என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடகிழக்கு மாநிலம்"

    • டெல்லியில் இருந்து இன்றிரவு அசாம் புறப்பட்டுச் செல்கிறார்.
    • ஞாயிற்றுக்கிழமை வடக்கிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வடக்கிழக்கு மாநிலங்களுக்கு 3 நாள் பயணமாக இன்று இரவு புறப்பட்டு செல்கிறார்.

    அமித் ஷா டெல்லியில் இருந்து புறப்பட்டு இன்றிரவு அசாம் மாநிலம் ஜோர்ஹாத் சென்றடைகிறார். அங்கிருந்து கோலாகத் மாவட்டத்தில் உள்ள டெர்கானுக்கு செல்கிறார். அங்குள்ள பர்புகான் போலீஸ் அகாடமியில் தங்குகிறார்.

    நாளை காலை போலீஸ் அகாடமியின் 167.4 கோடி ரூபாயில் முடிவடைந்த முதற்கட்ட பணியை தொடங்கி வைக்கிறார். பின்னர் 425.48 கோடி ரூபாய் 2-ஆம் கட்ட பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    பின்னர் அசாமில் இருந்து மிசோரம் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அசாம் ரைபிள்ஸ் ஐஸ்வாலில் இருந்து ஜோகாவ்சங்கிற்கு மாற்றப்படுவதை குறிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் அசாம் மாநிலம் கவுகாத்திற்கு திரும்புகிறார். இரவு மாநில விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    ஞாயிறு காலை அசாம் மாநிலம் கோக்ராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள டோட்மா செல்கிறார். அனைத்து போடோ மாணவர்கள் சங்கத்தின் (ABSU) 57-வது ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்.

    பின்னர் கவுகாத்திக்கு திரும்பும் அமித் ஷா, வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக 8 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார்.

    பின்னர் ஞாயிறு இரவு டெல்லி திரும்புகிறார்.

    • ரீமால் புயல் மேற்கு வங்காளம்- வங்களாதேசம் இடையே கடந்த 26-ந்தேதி கரையை கடந்தது.
    • இந்த புயலால் வடகிழக்கு மாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்தது.

    வட இந்திய பெருங்கடலில் உருவான ரீமால் புயல் மேற்கு வங்காளம் வங்காள தேசம் இடையே கடந்த 26-ந்தேதி கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக கடந்த சில தினங்களாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மாநிலங்களில் கனமழை பெய்தது.

    கனமழையால் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பாலங்கள் உடைந்தன. விளைநிலங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இதனால் இந்திய ராணுவம் மீட்புப் பணியில் ஈடுபட்டது. தற்போது அவர்கள் மக்களை பத்திரமாக வெளியேற்றுவதற்கும், உதவிப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் தற்காலி சாலைகள், பாலங்கள் அமைத்து வருகின்றனர்.

    அசாம் மாநில அரசு நிர்வாகம் கடந்த 27-ந்தேதி உதவுக்கு அழைத்தது. அதன் அடிப்படையில் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படை வீரர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கியது என இந்திய ராணுவம் தெரிவித்தள்ளது.

    அதேபோல் மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலத்திலும் மீட்புப் பணியில் துரிதமாக ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

    மணிப்பூரில் தற்போது வரை 4 ஆயிரம் மக்களை பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து மீட்டுள்ளோம். இதில் 1500 பெண்கள் மற்றும் 800 குழந்தைகள் அடங்குவார்கள். மேலும், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உடடினடியாக கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். அதேபோல் ராணுவ மெடிக்கல் குழு 102 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    ×