search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டம்-ஒழுங்கு பிரச்சனை"

    • சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம்.
    • தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சென்னை:

    தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, மின் கட்டண உயரவை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை தமிழக அரசு சரி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.

    • 2 நாட்களுக்கு முன்பு திடீரென டெல்லி சென்றிருந்தார்.
    • சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென டெல்லி சென்றிருந்தார்.

    டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய கல்வித் துறை மந்திரி தர்மேந்திர பிரதான், பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ ஆகியோரை சந்தித்து பேசினார்.

    அப்போது தமிழ்நாட்டு நலன் சார்ந்த விஷயங்கள் குறித்தும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவங்கள், ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட பல்வேறு விஷ யங்கள் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் அவர் எடுத்துக் கூறியதாக தெரிகிறது. மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியதாக தெரிகிறது.

    இந்த மாதத்துடன் கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் முடிவடைவதால் அது குறித்தும் பிரதமரிடம் அவர் பேசியிருப்பார் என தெரிகிறது.

    டெல்லியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி இன்று இரவு சென்னை திரும்புகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம்.
    • துண்டுப்பிரசுரத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.

    மதுரை:

    தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

    அதேபோல் இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்த நல்லூர் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர கொடிக்கம்பம் திறப்பு விழா மற்றும் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தந்தார்.

    விமான நிலையத்தில் மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் முன் னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் புடை சூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் விரும்பத்தகாத செயலாக தொடர்ந்து அரங்கேறி வரும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் குறித்து பிரசாரம் செய்யும் வகையில் துண்டுப் பிரசுரங்களை எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடம் வழங்கினார்.

    அந்த துண்டு பிரசுரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்ட மாதங்கள், அதில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. மேலும் போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் அச்சிடப் பட்டு இருந்தது. 

    ×