என் மலர்
நீங்கள் தேடியது "பங்குச் சந்தை"
- மூன்று நாட்களில் சென்செக்ஸ் 1950.92 புள்ளிகள் சரிந்ததுள்ளது.
- நேற்று சென்செக்ஸ் 1,064.12 சரிவை சந்தித்த நிலையில் இன்று 502.25 புள்ளிகள் சரிந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்றுடன் தொடர்ந்து 3-வது நாட்களாக வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (நேற்று முன்தினம்) சென்செக்ஸ் 384.55 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று சென்செக்ஸ் 1,064.12 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இதனால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 4.92 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்தது.
இந்த நிலையில்தான் இன்றும் சரிவை சந்தித்துள்ளது. நேற்றைய வர்த்தகம் சென்செக்ஸ் 80,684.45 புள்ளிகளில் முடிவடைந்த நிலையில் இன்று காலை 80,666.26 புள்ளிகளில் வர்த்தகம் ஆரம்பமானது.
இன்று அதிகபட்சமாக 80,868.02 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 80,050.07 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக சென்செக்ஸ் 502.25 புள்ளிகள் குறைந்தது 80182.20 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது. மூன்று நாட்களில் சென்செக்ஸ் 1950.92 புள்ளிகள் சரிந்துள்ளது.
ஏற்றம் மற்றும் இறக்கம் கண்ட நிறுவன பங்குகள்
ஹெச்.டி.எஃப்.சி., பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, எஸ்.பி.ஐ., எல்&டி பங்குகள் சரிவை எதிர்கொண்டன.
ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., இன்போசிஸ், ஐ.டி.சி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா பங்குகள் ஏற்றம் கண்டன.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50-யும் இன்று சரிவை சந்தித்தது. நிஃப்டி 137.15 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று நிஃப்டி 24,336.00 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று நிஃப்டி 24,297.95 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக 24,394.45 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 24,149.85 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக 24,198.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
- கடந்த மூன்று நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வந்ததால், முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்.
- அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிந்து வருவதாக கூறப்படுகிறது.
இன்று தொடங்கிய இந்தியா பங்குச் சந்தை வர்த்தகம் ஆரம்பத்திலேயே 1000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்து உள்ளதாக கூறப்படும் செய்தி செய்தி முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஆயிரத்து ஒரு புள்ளிகள் சரிந்து, 79 ஆயிரத்து 180 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 288 புள்ளிகள் சரிந்து, 23 ஆயிரத்து 909 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் எந்த ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகளும் உயரவில்லை என்றும், கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிந்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த மூன்று நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வந்ததால், முதலீட்டாளர்களுக்கு ஏராளமான நஷ்டம் அடைந்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 1,176.46 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
- இந்த வாரம் முழுவதும் 4 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்து வர்த்தகம் ஆனது.
இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் இந்த வாரத்தின் ஐந்து நாட்களும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து இன்றைய வர்த்தகம் சென்செக்ஸ் 78,041.59 புள்ளிகள் நிறைவடைந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் சென்செக்ஸ் 3,932.86 புள்ளிகள் சரிந்துள்ளது.
நேற்று 79,218.05 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 79,335.48 புள்ளிகளில் வர்த்தம் தொடங்கியது. வர்த்தகம் தெடங்கிய சிறிது நேரத்தில் உயர்வை சந்தித்தது. 9.45 மணியளவில் 79,587.15 புள்ளிகள் வர்த்தகம் ஆனது.
இதனால் தொடர்ந்து உயர்வு இருக்கும் என முதலீட்டாளர்கள் நினைத்த நிலையில், உடனடியாக தலைகீழாக இறக்கம் கண்டனம். இன்று குறைந்த பட்சமாக 77,874.59 புள்ளிகள் வர்த்தகம் ஆனது. வர்த்தகம நிறைவடையும் நேரத்தில் சற்று உயர்வை சந்தித்து 78,041.59 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1176.45 புள்ளிகள் சரிந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 82,133.12 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. திங்கட்கிழமை 82,000.31 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி, 81,748.57புள்ளிகளில் நிறைவடைந்தது. அன்றைய தினம் 384.53 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகம் 81,511.81 புள்ளிகளில் தொடங்கி 80,684.45 புள்ளிகளில் நிறைவடைந்தது. 1,064.12 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
புதன்கிழமை 80,666.26 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி, 80,182.20 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. 502.25 புள்ளிகள் குறைந்த வர்த்தகம் நிறைவடைந்தது.
நேற்று வியாழக்கிழமை 79,029.03 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி 79,218.61 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. 939.59 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று 79,335.48 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. 78,041.59 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. 1176.46 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
- கடந்த ஐந்து நாட்களில் சென்செக்ஸ் 3,932.86 புள்ளிகள் சரிந்தது.
- வாரத்தின் 5-வது நாளிலும் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் கடும் சரிவுடன் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் இந்த வாரத்தின் ஐந்து நாட்களும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து நேற்றைய வர்த்தகம் சென்செக்ஸ் 78,041.59 புள்ளிகள் நிறைவடைந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் சென்செக்ஸ் 3,932.86 புள்ளிகள் சரிந்தது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பது போன்ற காரணங்களால் வாரத்தின் 5-வது நாளிலும் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் கடும் சரிவுடன் நிறைவடைந்தது.
இதே போல் மும்பை பங்குச்சந்தை எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.9 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., எல் அண்டு டி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா பங்குகள் ஏற்றம் கண்டன.
- டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர் பங்குகள் சரிவை சந்தித்தன.
ஆண்டின் இறுதி நாளான இன்று (டிசம்பர் 31-ந்தேதி) இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை சரிந்து வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் நேற்று 78,248.13 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 262.56 புள்ளிகள் குறைந்து 77,982.57 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
பின்னர் இன்று குறைந்தப் பட்சமாக சென்செக்ஸ் 77,560.79 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 78,305.34 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக சென்செக்ஸ் 109.12 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 78,139.01 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
அதேபோல் நிஃப்டி மிகப்பெரிய அளவில் உயர்வு மற்றும் சரிவு இல்லாமல் பாயிண்ட் 10 (.10) புள்ளிகள் மட்டுமே குறைந்து வர்த்தகம் நிறைவு பெற்றது.

இந்திய பங்குச் சந்தை நேற்று நிஃப்டி 23,644.90 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 84.30 புள்ளிகள் சரிந்து நிஃப்டி 23,560.60 புள்ளிகளில் வர்த்தம் தொட்ங்கியது. குறைந்த பட்சமாக நிஃப்டி 23,460.45 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக நிஃப்டி 23,689.85 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக -.10 புள்ளிகள் குறைந்து 23,644.80 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., எல் அண்டு டி, சன் பார்மாசெயுட்டிகள், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, கோடக் மஹிந்திரா பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றம் கண்டன.
டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் பேங்க், டைடன் பங்குகள் சரிவை சந்தித்தன.
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், இன்போசிஸ், ஐ.டி.சி., எல் அண்டு டி பங்குகள் உயர்வு.
- இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், சொமேட்டோ, அதானி போர்ட்ஸ், நெஸ்லே இந்தியா, டாடா ஸ்டீல் பங்குகள் சரிவு.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 368.40 புள்ளிகள் உயர்வுடனும், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 98.10 புள்ளிகள் உயர்வுடனும் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 78,139.01 புள்ளிகளுடன் நேற்று நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு சுமார் சென்செக்ஸ் 126 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 78,265.07 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆரம்பமானது. அதன்பின் மெல்லமெல்ல உயர்ந்து கொண்டே சென்றது. காலை 11.20 மணியளவில் 78,610 புள்ளிகளை தொட்டது. அதன்பின் 12 மணியளவில் 78,320 புள்ளிகளுக்கு சரிந்தது. பின்னர் ஏற்றம் கண்டு முடிவில் 368.40 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 78,507.41 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று குறைந்த பட்சமாக 77898.30 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 78756.49 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
நிஃப்டி
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23,644.80 புள்ளிகளில் நேற்று வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை ஏழு புள்ளிகள் சரிந்து நிஃப்டி 23,637.65 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. 10 மணியளவில் 23,569 புள்ளிகளில் வர்த்தகமானது.

அதன்பின் நிஃப்டி உயர ஆரம்பித்தது. இறுதியாக நிஃப்டி 98.10 புள்ளிகள் உயர்ந்து இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23,742.90 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று நிஃப்டி அதிக பட்சமாக 23,822.80 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக நிஃப்டி 23,562.80 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
உயர்வை சந்தித்த பங்குகள்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், இன்போசிஸ், ஐ.டி.சி., எல் அண்டு டி, சன் பார்மசெயுட்டிகள், பஜாஜ் பைனான்ஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, கேடக் மஹிந்திரா பேங்க், மாருதி சுசிகி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்சிஸ் பேங்க், டைட்டன், பவர் கிரிட் கார்ப், டாடா மோட்டார்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டன.
சரிவை சந்தித்த பங்குகள்
இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், சொமேட்டோ, அதானி போர்ட்ஸ், நெஸ்லே இந்தியா, டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா பங்குகள் சரிவை எதிர்கொண்டன.
- மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் நேற்று 1,436.30 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
- நிஃப்டி நேற்று 445.75 புள்ளிகள் உயர்ந்து 24,188.68 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 720.60 புள்ளிகள் குறைந்து இன்று வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய வர்த்தகத்தில் 1,436.30 புள்ளிகள் உயர்ந்திருந்தது.
நேற்று வர்த்தகம் சென்செக்ஸ் 79,943.71 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் இன்று காலை சுமார் 130 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் 80,072.99 புள்ளிகள் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 80,072.99 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக சென்செக்ஸ் 79,109.773 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக சென்செக்ஸ் 720.60 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 79,223.11 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி

நேற்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 445.75 புள்ளிகள் உயர்ந்து 24,188.68 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 8 புள்ளிகள் உயர்ந்து நிஃப்டி 24196.40 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக நிஃப்டி 24,196.45 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக நிஃப்டி 23,976.00 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 183.90 புள்ளிகள் சரிந்து நிஃப்டி 24,004.75 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஏற்றம் கண்ட பங்குகள்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், இந்துஸ்தான் யுனிலிவர், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசுகி, கோடக் மஹிந்திரா பேங்க், என்.டி.பி.சி., டைட்டன், பவர் கிரிட் கார்ப், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பின்செர்வ், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், இந்துஸ்இண்ட் பேங்க் பங்குகள் ஏற்றம் கண்டன.
வீழ்ச்சி கண்ட பங்குகள்
டெக் மஹிந்திரா, ஆசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், சொமேட்டோ, ஆக்சிஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, சன் பார்மாசெயுட்டிகள், எல் அண்டு டி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், ஹெச்.டி.டிஃப்.சி பேங்க், டி.சி.எஸ். பங்குகள் சரிவை சந்தித்தன.
இந்தியா ரூபாய் மதிப்பும் குறைவு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 பைசா வீழ்ச்சியடைந்து 85.73 ரூபாயக உள்ளது.
- ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், டைட்டன் ஆகிய இரண்டு நிறுவன பங்குகள் சற்று ஏற்றம் கண்டன.
- மும்பை பங்குச் சந்தையின் முக்கியமான 28 நிறுவன பங்குகள் இன்று சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 1,258.12 புள்ளிகள் குறைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 79,223.11 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று காலை 58 புள்ளிகள் உயர்ந்து 79,281.65 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்த பட்சமாக 77,781.62 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 79,532.67 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக 1,258.12 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 77964.99 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டியும் இன்று 388.70 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை 24,004.75 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

இன்று காலை நிஃப்டி 41 புள்ளிகள் உயர்நது 24,045.80 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிக பட்சமாக 24,089.95 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 23,551.90 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 338.70 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 23616.05 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.
ஏற்றம் கண்ட பங்குகள்
30 பங்குகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் மும்பை பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், டைட்டன் ஆகிய இரண்டு நிறுவன பங்குகள் மட்டுமே சற்று ஏற்றம் கண்டன.
வீழ்ச்சி கண்ட பங்குகள்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், இந்துஸ்தான் யுனிலிவர், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசுகி, கோடக் மஹிந்திரா பேங்க், என்.டி.பி.சி., டைட்டன், பவர் கிரிட் கார்ப், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பின்செர்வ், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், இந்துஸ்இண்ட் பேங்க் டெக் மஹிந்திரா, ஆசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், சொமேட்டோ, ஆக்சிஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, சன் பார்மாசெயுட்டிகள், எல் அண்டு டி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், ஹெச்.டி.டிஃப்.சி பேங்க், டி.சி.எஸ். ஆகிய 28 நிறுவுன பங்குகள் சரிவை சந்தித்தன.
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் 3 பைசா வீழ்ச்சி கண்டு இது வரை இல்லாத அளவிற்கு 85.82 ரூபாயாக அதிகரித்துள்ளது.
- டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, டெக் மஹிந்திரா பங்குகள் சரிவு.
- ரிலையன்ஸ், நெஸ்லே, ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிட், சொமேட்டோ பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்று 77,042.82 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 77,069.19 புள்ளிகளில் வர்த்தம் தொடங்கியது. அதன்பின் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இறுதியாக 423.49 புள்ளிகள் சரிந்து 76,619.33 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று அதிகபட்சமாக 77,069.19 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 76,263.29 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
நிஃப்டி
அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டியும் இன்று 108.60 புள்ளிகள் குறைந்த வர்த்தகம் நிறைவடைந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 23,311.80 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் இன்று காலை
23,277.10 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 23,292.10 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 23,100.35 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 108.60 புள்ளிகள் சரிந்து 23,203.20 புள்ளிகளில் வர்த்தகமானது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேறுதல், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய பங்குச் சந்தை சரிவை கண்டு வருவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்போசிஸ் நேற்று 3-வது காலாண்டில் வருவாய் 11.46 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையிலும் அதன் பங்கு 6 சதவீதம் சரிந்துள்ளது.
ஐ.டி. பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருவது இன்றைய மார்க்கெட் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
வீழ்ச்சி கண்ட பங்குகள்
ஆக்சிஸ் வங்கியின் பங்கு 4 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது. கோடக் மஹேந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் பஜாஜ் பின்சர்வ் ஆகிய பங்குகளில் பெரிய சரிவை சந்தித்துள்ளன.
உயர்வை சந்தித்த பங்குகள்
டிசம்பர் மாதம் காலாண்டில் நிகர லாபம் 7.4 சதவீதம் என அறிவித்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்கு 2.50 சதவீதம் உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ், நெஸ்லே, ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிட், சொமேட்டோ பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
- மாருதி சுசுகி, இந்துஸ்தான் யுனிலிவர், சொமேட்டோ, நெஸ்லே இந்தியா, ஐடிசி ஹோட்டல் பங்குகள் சரிவை எதிர்கொண்டன.
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் இன்று மிகப்பெரிய அளவில் ஒரே நாளில் 1,397.07 புள்ளிகள் உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தை நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 77,186.74 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இன்று காலை சென்செக்ஸ் 77,687 புள்ளிகளில் மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியது. வர்த்தகம் சுமார் 500 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது. அதன்பின் உயர்வதும், இறங்குவதுமாக இருந்தது. காலை 11 மணியவில் 77,402.37 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இதுதான் இன்றைய குறைந்தபட்ச வர்த்தகமாகும்.
அதன்பின் ஜெட்வேகத்தில் வர்த்தகம் உயர்ந்துகொண்டே சென்றது. இறுதியாக சென்செக்ஸ் 78,583.81 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,397.07 புள்ளிகள் உயர்ந்து.
அதேபோல் இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டியும் 378.20 புள்ளிகள் உயர்ந்தது. நேற்று 23,361.05 புள்ளிகளில் இந்திய பங்குச் சந்தை நிறைவடைந்தது. இன்று காலை 23,509.90 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. சுமார் 248 புள்ளிகளில் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

இந்திய பங்குச் சந்தை நிஃப்டி இன்று குறைந்த பட்சமாக 23423.15 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23762.75 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 378.20 புள்ளிகள் உயர்ந்து 23,739.25 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
டொனால்டு டிரம்பின் கூடுதல் வரி விதிப்பு உத்தரவு காரணமாக நேற்று தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை சரிவை சந்தித்தன. பின்னர் மெக்சிகோ, கனடா மீதான கூடுதல் வரியை டொனால்டு டிரம்ப் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதனால் தேசிய மற்றும் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.
தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,397.07 புள்ளிகள் உயர்ந்தாலும், மாருதி சுசுகி, இந்துஸ்தான் யுனிலிவர், சொமேட்டோ, நெஸ்லே இந்தியா, ஐடிசி ஹோட்டல் பங்குகள் சரிவை எதிர்கொண்டன.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
- பிப்ரவரி மாதத்தில் 8 நாட்கள் பங்குச் சந்தை சரிவை எதிர்கொண்டுள்ளது.
- சென்செக்ஸ் 2,644.60 புள்ளிகளும், நிஃப்டி 810 புள்ளிகள் சரிந்துள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி சரிவை சந்தித்து வருகின்றன.
குறிப்பாக இந்த மாதம் (பிப்ரவரி) இதுவரை, பங்குச் சந்தைகள் செயல்பட்ட 11 நாட்களில் 8 நாட்கள் சென்செக்ஸ், நிஃப்டி சரிவை சந்தித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேறுவது, கார்ப்பரேட் நிறுவனங்களின் 3-வது காலாண்டு வருமான அறிக்கை முக்கிய காரணம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 199.76 புள்ளிகள் சரிந்து 75,939.21 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 0.26 சதவீதம் சரிவு ஆகும். இன்று காலை வர்த்தகத்தின்போது 699.33 புள்ளிகள் குறைந்து 75,439.64 புள்ளிகளில் வர்த்தகமானது. அதன்பின் சுமார் 500 புள்ளிகள் உயர்ந்து 199.76 புள்ளிகள் சரிவில் வர்த்தகம் முடிவடைந்தது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 102.15 புள்ளிகள் 22,929.25 புள்ளிகளில் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் 8 நாட்களில் 2,644.6 புள்ளிகள் சரிந்துள்ளது. இது மொத்த புள்ளிகளில் 3.36 சதவீதம் ஆகும். நிஃப்டி 810 புள்ளிகள் சரிந்துள்ளன. இது 3.41 சதவீதம் ஆகும்.
30 பங்குகளை அடிப்படையாக கொண்ட மும்பை பங்குச் சந்தையில் அதானி போர்ட்ஸ் பங்கு 4 சதவீதத்திற்கு மேல் சரிவை சந்தித்தது. அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், சன் பார்மா, இந்துஸ்இண்ட் பேங்க், என்டிபிசி, டாடா ஸ்டீல் நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.
நெஸ்லே, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெ.சி.எல்.டெக் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
இன்றைய ஆசிய பங்குச் சந்தைகளில் டோக்கியோ பங்குச் சந்தை சரிவில் முடிவடைந்தது. சியோல், ஷாங்காய், ஹாங் காங் பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்தன.
அந்நிய முதலீட்டாளர்கள் நேற்றைய வர்த்தகத்தில் 2789.91 கோடி ரூபாய் மமதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
- இன்றைய நாளின் தொடக்கத்தில் சரிவுடன் காணப்பட்டது.
- தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 38.60 புள்ளிகள் அதிகரித்தது.
பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று (புதன் கிழமை) காலை சரிவுடன் தொடங்கியது. எனினும், புளூ சிப் பேங்க் பங்குகள் மற்றும் சர்வதேச நிதி வரத்து காரணமாக உயர்ந்து காணப்பட்டன.
மும்பை பங்குச் சந்தை குறியீடான பி.எஸ்.இ. சென்செக்ஸ் இன்று காலை 386.01 புள்ளிகள் சரிந்து 75,581.38 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. தேசிய குறியீடான நிஃப்டி 130.45 புள்ளிகள் சரிவடைந்து 22,814.85 ஆக இருந்தது.
இன்றைய நாளின் தொடக்கத்தில் சரிவுடன் காணப்பட்ட போதிலும், பி.எஸ்.இ. சென்செக்ஸ் 134.16 புள்ளிகள் அதிகரித்து 76,120.85 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 38.60 புள்ளிகள் அதிகரித்து 22,983.90 ஆகவும் உள்ளன.
சென்செக்ஸ்-இல் ஜொமாட்டோ, டாடா ஸ்டீல், என்.டி.பி.சி., இண்டஸ்இண்ட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோட்டக் மஹிந்திரா பேங்க், டைட்டன், ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
சன் ஃபார்மா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல். டெக், நெஸ்ட்லே மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்டவை சரிவுடன் காணப்பட்டன.