search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்குவங்க ரெயில் விபத்து"

    • எக்ஸ்பிரஸ் ரெயிலின் பின்பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம் புரண்டு, தூக்கி வீசப்பட்டன.
    • சரக்கு ரெயிலின் என்ஜின் பகுதி, பயணிகள் ரெயிலின் மற்றொரு பெட்டியின் அடிப்பகுதியில் புகுந்து நின்றது.

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து அசாம் வழியாக திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவுக்கு கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் டார்ஜிலிங் செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகம்பேர் பயணிப்பார்கள்.

    நேற்று முன்தினம் இரவு இந்த ரெயில் அகர்தலாவில் இருந்து, கொல்கத்தா அருகே உள்ள சீல்டாவுக்கு புறப்பட்டது. ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

    நியூ ஜல்பைகுரி ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரங்கபாணி ரெயில் நிலையம் அருகே நேற்று காலை வந்தபோது, சிக்னலுக்காக கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    அப்போது அதே தடத்தில் வந்த சரக்கு ரெயில் ஒன்று, நின்று கொண்டு இருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.

    இதனால் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பின்பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம் புரண்டு, தூக்கி வீசப்பட்டன. இதில் அந்த 3 பெட்டிகளும் பலத்த சேதம் அடைந்தன.


    அதே நேரம் சரக்கு ரெயிலின் என்ஜின் பகுதி, பயணிகள் ரெயிலின் மற்றொரு பெட்டியின் அடிப்பகுதியில் புகுந்து நின்றது. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயிலின் அந்த பெட்டி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.

    இந்த கோரவிபத்தில், சரக்கு ரெயிலை ஓட்டிவந்த டிரைவர் (லோகோ பைலட்), உதவி டிரைவர் மற்றும் ரெயில்களில் பயணித்தவர்கள் என 9 பேர் பலியானார்கள். 41 பேர் படுகாயம் அடைந்தனர். அதே நேரம் உள்ளூர் போலீசார் கூறுகையில், 'விபத்தில் 15 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்றும், 60 பேர் படுகாயம் அடைந்து இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், ரெயில்வே உயர் அதிகாரிகள், மீட்பு படையினர், போலீசார் அங்கு சென்று உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    சேதமடைந்த ரெயில் பெட்டிகளில் இருந்த உடல்களை மீட்கும் பணியில் போலீசாருடன், உள்ளூர் மக்களும் ஈடுபட்டனர்.

    இதனிடையே, ரெயில் விபத்து நடந்த பகுதியில் நடைபெற்ற மீட்பு பணிகள் காரணமாக இன்று காலை முதல் அப்பகுதியில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதை அடுத்து ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. விபத்து நடந்த பகுதியை ரெயில் கடக்கும்போது மெதுவாக செல்கிறது.

    • ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் மீதுகூட அக்கறை இல்லை
    • தேர்தலை பற்றி மட்டுமே பாஜக அரசுக்கு அக்கறை உள்ளது.

    மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி தகவல் இன்று காலை வெளியானது. இதில் முதலில் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது 9 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    மேற்குவங்க ரெயில் விபத்து, மோடி அரசின் அலட்சியத்தை காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு வருகை தந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ரெயில் பயணிகள் குறித்து மத்திய அரசுக்கு அக்கறை இல்லை.ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் மீதுகூட அக்கறை இல்லை

    தேர்தலை பற்றி மட்டுமே பாஜக அரசுக்கு அக்கறை உள்ளது. தேர்தலில் எப்படி சூழ்ச்சி செய்வது உள்ளிட்டவை தொடர்பாக மட்டுமே பாஜக அரசு செயல்படுகிறது" என்று விமர்சித்துள்ளார்.

    • மேற்குவங்க ரெயில் விபத்து, மோடி அரசின் அலட்சியத்தை காட்டுகிறது
    • உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரிப்பு. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி தகவல் இன்று காலை வெளியானது. இதில் முதலில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரிப்பு. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    மேற்குவங்க ரெயில் விபத்து, மோடி அரசின் அலட்சியத்தை காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ரெயில் விபத்தை காண செல்வது பற்றிய ANI செய்தியில் மோடியின் புகைப்படம் பின்னணியில் இருந்தது. பின்னர் அந்த புகைப்படத்தை ANI மாற்றியுள்ளது.

    இதனை கிண்டல் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் பவன் கெரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ரெயில் விபத்து செய்தியில் 'முதலாளி'யின் படத்தை காட்டக் கூடாது. கூடாது என்றால் கூடாதுதான்" என்று பதிவிட்டுள்ளார். 

    • சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டது.
    • படுகாயமடைந்த 60 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

    மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே ரெயில் விபத்தில் பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் 15பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயமடைந்த 60 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மேற்கு வங்கத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

    அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு அரசு உடனடியாக முழு இழப்பீடு வழங்க வேண்டும்.

    நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள ரெயில் விபத்துக்கள் மோடி அரசின் தவறான நிர்வாகத்தின் மற்றும் அலட்சியப் போக்கின் நேரடி விளைவாகும். இதனால் தினசரி பயணிகளின் உயிர் மற்றும் உடைமை இழப்பு ஏற்படுகிறது.

    இன்றைய விபத்து இந்த உண்மைக்கு மற்றொரு உதாரணம் - பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த அப்பட்டமான அலட்சியத்தை தொடர்ந்து கேள்வி எழுப்பி, இந்த விபத்துக்களுக்கு மோடி அரசை பொறுப்பேற்க வைப்போம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரெயில்வே அமைச்சர் அவரின் பொறுப்பை விட்டுவிட்டு, ரீல்ஸ் பதிவிட்டு வெற்று விளம்பரங்களை செய்வதிலேயே மும்முரமாக இருக்கிறார்.
    • ரெயில்வே துறையை அழிப்பதில் மோடி அரசு மும்முரமாக செயல்படுகிறது.

    மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி தகவல் இன்று காலை வெளியானது. இதில் முதலில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரிப்பு. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    மேற்குவங்க ரெயில் விபத்து, மோடி அரசின் அலட்சியத்தை காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ளது. அதில், "நாட்டில் ஒரு பக்கம் ரெயில் விபத்துகள் நடந்துகொண்டே இருக்கின்றன. மறுபக்கம் ரெயில்வே அமைச்சர் அவரின் பொறுப்பை விட்டுவிட்டு, ரீல்ஸ் பதிவிட்டு வெற்று விளம்பரங்களை செய்வதிலேயே மும்முரமாக இருக்கிறார்.

    மோடி அரசு ரெயில்வே பாதுகாப்புக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக அவர்கள் கூறினர். ஆனால், அதை வைத்து பணம் மட்டுமே சம்பாதித்துள்ளனர்.

    பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறான முறையிலும் பயன்படுத்தியதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது.

    ரெயில்வே துறையை அழிப்பதில் மோடி அரசு மும்முரமாக செயல்படுகிறது. இதன்மூலம் இத்துறையை அவரின் நண்பர்களுக்கு விற்கப் பார்க்கிறது" என்று தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • விபத்தில் பயணிகள் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன.

    மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி தகவல் இன்று காலை வெளியானது. இதில் முதலில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரிப்பு. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழு வீச்சில் நடைபெற்று வரும் மீட்பு பணியில் தேசிய மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் ரெயில் மோதிக்கொண்ட விபத்துக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.



    அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரெயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 8 மணியளவில் விபத்துக்குள்ளானது. ரங்கபாணி ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பின்னால் வந்த சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பயணிகள் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. டமார் என்ற சத்தத்துடன் ரெயில் பெட்டிகள் அதிர்ந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறினர். ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சரக்கு ரெயில் சிக்னலில் நிற்காமல் வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த வழித்தடத்தில் தானியங்கி சிக்னல்கள் உள்ளன. இரண்டு வழித்தடத்திலும் எப்போதும் ரெயில்கள் சென்று கொண்டிருக்கும் பரபரப்பான வழித்தடமாக இது உள்ளது. வடகிழக்கு இந்தியாவை நாட்டின் ஏனைய பகுதிகளை இந்த வழித்தடம் தான் இணைக்கிறது. தற்போது ரெயில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அவ்வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    ×