என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாஞ்சோலை விவகாரம்"

    • ஐ.ஏ.எஸ். படித்தவர் தொழிலாளர்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார்.
    • தேவைப்பட்டால் கலெக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாஞ்சோலையில் 16 மணி நேர வேலை, குடியிருப்புகளை பழுது பார்க்காதது உள்ளிட்ட 20 பிரச்சனைகளை முன்நிறுத்தி கடந்த 1997-ம் ஆண்டு புதிய தமிழகம் போராட்டம் நடத்தியது.

    மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 6 தலைமுறையாக 1929-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்கள் தாங்களாகவே முன்வந்து விருப்ப ஓய்வு பெறுவதாகவும், கடந்த 15-ந்தேதி முதல் பணிநிறைவு பெற்று விட்டதாகவும், அடுத்த மாதம் 7-ந்தேதிக்குள் வீடுகளை காலி செய்யவும் அந்த தனியார் நிறுவனம் தவறான செயலை செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

    மாஞ்சோலையை விட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 45 நாட்களில் வெளியேற வேண்டும் என தனியார் நிறுவனம் நிர்பந்தப்படுத்தி உள்ளது. தொழிலாளர்கள் தங்களை வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறி இதுகுறித்து புகார் தெரிவிக்க மாவட்ட கலெக்டரிடம் சென்றனர். ஆனால் அவர் அவர்களை உதாசீனப்படுத்தி உள்ளார்.

    முதலமைச்சர் மக்களின் எல்லா பிரச்சனைகளையும் நேரடியாக பார்க்க முடியாது. முதலமைச்சருக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பாக இருக்க கூடியவர் கலெக்டர்தான். ஆனால் அவரே தொழிலாளர்களை உதாசீனப்படுத்தியது தவறு.

    ஐ.ஏ.எஸ். படித்தவர் தொழிலாளர்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார். பேசி முடிக்க வேண்டிய செயலை பிரச்சனையாக்கி உள்ளார். எனவே மாஞ்சோலை விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும். தேவைப்பட்டால் கலெக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் தொழிலார்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்காத போது அவர்களிடம் தனித்தனியாக பேசி கடிதம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான தனியார் நிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளைஞர்களுக்கு திறன் பயிற்சியும், அதற்கேற்ற வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
    • இலவச வீட்டு மனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை.

    மாவட்ட ஆட்சியர் மற்றும் புலிகள் காப்பக துணை இயக்குநர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    ▪️ தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ பணிப் பலன்கள், மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவற்றை முறையாக பெற்று வழங்க அரசு நடவடிக்கை.

    ▪️ மணிமுத்தாறு அருகே அரசு சார்பில் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள 240 வீடுகளை தொழிலாளர்களுக்கு வழங்க அரசு தயராக உள்ளது. இலவச வீட்டு மனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை.

    ▪️ ₹11.54 லட்சம் மதிப்பு கொண்ட ஒரு வீட்டுக்கு அரசு ₹8.5 லட்சம் மானியமாக வழங்குகிறது. மீதம் ₹3.04 லட்சத்தை மட்டும் பயனாளிகள் செலுத்த வேண்டும். கூடுதல் மானியம் அளித்து வீடுகளை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

    ▪️ 55 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் மற்றும் நீட்ஸ் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் ஏற்பாடு செய்ய அரசு தயார்.

    ▪️ இளைஞர்களுக்கு திறன் பயிற்சியும், அதற்கேற்ற வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

    ▪️ சிறு கால்நடைப் பண்ணை அமைக்க அல்லது கறவை மாடுகள், ஆடுகள் வாங்கிட வட்டியில்லாத கடன் வழங்க நடவடிக்கை.

    ▪️ குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி பாதிக்காத வகையில் அவர்கள் விரும்பிய பள்ளியில் சேர்க்கவும், விடுதிகளில் தங்க வைத்து படிக்க வைக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

    ▪️ தொழிலாளர்களின் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை அவர்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றி வழங்க ஒற்றைச் சாரள முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

    ▪️ தொழிலாளர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவும் 'பர்மா பாம்பே டிரேடிங் கம்பெனி' நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர்.

    நெல்லை:

    மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை நிர்வகித்து வந்த பாம்பே பர்மா நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடைய உள்ளதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக விசாரித்த ஐகோர்ட்டு, தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வரை அவர்களை மாஞ்சோலையில் இருந்து கீழே இறக்க கூடாது என்று உத்தரவிட்டது.

    இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடந்த மாதம் 20-ந்தேதி தேசிய மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி விஜய பாரதி சயானிடம் புகார் அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட மனித உரிமை ஆணையம் உடனடியாக தலைமை விசாரணை இயக்குனர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இந்த குழு மாஞ்சோலை பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை குழு அதிகாரிகளான ரவி சிங், யோகேந்திர குமார் திரிபாதி ஆகியோர் அடங்கிய குழு இன்று நெல்லை வந்துள்ளது. மொத்தம் 4 நாட்கள் நெல்லையில் முகாமிட்டு இந்த குழு விசாரிக்க உள்ளது. தொடக்க நாளான இன்று இந்த குழுவானது மாஞ்சோலைக்கு நேரில் சென்று மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மக்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து நாளையும் அந்த குழு மாஞ்சோலையில் விசாரணை நடத்துகிறது.

    அவர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர். பின்னர் பர்மா தேயிலை நிர்வாகத்திடம் ஆய்வுகளை மேற்கொண்டு, மாஞ்சோலையில் அமைந்துள்ள தொழிற்சாலை, தேயிலை தோட்டம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்கிறார்கள்.

    முன்னதாக இன்று காலை தொழிலாளர் துறையின் தோட்டங்கள் பிரிவின் உதவி ஆணையர் விக்டோரியா மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா ஆகியோருடனும் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    தொடர்ந்து மாஞ்சோலை தொடர்பான முழு விவரங்கள், அது தொடர்பான நீதிமன்ற வழக்குகள், அரசு எடுத்துள்ள மறுவாழ்வு நடவடிக்கைகள், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் விரிவாக கேட்டறிந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அம்பாசமுத்திரம் புலிகள் சரணாலய துணை இயக்குனர் இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் சுமார் 1½ மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.

    அவர்களிடம் மாஞ்சோலை தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் அடங்கிய 1,125 பக்க அறிக்கையை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.

    • மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமத்துவபுரம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தை நடவடிக்கை எடுக்க கூறியிருக்கிறேன்.
    • நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டு அனைத்து தேவையான எல்லா வசதிகளும் நிறைவேற்றப்படும்.

    நெல்லை:

    நெல்லைக்கு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு நேற்று இரவு நெல்லை வந்தார்.

    தொடர்ந்து இன்று காலை மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கு வழி கேட்டு மனு அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட அமைச்சர் நேரு அவர்களுக்கு பல்வேறு உறுதியினை அளித்தார்.

    நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தற்போது மாஞ்சோலை மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வந்திருக்கிறோம். தமிழக அரசு மாஞ்சோலை எஸ்டேட் பகுதி மக்களுக்கான 11 வகையான சிறப்பு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே 4 குடும்பத்தினருக்கு வீடு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள சிலருக்கு நெல்லை மாநகர பகுதியில் ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடு கொடுக்கிறோம்.

    மக்கள் கேட்கும் இடத்தில் முதலமைச்சர் அனுமதி பெற்று கலைஞர் வீடுகட்டும் திட்டத்தில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டும் இல்லாமல் இங்கு உள்ள மக்கள் அனைவரும் ஒரே பகுதியில் இருக்கும் வகையில் சமத்துவபுரம் அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.

    மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமத்துவபுரம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தை நடவடிக்கை எடுக்க கூறியிருக்கிறேன். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தனியார் எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து கூடுதல் நிதி பெற்று தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்திற்கு முதலமைச்சர் வரும்போது அதற்கென ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்து இருக்கிறேன். மாஞ்சோலை மக்களுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து உதவியும் செய்யப்படும். மேலும் ஒரு சில மக்கள் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு கிடைக்கவில்லை என கோரிக்கை வைத்துள்ளனர். தகுதி உள்ளவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டு அனைத்து தேவையான எல்லா வசதிகளும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அதிகாரி சுகன்யா, உதவி கலெக்டர் அம்பிகா ஜெயின், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை வனக்கோட்ட துணை இயக்குனர் இளையராஜா, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணை தலைவர் இசக்கி பாண்டி, யூனியன் சேர்மன் பரணி சேகர், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி மற்றும் பலர் கலந்த கொண்டனர்.

    • மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பணப் பலன்களை வழங்க வேண்டும்,.
    • உயர்நீதிமன்ற உத்தரவு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மேல்முறையீடு செய்திருந்தார்.

    மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை நிர்வகித்து வந்த பாம்பே பர்மா நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடைய உள்ளதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உட்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை கடந்தாண்டு டிசம்பர் 3 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்தக்கோரிய அனைத்து வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    மேலும், மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பணப் பலன்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தக் கோரிய கிருஷ்ணசாமியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    ×