என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை பயணம்"

    • இலங்கை நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு.
    • பிரதமருடன் அரவிந்த டி சில்வா, ஜெய சூர்யா, தர்மசேனா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இருந்தனர்.

    தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் நேற்று இரவு இலங்கைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகாரத்துறை மந்திரி விஜித ஹேரத் தலைமையிலான உயர் நிலைக்குழு வரவேற்றது.

    பின்னர் தலைநகர் கொழும்புவில் உள்ள தாஜ்சமுத்ரா நட்சத்திர விடுதியில் தங்கினார். அப்போது அங்கு அவரை இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

    பின்னர், வரவேற்பு முடிந்ததும் மோடிக்கு இலங்கை பிரதமர், மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே அறிமுகம் செய்து வைத்தார்.

    அதன்பின் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து இலங்கை நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக கவுரவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தான் மேற்கொண்டு வரும் பயணம், சந்திப்புகள் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

    அந்த வகையில், பிரதமர் மோடி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களை சந்தித்து உரையாடியுள்ளார். அப்போது, அரவிந்த டி சில்வா, ஜெய சூர்யா, தர்மசேனா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இருந்தனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர், " 1996 உலகக் கோப்பையை வெற்றிகொண்ட அன்றைய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் கலந்துரையாடியதை எண்ணி பெருமகிழ்வடைகின்றேன். இந்த அணியினர் எண்ணற்ற விளையாட்டு ரசிகர்களது மனதைக் கவர்ந்திருந்தனர்!" என்றார்.

    • பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டை நிறைவு செய்த பிரதமர் மோடி இலங்கை சென்றடைந்தார்.
    • பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொள்ளும் 4வது பயணம் இதுவாகும்.

    புதுடெல்லி:

    வங்காள விரிகுடா கடலை எல்லையாகக் கொண்டுள்ள இந்தியா, இலங்கை, வங்காளதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய 7 நாடுகள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றை அமைத்துள்ளன. இந்தக் கூட்டமைப்பு பிம்ஸ்டெக் என அழைக்கப்படுகிறது.

    இதற்கிடையே, பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6-வது உச்சி மாநாடு தாய்லாந்தில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

    இந்நிலையில், பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டை நிறைவு செய்து தாய்லாந்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இலங்கை சென்றடைந்தார். அங்கு அவருக்க் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மூன்று நாள் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி 6-ம் தேதி பயணத்தை நிறைவு செய்கிறார்.

    இந்த பயணத்தின்போது இலங்கை அதிபர் அனுரா குமார தசநாயக, பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரியா ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

    மேலும், இந்திய நிதி உதவியுடன் திரிகோணமலை மாவட்டம் சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 2015ம் ஆண்டு முதல் இலங்கைக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 4வது பயணம் இதுவாகும்.

    • கொழும்பில் இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
    • கடந்த 10 ஆண்டுகளாக இலங்கைக்கு பல 100 கோடி டாலர்கள் மதிப்பிலான கடனை சீனா வழங்கியுள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி இலங்கைக்கு இன்று முதல் 3 நாட்கள் செல்லும் அரசு முறைப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மோடி பிரதமரான பிறகு 2019-இல் இலங்கைக்கு சென்றார். அதன் பிறகு அந்நாட்டுக்கு அவர் மேற்கொள்ளும் 2-வது பயணம் இது. இடைப்பட்ட ஆண்டுகளில் இரு தரப்பும் புவிசார் அரசியல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான பல மாற்றங்களைச் சந்தித்துள்ளன.

    இந்தியாவும் இலங்கையும் நீண்ட பொருளாதார வரலாற்றைக் கொண்ட நாடுகள். இந்தியாவின் முதல் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இலங்கையுடன் 1998-ல் கையொப்பமாகி 2000-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும் வர்த்தக புள்ளி விவரங்களின்படி 2018-ல் 4.67 பில்லியன் டாலராக இருந்த இலங்கைக்கான இந்தியாவின் ஏற்றுமதி, 2023-ல் 3.62 பில்லியன் டாலராக சரிந்தது.

    இதே காலகட்டத்தில் இலங்கையின் இந்தியாவுக்கான ஏற்றுமதி 2018-ல் 1.32 பில்லியன் டாலரிலிருந்து 2023-ல் 991 மில்லியன் டாலராக குறைந்தது.

    இலங்கையில் நாளை (சனிக்கிழமை) அதிபர் அனுர குமார திசாநாயக பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் ஒப்பந்தங்கள் கையொப்பம், முக்கியத் தலைவர்களுடனான சந்திப்புகள் நடக்கின்றன.

    நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) அனுராத புறத்துக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு புனித ஸ்ரீ மகா போதியில் வழிபடுகிறார்.

    கொழும்பில் இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, காணொலி வாயிலாக திருகோணமலையின் சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    வடகிழக்கு நகரமான திருகோண மலையில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அதனால் இந்த இடத்தில் நிறைவேற்றப்படும் திட்டத்தை இந்தியா கேந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது.

    இலங்கைப் பயணத்தின்போது அந்நாட்டு கடற்படையால் தொடர்ந்து சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சனையின் தீவிரம் குறித்தும் பிரதமர் மோடி இலங்கை அதிபர் மற்றும் அந்நாட்டுத் தலைவர்களுடன் பேசத் திட்டமிட்டுள்ளார். இந்த விஷயத்தில் ஏற்கெனவே தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன. பிரதமரின் இலங்கைப் பயணத்துக்குப் பிறகு மீனவர் பிரச்சனை தொடர்பான தீர்வை எட்டுவதற்கான இரு நாட்டு கூட்டுக்குழு கூட்டத்தை அடுத்த சில வாரங்களில் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே நடந்து வருகின்றன.

    இலங்கை அதிபராக அனுரகுமார திசாநாயக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் டிசம்பரில் அவர் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்துக்கு இந்தியாவைத் தேர்வு செய்தார். ஆனால், இந்தியாவைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில் சீனாவுக்கு அவர் சென்றதை இந்தியா விரும்பவில்லை.

    கடந்த 10 ஆண்டுகளாக இலங்கைக்கு பல 100 கோடி டாலர்கள் மதிப்பிலான கடனை சீனா வழங்கியுள்ளது. முன்னதாக, 2017-ம் ஆண்டில் சீனாவிடம் வாங்கிய கடனை, திருப்பிச் செலுத்த முடியாததால், இலங்கை அதன் தெற்கு துறைமுகமான அம்பாந்தோட்டையை பெய்ஜிங்கை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு 1.12 பில்லியன் டாலருக்கு ஒப்படைத்தது.

    அந்த துறைமுகத்தை மையமாக வைத்து இலங்கை செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பல்கள், ராணுவ கப்பல்கள் நாள்கணக்கில் முகாமிட்ட செயல்பாடு, தங்களை வேவு பார்க்கும் சீனாவின் முயற்சி என இந்தியா சந்தேகம் எழுப்பியது.

    இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் சந்திப்பின்போது பரஸ்பர உறவைப் பேண இரு தலைவர்களும் உறுதியளித்துக் கொண்டதை முன்னெடுக்கும் விதமாக இலங்கைப் பயணத்தை பிரதமர் மோடி பயன்படுத்திக் கொள்வார் என்கின்றனர் வெளியுறவு ஆய்வாளர்கள்.

    அதிலும் புவிசார் அரசியல் ரீதியாக அதிபர் திசாநாயக சீனாவுக்கு சென்று திரும்பிய 3 மாதங்களுக்குப் பிந்தைய பிரதமர் மோடியின் கொழும்பு பயணம். நட்புறவுக்கான உறுதிப்பாட்டை நிரூபிக்க இலங்கைக்கு வழங்கப்படும் வாய்ப்பு என நிபுணர்கள் கருதுகின்றனர்.

    உள் கட்டமைப்பில் சீன முதலீடுகள் இலங்கைக்கு முக்கியமாக இருந்தாலும், உள்ளூர் தேவைகளுடன் ஒத்துப்போகும் உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவுடனான தனது கூட்டாண்மையை பன்முகப்படுத்த வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளது.

    பிராந்திய பாதுகாப்பு கண்ணோட்டத்தில், இரு நாடுகளும் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் காலநிலை மாற்ற தாக்கம் உள்ளிட்ட பொதுவான சவால்களை எதிர்கொள்வதால், பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம் கடலோர கண்காணிப்பு, பேரிடர் தயார்நிலை மற்றும் பரஸ்பர நீலப் பொருளாதார முயற்சிகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல சாத்தியமாக்கலாம்.

    பொருளாதார ரீதியாகவும் புவிசார் அரசியல் ரீதியாகவும் ஒரு தவிர்க்க முடியாத கூட்டாளியாக இந்தியா இலங்கைக்குத் தேவை என்பது தொடர்ந்து உணர்த்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் சீனாவை ஒதுக்கிவிட்டு. இந்தியாவைத் தனது உண்மையான கூட்டாளியாக இலங்கை ஏற்பது இயலாது என்றாலும், முன்னுரிமையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத் தான் என்பதை உறுதிப்படுத்துவதாக பிரதமர் மோடியின் இலங்கை பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசிக்கவுள்ள நிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு .
    • பிரதமர் மோடி பங்கேற்று புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.

    பிரதமர் மோடி தாய்லாந்து பயணத்தை தொடர்ந்து, இன்று இலங்கைக்கு செல்ல உள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு இலங்கையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இலங்கை அரசு முறைப் பயணத்தில் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க உடன் பிரதமர் மோடி ஆலோசிக்கவுள்ள நிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவது தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தம், பாதுகாப்புத் துறையில் பயிற்சித் திட்டங்கள் மற்றும் சில உபகரணங்களைப் பெறுவது தொடர்பான ஒப்பந்தம், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு, கிழக்கு மாகாணத்தில் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தையும் மண்டபத்தையும் இணைக்கும் வகையில் ரூ.545 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ரெயில் மேம்பாலத்தின் திறப்பு விழா வரும் 6-ந் தேதி நடைபெறுகிறது.

    பிரதமர் மோடி பங்கேற்று புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.

    இதற்காக, இலங்கையில் இருந்து பிரதமர் மோடியை அழைத்து வருவதற்காக கோவை மாவட்டம் சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்திற்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்கள் செல்ல உள்ளன.

    இதற்காக நேற்று உச்சிப்புளிக்கு வந்த 4 எம். ஐ.17 ஹெலிகாப்டர்கள் இலங்கை காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.

    திறப்பு விழா நடைபெறும் ஏப்ரல் 6-ந்தேதி அன்று காட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இலங்கை அனுராதபுரத்தில் உள்ள விமானப்படை தளத்திற்கு செல்லும்.

    அங்கு காலை 10.40 மணிக்கு பிரதமர் மோடியை அழைத்துக் கொண்டு 11.40 மணிக்கு மண்டபம் முகாம் ஹெலிபேடில் வந்து இறங்கும்.

    இவற்றில் மூன்று ஹெலிகாப்டர் மண்டபத்திற்கும், ஒரு ஹெலிகாப்டர் உச்சிப்புளி கடற்படை தளத்திற்கும் இயக்கப்பட உள்ளன. இதன் ஏற்பாடுகளை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.

    • வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
    • ரணில் விக்ரமசிங்கேயுடன் பிரதமர் மோடி சந்திப்பதற்காக ஆலோசனை நடத்துகிறார்.

    புதுடெல்லி:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயுடன் பிரதமர் மோடி சந்திப்பதற்காக ஆலோசனை நடத்துகிறார். மேலும் இரு நாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்துவதற்காக பல்வேறு உயர்மட்ட பேச்சு வார்த்தையில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.

    பிரதமர் மோடி, ஆகஸ்ட் மாதம் இலங்கையில் பயணம் மேற்கொள்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஒருநாள் பயணமாக இலங்கை சென்றடைந்தார்.
    • புதிய அரசு அமைந்தபின் வெளியுறவுத்துறை மந்திரி மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இது.

    கொழும்பு:

    மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஒரு நாள் பயணமாக இன்று இலங்கை சென்றடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை அந்நாட்டு மந்திரி தாரக பாலசூரியா, கிழக்கு மாகாண கவர்னர் எஸ்.தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு ஜெய்சங்கர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.

    இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.

    அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    முன்னதாக, இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரியையும் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும், காலத்தால் சோதிக்கப்பட்ட நண்பராகவும் இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தப் பயணம் இணைப்புத் திட்டங்களுக்கும், துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் மற்ற ஒத்துழைப்புக்கும் உத்வேகம் சேர்க்கும் என தெரிவித்துள்ளது.

    • இருநாடுகள் இடையிலான கூட்டாண்மையை உறுதி செய்ய பயணம்.
    • தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது குறித்தும் பேச்சுவார்த்தை.

    இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக நாளை இலங்கை செல்கிறார்.

    இலங்கையில் புதிய அதிபர் அநுர குமர திசநாயக்க பதவியேற்றுள்ள நிலையில் இருநாடுகள் இடையிலான கூட்டாண்மையை உறுதி செய்ய பயணம்.

    இருநாட்டு வெளியுறவுக் கொள்கைகளை வலுப்படுத்தும் விதமாக ஜெய்சங்கர் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.

    தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ள நிலையில் அதுகுறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×