என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் படை"

    • கப்பல் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டது.
    • சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    ஏமன்:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் இஸ்ரேல் படையினர் 7 மாதங்களுக்கு மேலாக கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் செங்கடல் பகுதியில் வரும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறி வைத்து அவர்கள் தாக்கி வருகிறார்கள். இதனால் செங்கடல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று செங்கடலில் ரோசா மற்றும் வான்டேஜ் பகுதிகளில் சென்ற கிரேக்க மற்றும் பர்படாஸ் நாட்டை சேர்ந்த 2 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்கினார்கள்.

    மேலும் அரபிக்கடல் பகுதியிலும் அமெரிக்க நாட்டு கப்பல் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தாக்குதலில் சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தான் காரணம்.
    • இது முழுமையான போர் பிரகடனம் என ஹிஸ்புல்லா தெரிவித்தது.

    ஜெருசலேம்:

    லெபனானில் பேஜர் கருவிகள் மற்றும் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்துச் சிதறிய சம்பவங்களில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்றும் இது முழுமையான போர் பிரகடனம் என்றும் ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, வடக்கு இஸ்ரேலிய பகுதிகள்மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் 140 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவி பதில் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலின் விமான படைத்தளங்கள் குறிவைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்தது.

    இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த படைத்தளபதி இப்ராகிம் அகில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

    1983-ம் ஆண்டு பெய்ரூட்டின் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தி 63 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான இப்ராகிம் அகில் குறித்த தகவலுக்கு 7 மில்லியன் டாலர் தொகையை அமெரிக்கா பரிசாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல் தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
    • சிரியாவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்.

    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபராக இருந்த பஷார் அல்-அசாத்தின் அரசாங்க படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் குழு அதிரடி தாக்குதல் நடத்தியது.

    இதில் தலைநகர் டமாஸ்கஸ் உள்பட முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதையடுத்து அசாத்தின் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து நாட்டைவிட்டு தப்பி சென்ற அசாத் ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    இதற்கிடையே சிரியாவில் அதிபர் அசாத் அரசு கவிழ்ந்ததை இஸ்ரேல் வரவேற்று உள்ளது. அதேவேளையில் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களிடம் கிடைத்தால் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதி சிரியாவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    100-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசியது. அசாத் ஆட்சியின் ராணுவ திறன்களை அழிக்க இஸ்ரேல் தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளது.

    இதன்மூலம் ராணுவ ஆயுதங்களை கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்று இஸ்ரேல் கருதுகிறது.

    இந்த தாக்குதலில் பார்சா அறிவியல் ஆய்வு மையம் உள்பட பல இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக, மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்தார்.

    இதற்கிடையே சிரியாவில் அசாத் ஆட்சி கவிழ்ந்த பிறகு அங்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. அதிகார மாற்றம் தொடர்பாக சிரியா பிரதமரை கிளர்ச்சியாளர்கள் குழு தலைவர் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×