என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிதுவேனியா"

    • லிதுவேனியாவில் 1.314 லட்சம் 3-வது நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.
    • ஐரோக்கிய யூனியன் குடியுரிமை பெற்றவர்கள் 10 ஆயிரம் பேர் வெலை பார்த்து வருகிறார்கள்.

    ஐரோப்பிய யூனியனில் உள்ள லிதுவேனியா 3-வது நாடு தொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சட்டத்திற்கு 87 எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர். ஒரு எம்.பி. மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். 8 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

    இது வெளிநாடுகளைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களின் இடம்பெயர்வுகளை சிறந்த முறையில் கட்டுப்படுத்த முடியும் என எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இந்த சட்டத்தின்படி ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து மற்ற நாடுகளில் இருந்து வருடத்திற்கு 40 ஆயிரம் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த எண்ணிக்கை அங்கு நிரந்தரமாக வசிப்போர்களின் எண்ணிக்கையில் 1.4 சதவீதம் ஆகும்.

    வெளிநாாட்டு தொழிலாளர்கள், நிறுவனத்தினற்கான தேவை, தற்காலிக குடியிருப்பு அனுமதிகளை வழங்குவதற்கான நடைமுறை ஆகியவை கடுமையாக்கப்பட்டுள்ளன.

    கடந்த வருட கணக்குப்படி லிதுவேனியாவில் வசித்து வந்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு 2 லட்சமாக உயர்ந்ததாக உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. பெலாரஸ் நாட்டில் இருந்துதான் அதிக அளவில் வருவதாக தெரிவித்துள்ளது. 2023-ல் 1.42 லட்சம் பேர் வந்ததாக தெரிவித்துள்ளது.

    தற்போது லிதுவேனியாவில் 1.314 லட்சம் 3-வது நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலைபார்த்து வருவதாகவும், இது கடந்த ஆண்டைவிட 65.5 சதவீதம் அதிகம் எனவும் தெரிவித்துள்ளது. ஐரோக்கிய யூனியன் குடியுரிமை பெற்றவர்கள் 10 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இது 66.7 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    • இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
    • கமிலே டெக்னைன் கைடேயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை சாவடி தெருவை சேர்ந்தவர் சூரிய குமார். இவர், இத்தாலி நாட்டின் அருகே உள்ள லிதுவேனியா நாட்டில் உள்ள பல்கலைக் கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் படிக்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்றார்.

    அப்போது அவருக்கு அதே பல்கலைக்கழகத்தில் வனவிலங்கு பாதுகாப்பு பட்டய படிப்பு படித்த அதே நாட்டைச் சேர்ந்த கமிலே டெக்னைன் கைடே என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

    கமிலே டெக்னைன் கைடேக்கு வனவிலங்குகள் மீது பற்று அதிகம். அதே போல் சூரியகுமாருக்கும் வனவிலங்குகள் மீது ஆர்வம் அதிகம். இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். நாளடைவில் இது காதலாக மாறியது.

    படிப்பு முடித்ததும் அதே நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருவரும் வேலைக்கு சேர்ந்தனர். இதனால் இருவரது காதலும் மேலும் இறுகியது.

    இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டாரின் பெற்றோரும் ஒப்புக் கொண்டனர்.

    இதையடுத்து கமிலே டெக்னைன் கைடே-சூரிய குமாரின் திருமணம் இன்று காலை ஊத்துக்கோட்டை செட்டி தெருவில் உள்ள பெரிய ஆண்டவர் கோவிலில் தமிழக பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. கமிலே டெக்னைன் கைடேயின் கழுத்தில் சூரியகுமார் தாலிகட்டியதும் உற்சாக குரல் எழுப்பினர்.

    இதில் கமிலே டெக்னைன் கைடேயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பாரம்பரிய உடையான பட்டுப் புடவை அணிந்து வந்து கலக்கினர்.

    ×