என் மலர்
நீங்கள் தேடியது "தவெக கட்சி"
- பரந்தூரில் 1000 நாட்களை கடந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த ஜனவரி மாதம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5300 ஏக்கரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. புதிய விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 1000 நாட்களை கடந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த ஜனவரி மாதம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், 1000 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டும் வகையில், தமிழக வெற்றக் கழக தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை.
- மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு. தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?
கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
*கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு,
*ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும்.
*மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை.
* மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது.
*1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான்.
*1999ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.
*அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை.
*அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால். இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது.
*இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன.
* குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு. எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?
*கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு. கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது.
*எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம். ஒன்றிய பா.ஐ.க. அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது.
*கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு.
*நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும். ஒன்றிய பிரதமர் மோடி கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும்.
*இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க, பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு.
*நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும், தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்.
*போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த. இலங்கை அரசுக்கு ஒன்றிய பிரதமர் அவர்கள், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
*இலங்கை செல்லும் நம் ஒன்றிய பிரதமர், 'கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்' என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம், தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, சமரசமின்றி இவை அனைத்தையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.
- 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயம்.
- இருவரும் மக்கள் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த கட்டமாக கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையொட்டி விஜய் ஆலோசனையின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகிகளுடன் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் ஆலோசனை நடத்தி உறுப்பினர் சேர்க்கைக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வந்தார்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் விஜய் போட்டியிடுவார் எனவும் அறவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு திரைத்துறையில் இருந்து ஆதரவு திரண்டு வருகிறது.
இந்நிலையில், தவெக-வில் நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் மக்கள் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சினிமாவை தாண்டி நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலான மக்கள் மனதில் தனி இடம் பிடித்துவிட்டனர்.
இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.
- கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.
தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். பின்னர் 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.
கட்சி கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளது. கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை உள்ளது.
இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்து இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை நீக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என பகுஜன் சமாஜ் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால், விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு உடன்படாத பட்சத்தில் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
2004ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, ஒரே படத்தை இரு கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என பகுஜன் சமாஜ் கட்சியினர் கூறியுள்ளனர்.
- மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
- விஜய் முக்கிய அறிவிப்பு வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகளுக்கு மாநாடு குறித்த முக்கிய அறிவிப்பு நாளை காலை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய அறிவிப்பு அடங்கிய அறிக்கையை தவெக தலைவர் விஜய் நாளை காலை 11 மணி அளவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அறிக்கையில் மாநாடு குறித்த முக்கிய தகதவல் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இம்மாதம் 23 ஆம் தேதி தவெக கட்சியின் மாநில மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடத்துவதற்கு சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மாநாடு நடக்க உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்பு வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
- அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம் என்றார்.
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது. மதராஸ் மாநிலம் என்ற பெயரைத் தமிழ்நாடு' என மாற்றியது. தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில், அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாநாடு தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- தளபதி மாநாடு நடத்துவதற்கு எந்த தேதியை அறிவிக்கிறாரோ அந்த நாள் எங்களுக்கு வெற்றி திருநாள்.
விக்கிரவாண்டி:
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இந்த அறிவிப்புக்கு பிறகு கட்சியின் முதல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் தீவிரம் காட்டினார்.
இதற்காக முதல் கட்டமாக அவர், கடலூரில் உள்ள பிரபல ஜோதிடர் சந்திரசேகரிடம் கட்சி கொடி மற்றும் மாநாடு நடத்த தேதி ஆகியவை குறித்து கேட்டதாக தெரிகிறது.
அதன்படி, நடிகர் விஜய் கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி, முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கை, கொடியின் விளக்கம், கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து விளக்குவதாக அறிவித்தார். இது விஜய் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து சேலம், திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மாநாடு நடத்துவதற்கான இடத்தை பார்வையிட்டனர்.
இதனால் மாநாடு எங்கு நடைபெறும் என்ற ஆர்வம் மேலோங்கியது. இப்படி இருக்கும் பட்சத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் வருகிற 23-ந் தேதி மாநாடு நடத்துவதற்கு பாதுகாப்பு அளித்திட அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி அக்கட்சியினர் மனு அளித்தனர். இதையடுத்து 21 கேள்விகள் பட்டியலிடப்பட்டு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு கடந்த 2-ந் தேதி விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கடிதம் அனுப்பியிருந்தார்.
தொடர்ந்து போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கான பதிலை கடிதமாக புஸ்சி ஆனந்த் கடந்த 6-ந் தேதி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேசிடம் அளித்தார். அதன் பிறகு மாநாட்டுக்கு அனுமதி வழங்கி 33 நிபந்தனைகளுடன் கூடிய கடிதம் ஒன்றை கடந்த 8-ந் தேதி காவல்துறை வழங்கியது.
இதற்கிடையில் முதல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த பல்வேறு கெடுபிடி போடப்பட்டதால், அதற்கான பணிகள் தொடங்காமல் உள்ளது. மேலும் 23-ந் தேதி திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுமா? என்ற சூழல் உருவானது.
இது ஒருபுறம் இருக்க விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஜய் கட்சியினர் சுவர் விளம்பரங்களில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் மாநாட்டிற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று தொண்டர்களுக்கு நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதனால் மாநாடு தேதி தள்ளிப்போவது உறுதியானது.
இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் கூறுகையில், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் 27 பேரிடம் மாநாடு நடத்த செப்டம்பர் 23-ந் தேதி வரை ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. மொத்தம் 85 ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக கூறி ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் ஒப்பந்த காலம் 23-ந் தேதியுடன் முடிவடைவதால், ஒப்பந்த தேதியை நீட்டிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது என்றனர்.
மேலும் நடிகர் விஜய்யின் ஜாதகப்படி மாநாட்டை அக்டோபர் மாதம் 20-ந் தேதி முதல் 27-ந்தே திக்குள் நடத்தலாம் (அதாவது ஐப்பசி முதல் வாரத்தில்) என ஜோதிடர் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீண்டும் கடலூர் ஜோதிடரை இந்த வாரத்தில் சந்திக்க உள்ளதாகவும், அதன் பிறகு மாநாடு தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மாவட்டத் துணைத் தலைவரும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான பனையபுரம் வடிவேல் கூறியதாவது:-
தளபதியின் தமிழக வெற்றி கழக கட்சியின் அரசியல் முதல் மாநாடு எங்களது மாவட்டத்தில் நடத்துவதற்கு இடம் தேர்வு செய்த எங்கள் தளபதிக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்.
எங்கள் தளபதி மாநாடு நடத்துவதற்கு எந்த தேதியை அறிவிக்கிறாரோ அந்த நாள் எங்களுக்கு வெற்றி திருநாள். அன்று மாநாட்டு வெற்றி திருவிழாவை எங்கள் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம். எங்கள் தளபதியின் உத்தரவுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொண்டர்களின் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ள தனியாக ஒரு வழக்கறிஞர் பிரிவை விஜய் உருவாக்கி உள்ளார்.
- ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், குறைந்தது 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரை அழைத்து வர வேண்டும் என கட்டளை.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை வரும் அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து குறைந்தது 4 லட்சம் பேரை மாநாட்டில் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வீட்டிலிருந்து புறப்படும் தமிழக வெற்றிக் கழக தொண்டன் மாநாட்டில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வரை உள்ள சவால்களை சமாளிப்பது குறித்து விஜய் வியூகம் வகுத்துக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மாநாட்டுக்கு வரும் வாகனங்களின் பதிவெண், இன்சூரன்ஸ், ஆர்.சி. புத்தகத்தை முன்கூட்டியே கட்சி தலைமைக்கு அனுப்ப விஜய் கட்டகளை விடுத்துள்ளார்.
இதுவரை நூற்றுக்கணக்கான வானங்களின் ஆவணங்கள் விஜய் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொண்டர்களின் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ள தனியாக ஒரு வழக்கறிஞர் பிரிவை விஜய் உருவாக்கி உள்ளார்.
மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வானங்களுக்கு யாரேனும் தடை ஏற்படுத்தினாலோ, வாகனங்கள் பிரச்சினையில் சிக்கினாலோ அதை தீர்க்க தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், குறைந்தது 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரை அழைத்து வர வேண்டும் என கட்டளை விடுக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கில் தொண்டர்கள் வருவார்கள் என்பதை காவல்துறையிடம் கூறி, அதற்கான ஏற்பாடுகளை வழங்க தனியாக கோரிக்கை விடுக்கவும் தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.
மேலும், மாநாடு மேடையில் விஜய்யுடன், அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அமர வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் வெள்ளை நிற ஆணை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
- பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் என்று தகவல்.
- மாநாட்டில் விஜய் பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
த.வெ.க. மாநாடு நடைபெற்று இன்றுடன் (நவம்பர் 27) ஒரு மாதம் நிறைவடைவதை ஒட்டி அக்கட்சி தலைவர் விஜய் மாநாட்டு வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 3.15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் மாநாட்டிற்கான பந்தக்கால் வைக்கும் நிகழ்ச்சியின் காட்சிகள், மேடை அமைக்கும் பணிகள், மாநாட்டில் விஜய் பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இத்துடன் த.வெ.க. கட்சியின் பாடல் வீடியோவின் பின்னணியில் ஒலிக்கிறது. வெற்றிக் கொள்கை மாநாட்டின் ஒரு மாத நிறைவை ஒட்டி வெளியிடப்பட்டு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
- ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.
- அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் நேரில் வந்து ஈவிகேஎஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கையாகவும், சமூக வலைதளத்திலும் இரங்கல் செய்தியாகவும் வெளியிட்டுள்ளனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் நேரில் வந்து ஈவிகேஎஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு த.வெ.க சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
- விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
- மாவட்ட செயலாளர்கள் மூலம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நுழைவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.
சென்னை:
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தொடங்கினார்.
அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து முதலாம் ஆண்டு முடிந்து 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள சொகுசு விடுதியில் வருகிற 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பு கட்சியின் 2-ம் ஆண்டு விழாவை பிரமாண்டமாக நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டது. இதையடுத்து பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) கட்சியின் 2-ம் ஆண்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளூயன்ஸ் அரங்கில் வருகிற 26-ந்தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர அளவிலான நிர்வாகிகள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.
26-ந்தேதி காலை 10 மணிக்கு ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. விழாவில் கட்சித்தலைவர் விஜய் சிறப்புரை நிகழ்த்துகிறார். அப்போது விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளார். மேலும் பொதுக்குழு கூட்டம் எப்போது நடத்தப்படும் என்கிற தேதியையும் அவர் அறிவிக்க உள்ளார்.
இந்த ஆண்டு விழாவில் பங்கேற்பவர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது. நுழைவுச்சீட்டு இருப்பவர்கள் மட்டுமே அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் நுழைவுச்சீட்டு வழங்கும் பணி நடந்து வருகிறது.
கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இந்த நுழைவுச்சீட்டுகளை வழங்கினார். மாவட்ட செயலாளர்கள் மூலம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நுழைவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.
2-ம் ஆண்டு விழாவில் பேசும் விஜய், கட்சி சம்பந்தமாகவும், 2026 சட்டசபை தேர்தலை சந்திப்பது தொடர்பாகவும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேச இருக்கிறார். எனவே விழாவில் விஜய் என்ன பேச இருக்கிறார்? என்னென்ன அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரமே பரபரப்பாக எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ஆண்டுவிழாவின் முடிவில் அதில் பங்கேற்பவர்களுக்கு 18 வகையான உணவு வகைகளை கொண்ட அறுசுவை விருந்து வழங்கப்படுகிறது. ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சித்தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பாக செய்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு 121 மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 5 கட்டங்களாக இதுவரை 95 மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரும், பெரிய தொகுதி என்றால் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்ததுடன் அவர்களை தனித்தனியே அழைத்தும் பேசினார். கட்சியில் எப்படி செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 'நீங்கள் அனைவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைவது போல, நானும் அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைவேன். மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க பெரிய பெரிய பணக்காரர்கள் வந்து மோதினார்கள். ஆனால் உங்களை நம்பி, நீங்கள் உழைத்த உழைப்பை நம்பி, மாவட்ட செயலாளர் பதவி தந்துள்ளேன். எனவே மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டும் இந்த பதவியை பயன்படுத்த வேண்டும்' என்று அவர்களிடம் விஜய் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளை தீவிரப்படுத்துவதற்காக கட்சியில் 3 லட்சம் பேருக்கு முக்கிய பதவிகளை வழங்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான அறிவிப்பையும் ஆண்டு விழாவில் விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் ஏற்கனவே 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மாவட்ட செயலாளர்களும் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். விஜய் கட்சியில் மொத்தம் 28 அணிகள் உள்ளன. அதில் குழந்தைகள் அணி, திருநங்கைகள் அணி ஆகியவையும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதுவரை வேறு எந்த கட்சியிலும் இதுபோன்ற அணிகள் கிடையாது. விஜய் கட்சியில் மட்டுமே இந்த அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து அணிகளுக்கும் சேர்த்து தமிழகம் முழுவதும் மொத்தம் 3 லட்சம் பேருக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளன. ஆண்டுவிழா முடிந்ததும் கட்சி நிர்வாகிகளுக்கு இந்த பதவிகள் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் நடிகர் விஜய்யின் அதிரடி விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம், வெற்றி பெறுவதற்காக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தேர்தல் வியூகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு மாவட்டம் வாரியாக இதுவரை என்னென்ன மக்கள் பணிகள் செய்யப்பட்டுள்ளது இனி என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என வியூகம் வகுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் தொடர்பான பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளன. இந்த பணிகள் நிறைவு பெற்றதும், விரைவில் விஜய் முழு வேகத்தில் அரசியலில் ஈடுபட இருக்கிறார். அடுத்த கட்டமாக கட்சியை வலுப்படுத்துவதுடன் மக்களையும் நேரடியாக சந்திக்க தயாராகி வருகிறார். இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று விஜய் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு.
மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்ற எம்.பி. தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட இருப்பதால் தமிழ்நாட்டில் எம்.பி. தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என தகவல்கள் வெளியானது.
இதனை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தன. ஆனால் மத்திய அமைச்சர் அமித் ஷா தொகுதிகள் குறைக்கப்படாது என்று கோவையில் நடந்த விழாவில் தெரிவித்தார்.
ஆனால் இந்த விஷயத்தில் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாளை ( மார்ச் 5) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அ.தி.மு.க. உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் உரிமையை நிலைநாட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு வாருங்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக் கல்கவிஞர் மாளிகை 10-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்துக்கு வந்தார். அவர் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ள அரங்கை நேரில் பார்வையிட்டார்.
ஒவ்வொரு கட்சிக்கும் அமைக்கப்பட்டுள்ள இருக்கை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் அனைத்தையும் ஆய்வு செய்தார். இது குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே. சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்துக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்பது பற்றி கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பை ஏற்றும் தமிழகத்தின் நலன் கருதியும் நாளை நடைபெற இருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து நாளை நடைபெற இருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பங்கேற்க இருக்கிறார்.