search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்கிய படிப்பினைகள்"

    • ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் முன்னேறின.
    • இதில் கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இதில் ரன்ரேட் மற்றும் புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    முதல் பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற்ற கொல்கத்தாவும், இரண்டாவது தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இதற்கிடையே, ஐ.பி.எல். இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐ.பி.எல். கோப்பையை 3-வது முறையாக வென்று சாதனை படைத்தது.

    ஐ.பி.எல். என்பது வெறும் கிரிக்கெட் போட்டி மட்டுமின்றி ஸ்போர்ட்மேன்ஷிப்பையும், பொழுதுபோக்கையும் ஒருங்கிணைக்கும் மேடையாக திகழ்கிறது.

    இந்நிலையில், ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில முக்கிய படிப்பினைகளை தெரிந்து கொள்வோம்.

    அமைதியாக இருக்கும் சூழ்நிலையே உங்களிடம் சிறந்ததைக் கொண்டுவரும்

    ஐ.பி.எல். தொடரின் ஆரம்பம் முதலே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. சில ஆட்டங்களில் தோல்வி அடைந்தாலும் சோர்ந்து போகாத அந்த அணி, அடுத்தடுத்த போட்டிகளில் வென்றது. இதனால் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி ஐதராபாத்தை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தி வென்றதுடன், கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    கிரிக்கெட் ஒரு மிக கொடூரமான விளையாட்டு


    கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கோப்பை வென்றது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பை பெற்றுத் தந்த பாட் கம்மின்சை 20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஹைதராபாத் அணி. தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. அணி உரிமையாளரான காவ்யா மாறன் அணி வீரர்களுக்கு உற்சாகம் தந்து பாராட்டியது பேசு பொருளானது.

    வெற்றி பெறுவதற்காக 1 % முயற்சி எடுத்தால் அது 100%-க்கு கொண்டு செல்லும்


    நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் ஒன்றாக பெங்களூருவை யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. முதல் 6 போட்டிகளில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரன்ரேட் அடிப்படையில் சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடிந்தது. இதற்கு அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சிறப்பான ஆட்டமே காரணம் என்றால் மிகையாகாது.

    அதீத நம்பிக்கை மிகவும் ஆபத்தானது


    ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்வதற்கான அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது ராஜஸ்தான் ராயல்ஸ். முதலில் நடந்த போட்டிகளில் அபார வெற்றி பெற்றிருந்தாலும், சில போட்டிகளில் தோல்வி கண்டது. அதீத நம்பிக்கை காரணமாக முக்கியமான ஆட்டத்தில் தோல்வி அடைய நேரிட்டது.

    வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே


    ஐ.பி.எல். சீசனில் சென்னை அணி 5 முறை கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் எம்.எஸ்.டோனி. நடப்பு தொடரே இவருக்கு கடைசி தொடராக இருக்கும் என கூறப்பட்டதால் இவர் களமிறங்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு அளவில்லை. இவரைப் பொறுத்தவரை வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே என கருதுவது வழக்கம். எப்பொழுது இறங்கினாலும் அதிரடியாக ஆடுவதில் வல்லவர். அதனையும் டோனி நிரூபிக்கத் தவறவில்லை.

    எந்த சூழ்நிலையிலும் உங்கள் பழைய நிலைக்கு திரும்ப வேண்டாம்


    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பல ஐ.பி.எல். கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யா மும்பை அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதை ஏற்றுக் கொள்ளாத மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள், போட்டி நடைபெறும்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதை கவனத்தில் கொள்ளாது வரும் காலங்களில் போட்டியில் வெற்றி பெறுவதை மட்டுமே ஹர்திக் பாண்ட்யா யோசித்தால் அவருக்கு நல்லது.

    யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்


    இதுவரை நடந்த 17 ஐ.பி.எல். சீசன்களில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கோப்பையை வென்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ரோகித் சர்மா. அணியின் கேப்டனாக இல்லாதபோதும், இவர் பொறுப்புடனும், நிதானமாகவும் ஆடியிருக்க வேண்டும். தனது அணியின் மீதான அதீத நம்பிக்கையால் அதிரடி தொடக்கத்தை கொடுக்க எண்ணி, விரைவில் பெவிலியன் திரும்புவது இவரது பலவீனம்.

    விளையாட்டில் விசித்திரக் கதை முடிவு இல்லை

    சென்னை அணியின் எம்.எஸ்.டோனி மற்றும் பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக் ஆகியோரது ஆட்டம் நினைவில் கொள்ளும் வகையில் அமைந்தது. இருவரது ஆட்டமும் ரசிகர்களை எப்பொழுதும் சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடும்.

    மோசமான நேரத்தில் சொந்த மக்கள் கூட ஆதரிக்க மாட்டார்கள்


    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய 14 போட்டியில் 7ல் வென்று ரன்ரேட் அடிப்படையில் தொடரிலிருந்து வெளியேறியது. ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் லக்னோ மோசமாக தோற்றதால், அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நாம் மோசமாக விளையாடினால் ரசிகர்கள் நம்மை விரும்ப மாட்டார்கள். வெற்றி பெறுவதற்காக ஓரளவு போராட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ஐ.பி.எல். - மேலும் சில பாடங்கள் :

    ஐ.பி.எல். போட்டிகளில் தனிப்பட்ட நபரின் சாதனைக்கு மதிப்பில்லை. குழுவாக இயங்குவதால் மட்டுமே பலன் கிடைக்கும்.

    தோல்வி மற்றும் சரிவிலிருந்து ஒரு வீரர் எப்படி மீண்டெழுந்து வெற்றி பெறுகிறார் என்பதை கவனிக்கவேண்டும்.

    போட்டியில் வெல்ல வேண்டுமெனில் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப திட்டங்களை வகுக்க வேண்டும்.

    எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் ஒரு வீரர் கவனத்தை சிதறவிடாமல் வெற்றிமீது மட்டுமே கவனம் வைக்க வேண்டும்.

    போட்டியில் இருக்கும் அழுத்தங்களை சிறப்பாக கையாளும் வீரரே வெற்றி பெறுவார்.

    போட்டியில் ஏற்படும் வெற்றி, தோல்விகளை சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தோல்வியை நினைத்து துவண்டு போகாமல் அடுத்தகட்ட முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஐ.பி.எல். கற்றுத் தருகிறது.

    ×