search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்"

    • படகுகளை விடுவிக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்பட குகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நேற்று அதிகலையில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு 5 ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

    இதனைதொடர்ந்து, அதே பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ரெஸ்மன், ஜஸ்டீன், கெரின் என்பவர்களுக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகளை சிறைபிடித்தனர். அதில் இருந்த 22 மீனவர்களை கைது செய்தனர். இதனைதொடர்ந்து, மூன்று படகுகளுடன் 22 மீனவர்களை காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    மூன்று படகுகள் பறிமு தல் செய்யப்பட்ட நிலையில் 22 மீனவர்களை நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழங்கு பதிவு செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி விசாரனைக்கு பின் ஜூலை 5-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ராமேசுவரத்தில் இருந்து தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்க சென்ற நிலையில் 22 மீனவர்கள் மூன்று விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன் கைது நடவடிக்கையை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

    மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுருத்தி திங்கட்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர். இதில், 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    ×