search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் ஊழல்"

    • கடந்த ஐந்து ஆண்டுகளில் 43 தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியாகியுள்ளன.
    • இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்குப் பதிலாக, பாஜக அரசு பலவீனப்படுத்துகிறது.

    நீட் பேப்பர் லீக்கானதில் எதிர்க்கட்சிகள் பாஜக-வை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இது ஒரு ஊழல் என வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த நிலையில் பிரிங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஐந்து ஆண்டுகளில் 43 தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியாகியுள்ளன. கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கியுள்ள இந்த பேப்பர் லீக் மோசடி, மோடி தலைமையிலான பாஜக அரசின் கீழ் நாட்டிற்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

    நாம் மிகப்பெரிய அளவில் இளைஞர்களை கொண்ட நாடாக உள்ளோம். இந்த இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்குப் பதிலாக, பாஜக அரசு பலவீனப்படுத்துகிறது.

    வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். அறிவிப்பு வெளியான பிறகு, விண்ணப்பம் செய்ய இளைஞர்கள் செலவு செய்கிறார்கள். அதன்பின் தேர்வு எழுதுவதற்கான பயணம் செய்ய செலவு செய்கிறார்கள். ஊழல் காரணமாக இறுதியாக அவர்களுடைய அனைத்து முயற்சிகளும் வீணாகப் போகிறது.

    இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    • வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகளை கிளம்பியுள்ளது.
    • 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மே 5-ந்தேதி 4750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். ஜூன் 4-ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. ஜூன் 14-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு முன்னதாகவே முடிவுகள் வெளியானது.

    வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகளை கிளம்பியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதாலும், பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்ததும் சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    மேலும் 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நீட் முறைகேடு தொடர்பாக எம்.பி கனிமொஹி தனது எஸ்கே பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாடு முழுவதும் நீட் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை தேவைப்படுகிறது. கருணை மதிப்பெண்களுக்கு அப்பால், பாடத்திட்ட முரண்பாடுகள், பயிற்சி மையத்தின் தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் போன்ற சிக்கல்கள் மாணவர்களின் கனவுகளை தகர்த்துள்ளன. சமூக அநீதியை நிலைநிறுத்துகின்றன. விளிம்புநிலை மாணவர்களின் மருத்துவக் கனவுகளை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு, ஒரே கோரிக்கை.
    • வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

    மே 5-ந்தேதி 4750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். ஜூன் 4-ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. ஜூன் 14-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு முன்னதாகவே முடிவுகள் வெளியானது.

    வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகளை கிளம்பியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதாலும், பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்ததும் சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    மேலும் 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு, ஒரே கோரிக்கை" என்று உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த எக்ஸ் பதிவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அதில், "தமிழ்நாட்டின் சமூகநீதி குரலை உரக்க எதிரொலித்ததற்கு நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார். 

    • தேர்வுக்கு முன்னதாக பேப்பர் லீக்கானதாக பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
    • 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    நீட் தேர்வு மற்றும் முடிவு தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இடதுசாரி மாணவர்கள் பிரிவான, அனைத்து இந்திய மாணவர்கள் சங்கம் (AISA) நாடு தழுவிய இரண்டு நாள் (ஜூன் 19 மற்றும் ஜூன் 20) போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

    67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதாலும், பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்ததும் சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    மேலும் 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    மே 5-ந்தேதி 4750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். ஜூன் 4-ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. ஜூன் 14-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு முன்னதாகவே முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    2024 நீட் தேர்வை ரத்து செய்யும்படி 20 மாணவர்கள் ஒன்றாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், சிபிஐ அல்லது தன்னிச்சதிகாரம் பெற்ற சுதந்திரமான அமைப்பு உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    • நீட் தேர்வின்போது பேப்பர் லீக் ஆகவில்லை என்றால், பீகார் பேப்பர் லீக் காரணமாக 13 குற்றவாளிகளை கைது செய்தது ஏன்?.
    • மோடி அரசு கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை மூலமாக நீட் ஊழலை மூடி மறைக்க தொடங்கியுள்ளது.

    நீட் தேர்வுக்கான பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்தனர். விசாரணை மேற்கொண்டதில் இது தெரிய வந்ததாக பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. ஊழல் நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் நீட் ஊழல் வியாபம் 2.0 என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்றால்தான் 24 லட்சம் மாணவர்களில் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    நீட் ஊழல் தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    மோடி அரசு கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை மூலமாக நீட் ஊழலை மூடி மறைக்க தொடங்கியுள்ளது.

    நீட் தேர்வின்போது பேப்பர் லீக் ஆகவில்லை என்றால், பீகார் பேப்பர் லீக் காரணமாக 13 குற்றவாளிகளை கைது செய்தது ஏன்?. பேப்பரை பரிமாற்றிக் கொள்வதற்காக 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை மாபியா கும்பல், அமைப்புகள் ஈடுபட்டத்தை பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளிப்படுத்தவில்லையா?.

    நீட் மோசடி கும்பல் குஜராத் மாநிலம் கோத்ராவில் பிடிபடவில்லையா? குஜராத் போலீஸின் தகவல்படி, பயிற்சி மையம் நடத்தியவர், ஆசிரியர், மற்றொரு நபர் ஆகியோருக்கு இடையில் 12 கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 24 லட்சம் இளைஞர்களின் ஆசைகளை மோடி அரசு நசுக்கியுள்ளது.

    அரசு கல்லூரிகளில் ஒரு லட்சம் இடங்களில் 55 ஆயிரம் இடங்கள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த முறை மோடி அரசு என்டிஏ-வை தவறாக பயன்படுத்தி மார்க் மற்றும் தரவரிசையில் மோசடி செய்துள்ளது. இதனால் ஒதுக்கீடு இடங்களுக்கான கட்ஆஃப் மார்க் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    ×