என் மலர்
நீங்கள் தேடியது "மார்க்கெட்டிங்"
- டார்கெட் முடிக்காத ஊழியர்களுக்கு இத்தகைய கொடூர தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
- இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களை சங்கிலியால் கட்டிவைத்து நாய்களைப் போல மண்டியிட்டு நடக்கவும், தரையில் இருந்து நாணயங்களை நக்கவும் வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் டார்கெட் முடிக்காத ஊழியர்களுக்கு இத்தகைய கொடூர தண்டனை கொடுக்கப்பட்டதாக அந்நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை, ஆனால் இது தொடர்பாக , விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- அந்த அறையில் என்னுடன் பல இளம் பெண்கள் இருந்தனர்.
- எங்களை அடைத்து வைத்து தினமும் அடித்து பாலியல் சித்திரவதை செய்யத் தொடங்கினர்.
பீகார் மாநிலம் முஸாபர்பூரில் உள்ள ஒரு கும்பல் பல பெண்களை அடைத்து வைத்து மாதக்கணக்கில் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சமூக வலைதளங்களின் மூலம் இந்த பெண்களை குறிவைத்த அந்த கும்பல் தங்களின் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை தருவதாக ஆசை வார்த்தை காட்டி வரவழைத்து அவர்களை அடைத்து வைத்து இந்த வெறிச்செயல்களில் ஈடுபட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து தப்பித்த ஒரு பெண் நேராக சென்று காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து இந்த குட்டு வெளிப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் அடைத்துவைக்கப்பட்ட இடத்துக்கு சென்ற போலீசார் பெண்களை மீட்டனர். குற்றத்தில் ஈடுபட்ட 9 பேர் கொண்ட அந்த குமபல் அங்கிருந்து கம்பி நீட்டிய நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிந்து போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இடதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலம் நெஞ்சைப் பதற வைப்பதாக உள்ளது. அவர்களில் ஒரு பெண் தனது வாக்குமூலத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் என்னைத் தொடர்புகொண்டு வேலை தருவதாக உறுதியளித்த அந்த கும்பலை நம்பி சென்றபோது, என்னை ஒரு அறையில் காத்திருக்க சொன்னார்கள்.
அந்த அறையில் என்னுடன் பல இளம் பெண்கள் இருந்தனர். பின்னர் எங்களை வேறொரு இடத்துக்கு கூட்டிச் சென்ற அவர்கள், மேலும் பல பெண்களிடம் போன் செய்து அதிக சம்பளத்தில் வேலை இருப்பதாக சொல்லக் சொன்னார்கள். இப்படியாக பல பெண்கள் சேர்ந்ததும் எங்களை அடைத்து வைத்து தினமும் அடித்து பாலியல் சித்ரவதை செய்யத் தொடங்கினர். அதனால் உருவான எங்களின் கருவையும் கலைத்தனர் என்று தெரிவித்துள்ளார்.
- மோடி , CHAT GPT உருவாக்கிய வாக்கியங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என்று சர்ச்சை எழுந்துள்ளது
- டி20 வெற்றியை மோடி அரசியல் ஆதாயங்களுக்காக மார்க்கெட்டிங் செய்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகிறது
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது. டி20 தொடர் அறிமுகமான 2007 ஆம் ஆண்டு முதல் தொடரில் டோனி தலைமையில் இந்திய அணி அதன்பின் நடந்த தொடர்களில் வெற்றிபெறவில்லை. தற்போது 17 வருடங்கள் களைத்து 2 வது முறையாக இந்தியா உலகக்கோப்பையை வென்றுள்ளதை நாடே கொண்டாடி வருகிறது.
இந்த வெற்றிக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, இந்திய வீரர்களுக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த மோடி, தனது எக்ஸ் தளத்தில் டி20 ஓய்வை அறிவித்த விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு தனியாக வாழ்த்து பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜடேஜாவுக்கு மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவு தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது மோடி , CHAT GPT உருவாக்கிய வாக்கியங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என்று இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.
மோடி ஜடேஜாவுக்கு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'நீங்கள் ஆல் ரவுண்டராக தனித்துவமான முறையில் செயப்பட்டீர்கள். கிரிக்கெட் ரசிகர்கள் உங்களது ஸ்டிரோக் பிளே ஸ்டைலையும்,, அற்புதமான ஃபீல்டிங்கையும் விரும்புகிறார்கள். தற்போதும் கடந்த டி20 போட்டிகளிலும் உங்களின் வசீகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி. உங்களின் பயணம் தொடர எனது வாழ்த்துகள் என்று எழுதியிருந்தார்.
இந்நிலையில் 'டி20 கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு பெற்று விட்டார், அவரை பாராட்டி ஒரு டிவீட் எழுது' என CHAT GPT யிடம் கூறியதற்கு அச்சு அசலாக மோடியின் பதிவு போலவே வாக்கியம் பிசகாமல் CHAT GPT எழுதியுள்ளதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியாவின் டி20 வெற்றியை மோடி அரசியல் ஆதாயங்களுக்காக மார்க்கெட்டிங் செய்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
