search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் முடிவுகள் 2024"

    • ஒருநாளைக்கு மூன்று முறை ஆடைகளை மாற்றியவர்கள்,
    • தற்போது ஒரே ஆடையில் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

    சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சி தலைவர் பூபேஷ் பாகல், இந்தியாவில் இன்னும் 6 மாதத்திற்குள் அல்லது ஒரு வருடத்திற்குள் மறுதேர்தல் நடைபெறும் என தான் கணிப்பதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பூபேஷ் பாகல் கூறியதாவது:-

    கட்சி தொண்டர்கள் தயாராக வேண்டும். இன்னும்  ஆறு மாதங்களில் அல்லது ஒரு வருடத்திற்குள் மறுதேர்தல் வரப்போகிறது. யோகி ஆதித்யநாத்தின் நாற்காலி (உ.பி. முதல்வர் பதவி) ஆடிக்கொண்டிருக்கிறது. பாஜன் லால் சர்மா (ராஜஸ்தான் முதல்வர்) தள்ளாடுகிறார். பட்நாவிஸ் ராஜினாமா கூட செய்ய தயாராகிவிட்டார்.

    ஒருநாளைக்கு மூன்று முறை ஆடைகளை மாற்றியவர்கள் (பிரதமர் மோடியை கிண்டல் செய்து) தற்போது ஒரே ஆடையில் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது அல்லது என்ன அணிவது என்பது குறித்து அவர்கள் கவலைப்படப்போவதில்லை.

    கட்சிகளை உடைத்தவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை சிறைக்கு தள்ளியவர்கள், மிரட்டியவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் கற்பித்துள்ளனர்.

    இவ்வாறு பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஜனாதிபதியும் அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து பூபேஷ் பாகல் மேற்கண்டவாறு விமர்சனம் செய்துள்ளார்.

    • உமர் அப்துல்லாவை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற உள்ளார்.
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் போட்டி சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற உள்ளார்.

    இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 542 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் எந்த கட்சியையும் சாராமல் சுயேட்சையாக களம் இறங்கினர். இதில் ஆறு வேட்பாளர்கள் மட்டுமே வெற்றியை ருசிக்க இருக்கிறார்கள்.

    பஞ்சாப் மாநிலம் ஃபரித்காட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியவர் சரப்ஜீத் சிங் கல்சா. இவர் இந்திரா காந்தியை படுகொலை செய்த பியாந்த் சிங்கின் மகன் ஆவார். இவர் ஆம் ஆத்மி வேட்பாளர் கரம்ஜித் சிங் அன்மோலை எதிர்த்து வெற்றி பெற இருக்கிறார். இவர் ஏற்கனவே 2014 மற்றும் 2019-ல் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    இதே மாநிலத்தில் உள்ள கதூர் சாஹிப் தொகுதியில் அம்ரித்பால் சிங் காங்கிரஸ் வேட்பாளரை சிங் ஜிராவை எதிர்த்து வெற்றிபெற இருக்கிறார்.

    மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி தொகுதியில் விஷால் பிரகாஷ்பாபு பாட்டில் வெற்றி பெற உள்ளார். காங்கிரஸ் கட்சி கூட்டணியில் சிவசேனாவுக்கு இந்த தொகுதி கொடுக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சுயேட்சையாக போட்டியிட்டார். இவர் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் வசந்த்தாதா பாட்டில் மகன் ஆவார்.

    காஷ்மீர் லடாக் தொகுதியில் தேசிய மாநாடு கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்ட முகமது ஹனீபா ஜான் வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

    டாமன்&டையூ தொகுதியில் பட்டேல் உமேஷ் பாய் பாபுபாய் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லாவை எதிர்த்து அப்துல் ரஷித் ஷெய்க் வெற்றி பெறும் தருவாயில் உள்ளார்.

    2019-ல் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் நான்கு சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

    1951-52-ல் முதன்முறையாக நடைபெற்ற தேர்தலில் 37 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 1957-ல் 42 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 1962-ல் 20 பேரும், 1984-ல் 13 பேரும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

    ×