search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனநாயக சீர்திருத்த சங்கம்"

    • பதவியில் உள்ள 16 எம்.பிக்கள் மீதும் 135 எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள் உள்ளன.
    • 151 பேரில் அதிகப்படியாக பாஜகவை சேர்ந்த 54 எம்.பி-எம்.எல்.ஏக்கள் மீது இந்த வகை வழக்குகள் உள்ளன.

    இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் சக பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் கொதித்தெழுந்தனர். ஆனால் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 86 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகின்றன. ஒரு மணி நேரத்துக்கு 4 வழக்குகள். அதேசமயம் வெளிச்சத்துக்கு வராமலேயே இருக்கும் பாலியல் குற்றங்கள் பதிவாகும் குற்றங்களை விட பலமடங்கு அதிகம் ஆகும்.

    இந்த நிலையில் இதுபோன்ற குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் 151 எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் Association for Democratic Reforms (ADR) மற்றும் National Election Watch (NEW) ஆகிய அமைப்புகள் இணைந்து ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையின்மூலம் இது தெரியவந்துள்ளது. தற்போது பதவியில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் 2019 முதல் 2024 வரை இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த ஆவணங்களை ஆராய்ந்ததன் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தற்போது பதவியில் உள்ள 16 எம்.பிக்கள் மீதும் 135 எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள் உள்ளன. இந்த 151 பேரில் 2 எம்.பிக்கள் மற்றும் 14 எம்.எல்.ஏக்கள் என 16 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களே மீண்டும் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதும் தெரியவந்துள்ளது.

    151 பேரில் அதிகப்படியாக பாரதிய ஜனதா காட்சியை [பாஜகவை] சேர்ந்த 54 எம்.பி-எம்.எல்.ஏக்கள் மீது இந்த வகை வழக்குகள் உள்ளன. அதைத்தொடர்ந்து காங்கிரசில் 23 பேர் மீதும், தெலுங்கு தேசம் கட்சியில் 17 பேர் மீதும் இந்த வகை வழக்குகள் உள்ளன.மாநில வாரியாக அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் மொத்தமாக 25 எம்.பி-எம்எல்.ஏக்கள் மீது இவ்வகை வழக்குகள் உள்ளன. அதற்கடுத்ததாக ஆந்திராவில் 21 பேர் மீதும், ஒடிசாவில் 17 பேர் மீதும் இவ்வகை வழக்குகள் உள்ளன. 

    • தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாகி புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 99 சதேவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
    • புதிய அமைச்சரவையில் இடப்பெற்றுள்ள 71 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மொத்தம் உள்ள 543 இடங்களில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 71 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

    இந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிக்கு வலுவான போட்டியை வழங்கிய காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றி பாராளுமன்றத்தில் வலுவான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது.

    இந்த தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி சார்பில் நட்சத்திர வேட்பாளர்களும் கோடீஸ்வர வேட்ப்பாளர்களும் அதிகம் களமிறக்கப்பட்டனர். அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாகி புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 99 சதேவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதில் 6 பேருக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளது.

    ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, 71 அமைச்சர்களில் 70 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர், அவர்களின் சொத்துமதிப்பு சராசரியாக ரூ.107.94 கோடியாக உள்ளது. குறிப்பாக என்.டி.ஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சராகியுள்ள சந்திர சேகர பெம்மசானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5705.47 கோடியாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     

     

    முன்னதாக புதிய அமைச்சரவையில் இடப்பெற்றுள்ள 71 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் 39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது
    • பந்தி சஞ்சய் குமார், தாக்கூர், மஜூம்தார், சுரேஷ் கோபி ஜூசால் ஓரம் ஆகிய 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளது.

    இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மோடி 3 வது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றார். அவருடன் 72 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

    இந்த 72 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவர்களில் 19 பேர் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றம், கலவரத்தைத் தூண்டும் வெறுப்பு பேச்சு ஆகிய கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என ஜனநாயக சீர்திருத்த சங்கம் [ ADR ] அறிக்கை வெளியிட்டுள்ளது.

    துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாந்தனு தாக்கூர் மற்றும் தென் கிழக்கு பகுதிகளின் கல்வி - மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க எம்.பி சுகந்தா மஜூம்தார் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி குற்றம் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    28 அமைச்சர்களில் பந்தி சஞ்சய் குமார், தாக்கூர், மஜூம்தார், சுரேஷ் கோபி ஜூசால் ஓரம் ஆகிய 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளது. 8 அமைச்சர்கள் மீது வெறுப்பு பேச்சு வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆக புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் 39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

    ×