என் மலர்
நீங்கள் தேடியது "மெட்ரோ அதிகாரிகள்"
- 32 ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- சர்வே பணிகளை மாநகராட்சி நியமித்த ஏஜென்சி குழுவினர் செய்து வருகின்றனர்.
கோவை:
சென்னையை தொடர்ந்து கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கோவையில் அவினாசி சாலை மற்றும் சத்தி சாலை பகுதிகளில் 32 ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் அவினாசி சாலை மற்றும் சத்தி சாலையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு விரிவான திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ஒப்புதலோடு, கையகப்படுத்த தேவையான நிலங்கள் சர்வே செய்வது, நிலத்திற்கு கீழ் உள்ள சேவைகள் என்னென்ன என்பதை அறிவதற்கான ஆய்வு பணிகள் தொடங்கியுள்ளது.
இந்த பணியை மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் உக்கடம் பஸ் நிலையம் அருகே உள்ள சந்திப்பில் தொடங்கியுள்ளது.
மெட்ரோ ரெயில் இயங்க உள்ள 2 வழித்தடங்களிலும் நிலத்துக்கு கீழ் உள்ள பாதாள சாக்கடை, குடிநீர் மற்றும் கியாஸ் குழாய்கள், மின்புதை வடம், தொலை தொடர்பு வயர்கள் போன்ற சேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த சர்வே பணிகளை மாநகராட்சி நியமித்த ஏஜென்சி குழுவினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த குழுவினர் சரியாக பணிகளை செய்கிறார்களா என, மெட்ரோ ரெயில் நிறுவன துணை மேலாளர் கோகுல், உதவி மேலாளர் வினோத்குமார் ஆகியோர் கோவையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
- கடந்த 17-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
- பூதங்குடி பகுதியில் இருந்து மெட்ரோ அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து தான் சென்னைக்கு அனுப்பி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குகிறது வீராணம் ஏரி. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வெயில் தாக்கம் காரணமாக ஏரி வறண்டதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைப்பதற்காக மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 17-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நீர் கல்லணை, கீழணை வழியாக வடவாறு மூலம் வீராணம் ஏரியை வந்தடைந்தது. இதன் மூலம் வறண்டு கிடந்த ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதையடுத்து சென்னைக்கு மீண்டும் குடிநீர் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. அதன்படி கடந்த 29-ந்தேதி முதல் சென்னைக்கு வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் இடமான பூதங்குடி மற்றும் வெய்யலூர் பகுதியில் தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சி அளித்து வருகிறது. இவை அகலம் குறைந்த பகுதிகள். மற்ற இடங்களில் தண்ணீர் வழக்கம் போல் உள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். கால்நடைகள், பறவைகள் தண்ணீர் குடிப்பதால் ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என்று பீதி அடைந்தனர்.
இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பூதங்குடி பகுதியில் இருந்து மெட்ரோ அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து தான் சென்னைக்கு அனுப்பி வருகின்றனர்.
தற்போது தண்ணீர் பச்சை நிறத்தில் இருப்பதாக தகவல் பரவியது. இதற்கு காரணம் தண்ணீரில் படர்ந்துள்ள பாசி தான். தண்ணீரில் உள்ள செடி, கொடிகள் எல்லாம் சேர்ந்து தெரியும் போது, அவை பச்சை நிறத்தில் தெரிகிறது. மற்றபடி எவ்வித ரசாயனமும் கலக்கவில்லை. தண்ணீரை மெட்ரோ அதிகாரிகள் மாதிரி எடுத்து ஆய்வு செய்து விட்டார்கள். தண்ணீரில் எதுவும் கலக்கவில்லை. ஆகவே பொதுமக்கள் இதுபற்றி அச்சப்பட தேவையில்லை என்றார்.