு திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அவரை வீட்டை விட்டு துரத்தினர்

    நான் தான் சிறு வயதில் காணாமல் போன உங்களது மகன் என்று கூறி நபர் ஒருவர் பல குடும்பங்களில் மோசடி செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    பீம் என்றும் இந்திரராஜ் பல பெயர்களால் அறியப்படும் ராஜு என்பவர் ராஜஸ்தானைச் சேர்த்தவர். 1993 இல், தனக்கு ஏழு வயதாக இருந்தபோது, தான் கடத்தப்பட்டதாகவும் தன்னை குடும்பத்துடன் சேர்த்துவைக்குமாறும் போலீசை அணுகியுள்ளார்.

    போலீசார் அவருக்கு ஒரு வாரத்திற்கு உணவு மற்றும் உடைகளை ஏற்பாடு செய்து சமூக ஊடகங்களில் அவரை பற்றய செய்தியை வெளியிட்டனர். அவர் தங்கள் காணாமல் போன பிள்ளைதான் என்று கூறி ஒரு குடும்பம் போலீசை அணுகி ராஜூவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றது. இந்த செய்தியை ஊடகங்களும் நெகிழ்ச்சியான தருணமாக வெளியிட்டன.

     

    ஒரு மகிழ்ச்சியான கிளைமாக்ஸ் போல தோன்றிய இது உண்மையில் மோசடி என்பது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது. ராஜூவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்ற குடும்பதிற்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு ராஜுவுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ராஜுவின் குட்டு வெளிப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ராஜுவிடம் நடந்த விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

     தெரிந்தவர்கள், உறவினர்கள் வீட்டில் ராஜு திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அவரை கடந்த 2005 ஆம் ஆண்டே வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.

    பின்னர் அவர் தனது அடையாளத்தை மறைத்து இதுவரை ஒன்பது வெவ்வேறு குடும்பங்களை மோசடி செய்துள்ளார். காணாமல் போன மகன் என கூறி ஒரு குடும்பத்துக்குள் செல்லும் ராஜு சிலகாலம் அங்கேயே தங்கி பின் அவர்களின் வீடுகளில் கொள்ளையடித்து, யாரிடமும் கூறாமல் அங்கிருந்து நழுவி அடுத்த குடும்பத்துக்குச் சென்றுள்ளார் . மேலும் அந்த குடும்பங்களிடம் என்ன சொத்து உள்ளது என்பதையும் அலசி ஆராய்ந்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

     

    தனது தாயார் இறந்த பிறகு, உணவுக்காகவே மற்றவர்களின் வீடுகளில் இவ்வாறு வசித்து வந்ததாக போலீசாரிடம் ராஜு கூறியுள்ளார் . இதுவரை அவர் தனது போலி அடையாளத்துடன் இருந்த வீடுகளை தவிர்த்து மேலும் பல குடும்பங்களையும் ஏமாற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பஞ்சாப், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், ஹரியானாவில் ஹிசார் மற்றும் சிர்சா ஆகிய இடங்களில் இவர் இந்த மோசடிகளை அரங்கேற்றியுள்ளார். 

    • சுனிலின் சகோதரர் வேணுகோபால் குப்தாவுக்குக் கடத்தல்காரர்களிடமிருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தது.
    • வீட்டிற்கு செல்ல அவருக்கு கைச்செலவுக்கு ரூ.300 கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

    கர்நாடகாவில் மருத்துவரைக் கடத்தி ரூ. 6 கோடி பணம் கேட்ட மர்ம நபர்கள் பிறகு அவரிடம் ரூ.300 கொடுக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கர்நாடகா மாநிலம் பல்லாரி மாவட்டத்தைச் சேர்த்த மருத்துவர் சுனில்[45 வயது], சூர்யநாராயணப்பேட்டையில் உள்ள சனீஸ்வர கோவில் அருகே கடந்த சனிக்கிழமை காலை 6 மணியளவில் நடைபயிற்சி மேற்கொண்டபோது கடத்தப்பட்டார்.

    டாடா இண்டிகோ காரில் வந்த கடத்தல்காரர்கள் அவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். கடத்தல் சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.  

     

    அதே நாளில் மது வியாபாரியான, சுனிலின் சகோதரர் வேணுகோபால் குப்தாவுக்குக் கடத்தல்காரர்களிடமிருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. அண்ணன் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமானால், ரூ.6 கோடி செலுத்த வேண்டும் என்று கடத்தல்காரர்கள் கேட்டுள்ளனர். இதுதவிர ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கத்தையும் கடத்தல்காரர்கள் கேட்டுள்ளனர்.

    வேணுகோபால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். கடத்தல்காரர்கள் மாவட்ட எல்லையைக் கடக்காமல் இருக்க மாவட்டத்தை விட்டு வெளியேறும் இடங்களைத் தடுத்ததோடு, வாகனங்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

    இதனால் கலக்கமடைந்த கடத்தல்காரர்கள், இரவு 8 மணியளவில் மருத்துவரைத் தொலைதூர இடத்தில் விட்டுவிட்டு, வீட்டிற்கு செல்ல அவருக்கு கைச்செலவுக்கு ரூ.300 கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். அதிர்ச்சியிலிருந்த சுனில் மீட்கப்பட்டார். கடத்தல்காரர்களைத் தேடும் பணியை போலீஸ் தீவிரப்படுத்தி உள்ளது.

    மருத்துவர் சுனிலின் சகோதரர் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதால், ஏதேனும் தொழில் போட்டி காரணமாக கடத்தல் நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தம்பி வேணுகோபால் மாவட்ட மது வியாபாரிகள் சங்க தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×