என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட தலைவர்கள்"

    • தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 72 மாவட்டங்கள் உள்ளன.
    • கூடுதல் மாவட்டங்களை உருவாக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் 4 மாவட்டங்களுக்கு தலைவர் பதவி காலியாக உள்ளது.

    வழக்கமாக புதிய மாநில தலைவர் பதவிக்கு வந்ததும் தனது ஆதரவாளர்களை மாவட்ட தலைவர்களாக நியமிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போதைய மாநில தலைவர் செல்வப் பெருந்தகை 40 மாவட்ட தலைவர்கள் வரை மாற்றி விட்டு புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது.

    இதற்காக மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் சென்றார். இன்னும் பல மாவட்டங்களுக்கு செல்லவில்லை. அடுத்த வாரம் முதல் மீண்டும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். இந்த சுற்றுப்பயணம் முடிந்ததும் மாவட்ட தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையில் கட்சி பணியை தீவிரப்படுத்த மாவட்டங்களை பிரித்து கூடுதல் மாவட்டங்களை உருவாக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.

    அதாவது 2 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் 117 மாவட்டங்களை உருவாக்க முடிவு செய்துள்ளார்கள். இதன் மூலம் கூடுதலான 45 புதிய மாவட்டங்கள் உருவாகும். நிர்வாகிகள் பலருக்கு இதன் மூலம் புதிய பதவிகளும் கிடைக்கும்.

    புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டாலும் புதிய மாவட்ட தலைவர்களும் நியமிக்கப்படுவார்கள்.

    இதில் 10 பேர் வரை பெண்களாகவும், சிறுபான்மையினர், இளைஞர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாகவும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக வாக்குகள் வாங்கிய 3 பேரை தேர்வு செய்தனர்.
    • பட்டியலில் ஒருவரை தலைவராக தேர்வு செய்து அகில இந்திய தலைமை விரைவில் அறிவிக்கும்.

    தமிழகத்தில்பாஜக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மாவட்ட தலைவர்களை தேர்ந்து எடுக்கும் தேர்தல் 66 மாவட்டங்களில் நடந்து முடிந்து உள்ளது.

    இந்த தேர்தலில் கிளை, நகரம், மண்டலம், மாவட்ட, முன்னாள் நிர்வாகிகள் வாக்களித்தனர். ஒவவொரு மாவட்டத்திற்கும் 3 பேரை தேர்வு செய்யும் வகையில் 3 பெயர்களை எழுதி வாக்கு பெட்டியில் போட வேண் டும் என்ற அடிப்படையில் இத்தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து பெட்டிகள் சென்னை யில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளான சக்கரவர்த்தி, கராத்தே தியாகராஜன், வி.பி.துரை சாமி, சுமதி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் இன்று காலை மாவட்ட வாரியாக வாக்கு எண்ணிக்கை நடந்தது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக வாக்குகள் வாங்கிய 3 பேரை தேர்வு செய்தனர். யார் பெயர் அதிகமாக வாக்கு சீட்டில் குறிப்பிடப்பட்டு இருந்ததோ அதில் இருந்து 3 பேரை தேர்வு செய்ய வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை.

    அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு மையக் குழுவிடம் ஒப்படைத்தனர். மையக்குழு அந்த பட்டியலை டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவார்கள்.

    மாவட்டம் வாரியாக அனுப்பப்படுகின்ற பட்டியலில் ஒருவரை தலைவராக தேர்வு செய்து அகில இந்திய தலைமை விரைவில் அறிவிக்கும் என்று கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழிகாட்டுதலின்படி நல்லாட்சியைக் கொண்டு வர வேண்டும்.
    • தேர்தலில் வெற்றிப்பெற்ற புதிய மாவட்ட தலைவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பாஜக உட்கட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி, தென்காசிக்கு ஸ்ரீதர் வேம்புவின் நெருங்கிய நண்பர் ஆனந்த் அய்யாசாமி, கோவை மேற்கு - சந்திரசேகர், நெல்லை வடக்கு முத்து பலவேசம், சேலம்- சசி. தேனி - ராஜபாண்டியன் உட்பட நீலகிரி, அரியலூர், காஞ்சி, குமரி, கடலூர், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், தேர்தலில் வெற்றிப்பெற்ற புதிய மாவட்ட தலைவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இகுதுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பாஜகவின்

    புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி

    அவர்கள் வழிகாட்டுதலின்படி நல்லாட்சியைக் கொண்டு வரவும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நமது தமிழகத்தைக் கொண்டு செல்லவும், அயராது உழைக்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×