search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் இடமாற்றம்"

    • 8 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்கள் உள்ளன. கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில் கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, கே.ஆர்.பி. டேம், மகராஜகடை, காவேரிப்பட்டணம், குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி ஆகிய 7 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    ஓசூர் உட்கோட்டத்தில் ஓசூர் டவுன், அட்கோ, சிப்காட், மத்திகிரி, பாகலூர், பேரிகை, சூளகிரி, நல்லூர் ஆகிய 8 போலீஸ் நிலையங்கள் உள்ளன. தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் ஆகிய 6 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    இதேபோல பர்கூர் உட்கோட்டத்தில் பர்கூர், கந்திகுப்பம், பாரூர், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி ஆகிய 5 போலீஸ் நிலையங்களும், ஊத்தங்கரை உட்கோட்டத்தில் ஊத்தங்கரை, கல்லாவி, சாமல்பட்டி, சிங்காரப்பேட்டை, மத்தூர் ஆகிய 5 போலீஸ் நிலையங்களும் உள்ளன.

    இதைத் தவிர ஓசூரில் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் அலுவலகமும், ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, பர்கூரில் தலா ஒரு மகளிர் போலீஸ் நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில், மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாரில் 206 பேர் இடமாற்றம் செய்யப்பட்டள்ளனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு, போலீஸ் என பல நிலைகளில் பணியாற்ற கூடிய போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டள்ளனர்.

    இதில் பலர் உட்கோட்டத்திற்குள் உள்ள போலீஸ் நிலையங்களிலும், சிலர் உட்கோட்டம் விட்டு மற்றொரு உட்கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பிறப்பித்துள்ளார்.

    இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, போலீசார் பலர் தங்களின் குடும்ப சூழ்நிலை கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இடமாறுதல் கோரி, விண்ணப்பித்த கோரிக்கை மனுக்களின் அடிப்படையிலும், நிர்வாக காரணங்களுக்காகவும் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இடமாற்ற உத்தரவு வழக்கமான நடைமுறை தான் என்றும் தெரிவித்தனர்.

    • மணிகண்டன் போலீஸ் நிலையத்திலிருந்து திடீரென தப்பி ஓடிவிட்டார்.
    • கரும்பு தோட்டத்தை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்து இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே கள்ளச்சாராயத்தை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் வியபாரம் செய்வோர் மற்றும் அதனை கடத்துபவர்களை உடனடியாககைது செய்ய வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜித் சதுர்வேதி உத்தரவிட்டிருந்தார்

    இதனை தொடர்ந்து போலீசார் இதுவரை சுமார் 86 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் (வயது42) என்பவரை சங்கராபுரம் போலீசார் கள்ளச்சாராய வழக்கில் அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் போலீஸ் நிலையத்திலிருந்து திடீரென தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த தகவல் வெளியானதால் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே தப்பிஓடிய கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியிருக்காலம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்து, போலீசார், கரும்பு தோட்டத்தை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டனை தப்பவிட்ட சங்கராபுரம் போலீசார் 3 பேரை உடனடியாக ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜித் சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார்.

    ×