என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆந்திரா மாநிலம்"
- பக்தர் ஒருவர் சேவல் ஒன்றை கோவிலுக்கு கொண்டு வந்திருந்தார்.
- அலங்கரிக்கப்பட்ட சேவலை கோவிலில் காணிக்கையாக அளித்தார்.
ஆந்திரா மாநிலம் மகபூபாத் மாவட்டம் கேசமுத்திரம் பகுதியில் பழமை வாய்ந்த முத்தியாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடு, கோழி, சேவல் உள்ளிட்டவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவர் சேவல் ஒன்றை கோவிலுக்கு கொண்டு வந்திருந்தார்.
அந்த சேவலுக்கு ஜிமிக்கி போட்டு சிங்காரித்திருந்தார். இறக்கைகளை வண்ணம் தீட்டி அலங்கரித்து பூ சூட்டி கொண்டு வந்திருந்தார். அலங்கரிக்கப்பட்ட சேவலை கோவிலில் காணிக்கையாக அளித்தார். இதனை கண்ட பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர்.
சேவலை அலங்கரித்து காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தேன். அதன்படி வேண்டுதலை நிறைவேற்றினேன் என அவர் தெரிவித்தார்.
- வாராஹி தீக்ஷையின் விதிகளை நிறைவேற்றுவது கடினம்.
- கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பவன் கல்யாண் வாராஹி தேவியை வழிபட்டார்.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண், சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து, அம்மாநில துணை முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், அவர் தனது மாநில மக்களின் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நலனுக்காக, நேற்று முதல் தொடங்கி 11 நாட்கள் நீடிக்கும் வாராஹி தீக்ஷை விரதம் மேற்கொள்கிறார்.
இதில் வாராஹி அம்மனை வழிபடும் பவன் கல்யாண் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இந்த வாராஹி தீக்ஷையின் விதிகளை நிறைவேற்றுவது கடினம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பவன் கல்யாண் வாராஹி தேவியை வழிபட்டார். அதனுடன், அவர் வாராஹி விஜய யாத்திரையைத் தொடங்கி தீட்சை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்