என் மலர்
நீங்கள் தேடியது "புதிய வேளாண் சட்டங்கள்"
- விவசாயிகள் போராட்டத்தில் அந்த பெண் காவலரின் தாய் பங்கேற்றிருந்தால், தனது தாயை தீவிரவாதி என்று சொன்னவர் மீது அந்த பெண்ணுக்கு கோபம் வருவது இயல்பே.
- ஒரு எம்.பி தாக்கப்படுவது சரியல்ல தான். ஆனால் விவசாயிகளும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
வடமேற்கு மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரமாக விளங்கும் சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Yea slap can't be justified but why not speak about this slap by Kangana's goon to a lady right when Kangana was there?Why didn't Kangana spoke about that also?Someone slap Kangana she cries and anyone else got slapped she laughs with her troll armypic.twitter.com/5oLFAAttXc
— pawan yadav (@pawanyadav8) June 6, 2024
மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராடியது தெரிந்தததே. இதற்கிடையில் பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசி வருகிறார். இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கானாவை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இந்த இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிராவில் (உத்தவ் தாக்கரே) சிவா சேனாவின் முக்கிய தலைவரான சஞ்சய் ராவத் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் அவர் பேசுகையில், சிலர் வாக்குகளை தருவார்கள், சிலர் அடியைத் தருவார்கள், இந்த விஷயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஒருவேளை விவசாயிகள் போராட்டத்தில் அந்த பெண் காவலரின் தாய் பங்கேற்றிருந்தால், தனது தாயை தீவிரவாதி என்று சொன்னவர் மீது அந்த பெண்ணுக்கு கோபம் வருவது இயல்பே.

#WATCH | Mumbai: On Kangana Ranaut slapped by CISF woman constable, Shiv Sena (UBT) leader Sanjay Raut says, " Some people give votes and some give slaps. I don't know what has happened actually... If the constable has said that her mother was also sitting, then it is true. If… pic.twitter.com/CdrBypPxyc
— ANI (@ANI) June 7, 2024
இந்த விவகாரத்தில் "இந்தியா சட்டத்தின் ஆட்சி நடக்கும் தேசம் என்றும் சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது என்றும் பிரதமர் மோடி சொல்லக்கூடும். ஆனால் தங்களது உரிமைகளுக்காக போராடிய விவசாயிகளும் இந்த தேசத்தின் பிள்ளைகள் தான். ஒவ்வொரு பெண்ணும் பாரத மாதா தான். அந்த வகையில் பாரத மாதாவை ஒருவர் தீவிரவாதி என்று கூறுவாராயின் அதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். ஆனாலும் கங்கானாவுக்காக நான் வருந்துகிறேன். அவர் இப்போது எம்.பி. ஒரு எம்.பி தாக்கப்படுவது சரியல்ல தான். ஆனால் விவசாயிகளும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

- பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
- முகமூடிகள், கண்ணாடிகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்திருந்தனர்
கடந்த 2020ல் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2021 ஆம் ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது.
எனினும், இன்னும் அதற்கு தீர்வு காணப்படவில்லை. இதனை வலியுறுத்தி விவசாயிகள் தற்போது மீண்டும் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். டெல்லியிலேயே முகாமிட்டு விவசாயிகள் போராட்டத்தைத் தொடர இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா எல்லையில் அரியானா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில தினங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
நேற்று முன் தினம் நடந்த டெல்லி சலோ போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கண்ணீர் புகை குண்டுகளால் குறைந்தது 16 விவசாயிகள் காயமடைந்தனர், அவர்களில் ஒருவர் கேட்கும் திறனை இழந்ததாக போராட்டக்குழு தரப்பில் கூறப்பட்டது.

இதனால் நேற்று முன்தினம் தடைபட்ட போராட்டம் இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. விவசாயிகள் பேரணி அறிவிப்பைத் தொடர்ந்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லி எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
அரியானா, பஞ்சாப் எல்லைகளிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் டெல்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று 'டெல்லி சலோ' பேரணியை மீண்டும் தொடங்கினர்.
அந்த வகையில் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு எல்லையில் இன்று மதியம் டெல்லிக்கு மீண்டும் நடைபயணம் மேற்கொண்ட விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
101 விவசாயிகள் கொண்ட குழு டெல்லியை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கியது, அவர்களில் பலர் போலீஸ் வீசும் கண்ணீர் புகை குண்டுகளில் இருந்து தற்காத்து கொள்ள முகமூடிகள், கண்ணாடிகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்திருந்த நிலையில் எதிர்பார்த்தபடியே போலீசார் குண்டுகளை வீசியுள்ளனர். 101 விவசாயிகளுக்கு போராட அனுமதி அளித்ததாகவும், ஆனால் கொடுக்கப்பட்ட போராட்டக்காரர்கள் பட்டியலுக்கு மாறாக வேறு ஆட்களும் அதிகம் பேரும் வந்ததால் குண்டு வீசியதாக போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 2013-ஐ மீண்டும் நடைமுறைப்படுத்துவதோடு, விவசாயிகள் மீதான போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெறவும், 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் கோருகின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என பஞ்சாப் விவசாய தலைவர் சர்வான் சிங் பந்தேர் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.