என் மலர்
நீங்கள் தேடியது "திருச்சூர்"
- யானைகளில் ஒன்று திடீரென ஆக்கிரோஷமடைந்து ஓட்டமெடுத்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
- யானைப் பாகன்கள் உடனடியாக, யானையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
திருச்சூர் பூரம் திருவிழா ஊர்வலத்தில் பங்கேற்ற யானைகளில் ஒன்று திடீரென ஆக்கிரோஷமடைந்து ஓட்டமெடுத்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 65 பேர் படுகாயம் அடைந்தனர்.
யானைப் பாகன்கள் உடனடியாக, யானையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பாண்டி சமூஹா மடம் சாலையில் நள்ளிரவு 2 மணி அளவில் ஏற்பட்ட இச்சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது
கூட்ட நெரிசலில் சிக்கி காயசமடைந்தவர்கள் மருத்துவமனையில் தெப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொரட்டிகட்டில் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் விஷ்ணு (வயது32), யது கிருஷ்ணன் (29). சம்பவத்தன்று இரவு இவர்கள் இருவரும் திருச்சூர் ஆனந்தபுரத்தில் உள்ள கள்ளுக்கடையில் கள் குடித்துள்ளனர்.
அப்போது குடிபோதையில் அவர்களுக்கிடையே திடீரென தகராறு நடந்துள்ளது. இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்த நிலையில், ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணு, யது கிருஷ்ணனின் தலையில் ஆயுதத்தால் அடித்தார்.
இதில் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த புதுக்காடு போலீசார், சம்பவ இடத் துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு யது கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டது குறித்து வழக்கு பதிந்தனர்.
தம்பியை அடித்துக் கொன்ற விஷ்ணுவை தேடினர். மோதலில் காயமடைந்ததால் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்த அவரை போலீசார் கைது செய்தனர். சிகிச்சை முடிந்ததும் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட்ட தகராறிலேயே யது கிருஷ்ணனை விஷ்ணு கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- மத்திய அமைச்சரவையில் நான் சேருவது குறித்து கட்சி முடிவு செய்யும்.
- நான் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் நடந்த மக்களவை தேர்தலில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது.
மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளிலுமே பா.ஜ.க. தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பா ளர்கள் களமிறக்கப்பட்டனர். இந்த தேர்தல் மூலமாக கேரளாவில் கால்பதிக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய பாரதிய ஜனதா, அதற்கு தகுந்தாற் போல் வேட்பாளர்களை போட்டியிட செய்தது.
மத்திய மந்திரிகள் ராஜீவ் சந்திரசேகர், முரளீதரன், நடிகர் சுரேஷ் கோபி, கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் உள்ளிட்ட வர்களை களமிறக்கியது. அவர்களது வெற்றிக்காக பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
இந்நிலையில் கேரள மாநில மக்களவை தொகுதி களில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி மட்டுமே வெற்றி பெற்றார். இதன்மூலம் கேரளாவில் பாரதிய ஜனதா கால் பதித்தது. அந்த நிலையை தனது வெற்றியின் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு நடிகர் சுரேஷ் கோபி பெற்றுத் தந்திருக்கிறார்.
தேர்தல் பிரசாரத்தின் போதே நடிகர் சுரேஷ்கோபி வெற்றிபெற்றால், அவருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்.
மேலும் கேரள மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட வர்களில் அவர் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் அவருக்கு நிச்சயமாக மத்திய மந்திரி பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் கேபினட் மந்திரி அந்தஸ்தில் அவருக்கு பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியை நடிகர் சுரேஷ்கோபி இன்று நேரில் சந்திக்க உள்ளார். மத்திய மந்திரி பதவி பற்றி நடிகர் சுரேஷ்கோபியிடம் கேட்ட போது, "மத்திய அமைச்சரவையில் நான் சேருவது குறித்து கட்சி முடிவு செய்யும். நான் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்" என்றார்.
- ஆற்றில் மூழ்கி பலியான 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் திருச்சூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள செறுதுருத்தி பகுதியை சேர்ந்தவர் கபீர் (வயது47). பேக்கரி உரிமையாளர். இவரது மனைவி ஷாஹினா(35). இவர்களது மகள் சாரா(10). இவர்கள் 3 பேரும் பாரதப்புழா ஆற்றுக்கு சென்றனர்.
அவர்களுடன் ஷாஹினாவின் தங்கை மகன் புவாத் சனின்(12) என்ற சிறுவனும் சென்றான். கணவன்-மனைவி இருவரும் ஆற்றங்கரையில் நின்று பேசிக் கொண்டிருந்த போது, சிறுமி மற்றும் சிறுவன் ஆகிய இருவரும் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது சிறுமி சாரா எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் விழுந்தாள். இதனைப்பார்த்த சிறுவன் புவாத் சனின், சிறுமியை காப்பாற்ற முயன்றான். ஆனால் இருவரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த கபீர், அவரது மனைவி ஷாஹினா ஆகியோரும் ஆற்றுக்குள் இறங்கினர்.
அப்போது அவர்களும் ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்கள். 4 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், ஆற்றுக்குள் இறங்கி அவர்களை காப்பாற்ற முயன்றனர். அப்போது ஷாஹினாவை மட்டுமே மீட்க முடிந்தது.
அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மற்ற 3 பேரையும் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு கபீர், சிறுமி சாரா, சிறுவன் புவாத் சனின் ஆகிய 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். ஆற்றில் மூழ்கி பலியான 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து செறுதுருத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் திருச்சூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.