என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடல்"

    • பயனர்கள் இனி ஐ- போனில் உள்ள பேட்டரியை எளிதில கழற்றி மாட்டும் வசதியை ஏற்படுத்த ஐ- போன் திட்டமிட்டுள்ளது.
    • இந்த புதிய மாற்றம் வரும் செப்டம்பர் மாதம் புதிதாக வெளியாகவுள்ள ஐ - போன் 16 மாடலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.

    மொபைல் போன்களின் உலகில் தனக்கென தனி சந்தையை உருவாக்கி வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம் தங்களது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. பயனர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை ஏற்படுத்தி வரும் ஆப்பிள் தற்போது புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    அதாவது, பயனர்கள் இனி ஐ-போனில் உள்ள பேட்டரியை எளிதில கழற்றி மாட்டும் வசதியை ஏற்படுத்த ஐ- போன் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே போன்களில் உள்ள கழற்றி மாட்டும் ஸ்டிரிப் மாடலை நீக்கிவிட்டு மின்சார அதிர்ச்சி மூலம் கழலும் ஸ்டிரிப்களை பொறுத்த உள்ளது ஆப்பிள்.

     

    இந்த புதிய மாற்றம் வரும் செப்டம்பர் மாதம் புதிதாக வெளியாகவுள்ள ஐ-போன் 16 மாடலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம். மேலும் இந்த புதிய ஐ-போனின் டிசைன், சிப்செட் என அனைத்தும் புதிய வடிவமைப்புடன் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

     

    • து அருந்துபவர்கள் ஒயினின் சுவைக்காக எவ்வளவு விலைக் கொடுத்தும் வாங்கி அருந்துகின்றனர்.
    • ஒவ்வொரு பாட்டிலிலும் எனது பாதத்தின் ஒரு சிறிய பகுதி உள்ளது.

    உலகெங்கிலும் உள்ள மது பிரியர்களுக்கு விருப்பப்படும் பானமாக ஒயின் உள்ளது. மது அருந்துபவர்கள் ஒயினின் சுவைக்காக எவ்வளவு விலைக் கொடுத்தும் வாங்கி அருந்துகின்றனர்.

    இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 30 வயதான எமிலி ரே என்ற மாடல் தனது கால்களால் நசுக்கப்பட்ட திராட்சைகளால செய்யப்பட்ட ஒயின் சுவையை பலர் விரும்புவதாகக் கூறியுள்ளார். எமிலி கால் மாடலாக புகழ் பெற்றவர். எமிலி வெறும் கால்களால் திராட்சை பழங்களை நசுக்கி அதில் மது மது தயாரிக்கிறார். சொந்தமாக ஒரு ஒயின் பிராண்டை ஆரம்பித்து அதற்கு சிம்ப் ஒயின் என்றும் பெயரிட்டுள்ளார்.

     இந்நிலையில் கூட்டு ஒயின் திட்டத்திற்காக ரெனிகேட் அர்பன் வைனரி என்ற லண்டனை தளத்தை ஒயின் தயாரிக்கும் மாடல் எமிலி தொடர்பு கொண்டார். அவர் சமீபத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பு மதுவை அறிமுகத்தியுள்ளார். திராட்சைகளை தனது கால்களால் நசுக்கி தயாரிக்கப்படுகிறது. அந்த ஒயின் ஒரு பாட்டிலின் விலை சுமார் 100 பவுண்டுகள் (தோராயமாக ரூ. 10,662). என்று தெரிவித்துள்ளார்.

    "ஒவ்வொரு பாட்டிலிலும் எனது பாதத்தின் ஒரு சிறிய பகுதி உள்ளது, அதைத்தான் கால் ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.

    • கொல்கத்தாவை சேர்ந்த பிரபல ஃபேஷன் புகைப்படக் கலைஞர் தகதா கோஷ்.
    • பயந்துபோன அந்த பெண் நிர்வாண படப்பிடிப்பிற்கு ஒப்புக்கொண்டாள்.

     மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பிரபல ஃபேஷன் புகைப்படக் கலைஞர் தகதா கோஷ். இவரின் குழுவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் என கூறி இரண்டு மோசடி பேர்வழிகள் இளம் பெண்களை ஏமாற்றி வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    போலி சமூக ஊடக கணக்குகளை தொடங்கி பிரதிக் பால் (37) மற்றும் தபன் பால் ஆகிய இருவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த கணக்குகள் மூலம் மாடல் ஆக விரும்பும் பெண்களை போட்டோஷூட்கள் நடத்துவதாகவும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டி ஸ்டுடியோவிற்கு வரவழைத்து நிர்வாண புகைப்படங்கள் எடுத்து பின்னர் வன்கொடுமை செய்துள்ளனர்.

    22 மற்றும் 25 வயதுடைய இரண்டு பெண்கள் தாங்கள் ஏமாற்றப்ட்டை உணர்ந்து தற்போது முன்வந்து புகார் அளித்ததால் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் புகைப்படக்கலைஞர் தகதா கோஷ் நம்பரை கண்டுபிடித்து அவருக்கு போன் செய்து தங்களுக்கு நடந்தது பற்றி கூறியுள்ளனர்.

    அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு போலீஸ் நிலையம் சென்று தகதா கோஷ், தனது பெயரில் நடந்த மோசடி குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குற்றவாளி பிரதிக் பால் போலீசாரால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டான். தலைமறைவான மற்றொரு குற்றவாளி தபன் பால் தேடப்பட்டு வருகிறான்.

    இதுகுறித்து போலீஸ் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்தப் பெண்களை ஆடிஷன்களுக்கு அழைத்துள்ளனர். முதல் பெண் மே-ஜூன் மாதங்களில் மத்தியம்கிராம் ஸ்டுடியோவிற்கு வந்தார். முதலில், ஒரு சாதாரண போட்டோஷூட் நடந்தது.

    பின்னர், நிர்வாண போட்டோஷூட்கு வற்புறுத்தி உள்ளனர். அந்தப் பெண் மறுத்ததால், தனது மாடலிங் கனவை மறந்துவிடுமாறு அவளை  மிரட்டியுள்ளனர். பயந்துபோன அந்த பெண் நிர்வாண படப்பிடிப்பிற்கு ஒப்புக்கொண்டாள். அப்போதுஇரண்டு ஆண்களும் அவளை பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்தச் செயலைப் படம்பிடித்தும் உள்ளனர்.

    மாடலின் வாய்ப்புகளை எதிர்பார்த்து அந்த பெண் அமைதியாக இருந்தாள். ஆனால் அப்படி எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்துள்ளார். இரண்டாவது பெண் கடந்த அக்டோபரில் இதேபோன்ற முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் பல பெண்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் போலீசார் தெரிவிக்கின்றனர்.

    ×