search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேசி தியாகி"

    • பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து கடும் விவாதம் நடந்து வருகிறது.
    • பலாத்கார வழக்குகளில் ஒரு மாதத்துக்குள் விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து சமீபத்தில் விலகியவர் கே.சி.தியாகி. ஆனாலும் கட்சியில் நீடிப்பேன் என அவர் கடந்த வாரம் தெரிவித்தார்.

    இதற்கிடையே, கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து நாட்டில் கடுமையான விவாதம் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கே.சி. தியாகி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பலாத்கார வழக்குகளில் ஒரு மாதத்துக்குள் விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும்.

    குற்றவாளிகளின் ஆண்மை நீக்கப்பட வேண்டும். கற்பழிப்பாளர்களின் வீரியம் ஒழிக்கப்பட வேண்டும்.

    பெண்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுவதை விட பெரிய கொடுமை வேறு எதுவும் இருக்கமுடியாது.

    கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு இதுபோன்ற தீவிரமான தண்டனை, அவர் தனது கடைசி மூச்சு வரை தனது குற்றத்திற்காக அவதிப்படுவதை உறுதி செய்யும். மேலும், இதுபோன்ற குற்றத்தை யாரும் செய்யத் துணிய மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

    • மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்து வருகிறது.
    • மத்திய பா.ஜ.க. அரசை அக்கட்சியின் மூத்த தலைவரான கே.சி.தியாகி கடுமையாக விமர்சித்தார்.

    புதுடெல்லி:

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்து வருகிறது.

    பா.ஜ.க. அரசு கொண்டு வந்த பொதுசிவில் சட்ட விவகாரம், வக்பு வாரிய மசோதா ஆகிய விவகாரங்களில் ஐக்கிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவரான கே.சி.தியாகி கடுமையாக விமர்சித்தார்.

    இதற்கிடையே, கே.சி.தியாகி விமர்சனத்துக்கு ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவரும், பீகார் முதல் மந்திரியுமான நிதிஷ்குமார் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் தம்மை கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என நிதிஷ்குமாருக்கு கே.சி.தியாகி கடிதம் அனுப்பியிருந்தார்.

    இந்நிலையில், கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து கே.சி.தியாகி தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் கட்சியில் தொடர்ந்து நீடிக்கிறேன் என தெரிவித்தார்.

    இதையடுத்து, கட்சியின் செய்தி தொடர்பாளராக ராஜீவ் ரஞ்சன் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

    • பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
    • மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறுகிறது.

    பாட்னா:

    பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய

    கூட்டணி கட்சிகள் சபாநாயகர் பதவியை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மக்களவை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஐக்கிய ஜனதா தளம் தனது ஆதரவை அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் கே.சி.தியாகி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, கே.சி.தியாகி கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. எனவே, சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.

    • டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகச் செயல்பட்டன. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், கிராமப் புறங்களில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்தது. ஆனால் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்க உழைக்க வேண்டும் என்றார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தருவதற்காக நிதிஷ் குமார் பிரதமர் பதவி கேட்டார் என ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் கே.சி.தியாகி கூறியுள்ளது குறித்து கேட்டனர்.

    இதற்கு பதிலளித்த கே சி வேணுகோபால், இதுதொடர்பாக எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை என தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என காரிய கமிட்டி விடுத்த வேண்டுகோளை ஏற்ற ராகுல் காந்தி, விரைவில் பதில் அளிப்பதாக தெரிவித்தார்.

    ×