search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்னிப்பு கடிதம்"

    • சசிகலாவின் செயல்பாட்டை வரவேற்கிறேன்.
    • மாங்கனிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவ்வாறு கேட்பதற்கு அவர் யார்? என்னிடம் மன்னிப்பு கடிதம் கேட்பதற்கு அவருக்கு எந்த உரிமம் கிடையாது. 90 சதவீதம் தொண்டர்களை இணைத்து விட்டோம் என சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலாவின் இந்த செயல்பாட்டை வரவேற்கிறேன்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் போட்டியிடவில்லை. அதனால் இரட்டை இலையுடன் மாங்கனி உள்ளது. மாங்கனிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

    பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் மட்டுமே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு விரைந்து சரி செய்ய வேண்டும். சட்டம்-ஒழுங்கை சரி செய்ய தவறினால் தி.மு.க. அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அவருடன் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி எம்.எல்.எ. அய்யப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×