என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தையர் தினம்"

    • அப்பாவின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கௌரவிக்கும் நாளாகும்.
    • முதலமைச்சர் தனது தந்தை அவருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    தந்தை யர் தினம் என்பது ஒவ்வொருவரின் வாழ்வில் அவரது அப்பாவின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கௌரவிக்கும் நாளாகும். இந்த நாள் உங்கள் தந்தைக்கு, வாழ்க்கையில் அவர் உங்களுக்காக செய்த தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டிட்டி நன்றி தெரிவிக்கலாம்.

    இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது தந்தை மு. கருணாநிதிக்கு நன்றி மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் தனது தந்தை அவருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடைய வேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று கூறியுள்ளார்.

    • இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடினர்.

    நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    அண்மையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடினர்.

    இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தனது மகன்களுடன் விக்னேஷ் சிவன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நயன்தாரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், "உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கு தந்தையர் தினம் வாழ்த்துக்கள்" என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவைத் திருமணம் செய்து கொண்டார்.
    • இந்த தம்பதிக்கு வமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

    சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தங்களது ஆண் குழந்தைக்கு அகாய் என பெயரிட்டுள்ளனர்.

    இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, தனது மகள் வமிகா செய்த தந்தையர் தின வாழ்த்து அட்டையை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் வமிகாவின் கால்தடம் வண்ணங்களால் பதிக்கப்பட்டுள்ளது.

    அதில், "ஒருவரால் எப்படி இதனை விஷயங்களில் இவ்வளவு திறமையாக இருக்க முடியும்" என்று கோலியை அனுஷ்கா புகழ்ந்துள்ளார்.

    • இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • மகன் அகஸ்தியா உடன் விளையாடும் வீடியோவை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அகஸ்தியா என பெயர் சூட்டினர்.

    இந்நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து பாண்டியா என்ற பெயரை நீக்கியுள்ளார். இன்ஸ்டா பயோ-வில் இருந்து பாண்டியா பெயர் நீக்கப்பட்டு இருப்பதை அடுத்து, இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் அவை எல்லாம் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது.

    இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, தனது மகன் அகஸ்தியா உடன் விளையாடும் வீடியோவை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், "என் வாழ்க்கையில் இவ்வளவு அன்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்ததற்கு நன்றி. முழு மனதுடன் உன்னை நேசிக்கிறேன். எப்போதும் உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.
    • சமூக வலைதளங்களில் டோனி தனது வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடைபெற்றார். அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.


    தந்தையர் தினமான இன்று தனது எக்ஸ் தள பதிவில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் என்று கூறி டோனி மகளுடன் தனது வளர்ப்பு நாயை தொட்டு வருடும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

    தற்போது சமூக வலைதளங்களில் டோனி தனது வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

    • காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்த்தி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.
    • உமா ஹார்த்தி தனது தந்தை பணிபுரியும் தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு வந்துள்ளார்.

    தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் துணை இயக்குநராகப் பணியாற்றும் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்த்தி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.

    ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகி பயிற்சி பெற்று வரும் உமா ஹார்த்தி தனது தந்தை பணிபுரியும் தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு வந்துள்ளார்.

    அப்போது ஐஏஎஸ் உமா ஹார்த்திக்கு அவரது தந்தை வெங்கடேஸ்வரலு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    • ஷிகர் தவான் ஆஷா முகர்ஜியை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
    • இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரர்களில் ஒருவர் ஷிகர் தவான். இவர் ஏற்கனவே திருமணமான ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆஷா முகர்ஜியை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

    இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். ஆஷா முகர்ஜியும் அவரது மகனோடு ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அதனால் தனது மகனை பார்க்க முடியாமல் தவான் தவித்து வருகிறார்.

    இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தவான் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது அப்பா மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    அதில், "என்னுடைய அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். என்னுடைய மகன் என்னுடன் இல்லாமல் நான் கொண்டாடும் தந்தையர் தினம் என்பதால் இது எனக்கு ரொம்ப எமோஷனலாக உள்ளது. என்னால் என் மகனுடன் பேச கூட முடியவில்லை. அனைத்து அப்பாக்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். எல்லாருக்கும் அன்பை பகிர்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தந்தை மகள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது
    • டாக்சி டிரைவர்தான் தனது மகளைக் கொன்றதாக போலீசிடம் நாடகமாடியுள்ளார்.

    தந்தையர் தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில் டெல்லியில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த தனது மகளை தந்தை கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் கஞ்வாலா பகுதியில் ரத்தத்தில் தோய்ந்த இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடந்திய விசாரணையில் அப்பெண்ணின் தந்தையே கொலையை அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது.

    அந்த பெண் தனது காதலனைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய நிலையில் அவரது தந்தை தான் பார்த்த மாப்பிளையை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால் தந்தை மகள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கஞ்வாலா பகுதிக்கு தனது மகளை டாக்சியில் அழைத்து வந்த தந்தை கண்ணாடி அறுக்கும் உபகரணத்தை வைத்து மகளை அறுத்துக் கொன்றுள்ளார்.

    மேலும், டாக்சி டிரைவர்தான் தனது மகளைக் கொன்றதாக போலீசிடம் நாடகமாடியுள்ளார். இறுதியில் உண்மை தெரியவந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை கண்ணாடி அறுக்கும் தொழில் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×