search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாறையில் சிக்கிய யானை"

    • யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.
    • கிட்டத்தட்ட அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை மீட்பு.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சர கங்கள் உள்ளன. இங்கு ஏரா ளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலை ஓரங்கள் மற்றும் கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உச்சி மலை வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு பாறைகளுக்கு இடையே அந்த யானை சிக்கிக்கொண்டது. அந்த யானையால் மேற்கொண்டு நகர முடியாமல் நின்றது.

    இதையடுத்து அந்த யானை பிளறியது. சத்தத்தை கேட்டு அந்த பகுதியாக வந்த பொதுமக்கள் யானை பாறைகளுக்கு இடையே சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த யானை ஒரு வழியாக அந்த பாறையின் இடையில் இருந்து வெளியே வந்தது.

    பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போ ன்களில் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத்தள ங்களில் வெளியிட்டுள்ள னர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    ×